"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, November 18, 2009

பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின்
விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது;

விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என,
முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்


நிதானம், பொறுமை என்ற வார்த்தைகளின் பொருள் தெரியாதவராக இருந்திருக்கிறார் பிரபாகரன்.

காலம், விஞ்ஞானமும் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், எவ்வளவு அதிமுக்கிய முல்லைப்பெரியார், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஈழத்தமிழர் மீதான தாக்குதலின்போதும் பொறுமையாகவும், அவசரமின்றியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கலஞைர் காத்திருக்கவில்லையா?

தமிழ் ஈழம் என்பது தமிழக மத்திய மந்திரி பதவியைவிட உயர்ந்ததா, நேரில்  சென்று தங்கி வாங்கிவர..?

கலைஞரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடும், சுகமாக இருந்திருக்கலாம், பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

8 comments:

  1. தமிழ் ஈழம் என்பது தமிழக மத்திய மந்திரி பதவியைவிட உயர்ந்ததா, நேரில் சென்று தங்கி வாங்கிவர..?

    சிவா நீங்கள் சொன்னது முழுக்க உண்மை என்றாலும் கொதித்து எழுந்த நான் எழுதிய கதவை திற காற்று வரட்டும் என்பதையும் படித்துப் பாருங்கள். அதில் உள்ள மூன்று விசயங்களில்இரண்டு விசயங்ளை தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பார் போல்.

    இது நானே என் பீப்பியை ஊதுவது அல்ல.

    ஆயிரம் தவறுகள் கலைஞர் மேல் உண்டு என்றால் ஆயிரத்தொரு தவறுகள்?

    ReplyDelete
  2. கொத்துக்கொத்தாக தமிழர்களை இலங்கைக்கொடூரன் கொன்றழித்தபோது மௌனமாக அழுகாமல், வாய்விட்டு அழுதாதாரா இந்த கருனாநிதி?

    ReplyDelete
  3. கொத்துக்கொத்தாக தமிழர்களை இலங்கைக்கொடூரன் கொன்றழித்தபோது மௌனமாக அழுகாமல், வாய்விட்டு அழுதாதாரா இந்த கருனாநிதி? இல்லை முகாமுக்குள் மிருகங்களை விட கேவலமான நிலையில் நடத்தப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்று தெரியாமல் நடைப்பினம் போல வாழ்ந்து செத்துக்கொண்டிருப்பதை பார்த்து சுவற்றில் முட்டி கொண்டு அழுதாரா?

    ReplyDelete
  4. lol nice mr.karunanithi thanathu raja thanthirathai arasiyalil matrum kaattattu.
    arasiyalil ulla rthirikalai azhikka payan padatum . matrpadi appavi eezha thamilarkalil mel kaatta vendam , avarkal ungaluku killu keeraikal alla, nallathu nandraaga ullathu unkal idukai nanbare

    ReplyDelete
  5. ஒருவேளை அவரு ,
    " நான் மூட்டு வலியால் அழுவது யாருக்கு தெரியபோகுது " என்று புலம்பியதை அல்லகைகள் அறிக்கையாய் தயார் பண்ணிட்டாங்களோ ?

    ReplyDelete
  6. எவ்வளவு நாள் பொறுமை இருக்க ....................அனைத்து குழந்தையும் சாகும் வரையா இல்லை ஸ்டாலின் முதல்வர் ஆகும் வரையா

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)