"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label கலைஞர் கருணாநிதி. Show all posts
Showing posts with label கலைஞர் கருணாநிதி. Show all posts

Tuesday, September 14, 2010

பன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...

ஏன் வருத்தம்? தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியாவசியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.

Saturday, January 16, 2010

இப்ப என்ன ஆகிப் போச்சுங்கிறீங்க !!

"மத்திய தணிக்கைக் குழு அறிக்கையில், அரசு நிதியை, தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் எனக் குறிப்பிடப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:மத்திய தணிக்கைக் குழு அளித்த அறிக்கையில், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட, 121 கோடி ரூபாய், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


தவறான வழிகளில் செலவழித்து விட்டோம் என்று கூறவில்லை. இந்த செலவழிப்பு முரண்பாடானதோ, தவறானதோ அல்ல.

அரசு நிதியை தவறான வழியில் செலவழிக்கவில்லை, தணிக்கை குழு அறிக்கை குறித்து முதல்வர் தகவல்

இனி வருங்காலத்தில் இதோ போல் எல்லா நிதிகளும் செலவழிக்கப்படும் என்பதற்கான திமிர்த்தனமான பதில், எதிர்பார்த்ததுதான்.

மக்களை பிச்சைக்காரனாகவே, இலவசங்களை கொடுத்து, பதவி, பணம், புகழ் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெற வேண்டும் என்கிற தெளிவான நோக்கத்துடன் இருக்கும் தானைத்தலைவர் கலைஞர் வாழ்க

தமிழன் என்ற பெருமையே நம்மை வாழ வைத்துவிடும் என வாய்சவாடல் இட்டுக்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொலைநோக்கோடு அடிப்படைவசதிகளான மின்சாரம், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக ஏதேனும் புதிய அணை கட்டுதல், போன்றவை பற்றி சிந்திப்பது கூட இல்லை,

அண்டை மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு அணை கட்டுவதைப் பார்த்தால் சற்றே பொறாமையாக இருந்தாலும் நமது நிலையை எண்ணி உள்ளூர வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.

டிஸ்கி இது முந்தய பதிவின் தொடர்ச்சி

Wednesday, August 12, 2009

திருந்திய கலைஞரும், நானும்


சென்னை:""இந்திய அரசியலின் ஜாதகத்தை கணிக்கக் கூடிய அளவில் தி.மு.க., வெகு விரைவில் இடம்பெறும்,'' என முதல்வர் கருணாநிதி கூறினார். தினமலர்-12/08/09

ஜாதகம் பார்க்கும் சோதிடக் கலை நிபுணர்கள் இனி மனமகிழ்வு கொள்ளலாம். சோதிடம் இல்லை, மூடநம்பிக்கை என சொல்லும் 'பெரியார் வழி வந்தவர்கள் நாங்கள்' என தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர், சோதிடக்கலையில் ’இந்திய அரசியலின் ஜாதகத்தை’ கணிக்கும் நுட்பத்தை விரைவில் அறிமுகப்படுத்த போகிறார். அவரை உலகில் அளவில் பாராட்டிய முதல் நபர் என்ற பெருமையும், முடிந்தால் பட்டமும் எனக்கே சேர வேண்டும் என்பதை பின்னாளில் வேறு யாரும் பிரச்சினையாக்காமல் இருக்க இங்கே பதிவு செய்கிறேன்.

இலங்கை தமிழர்களின் ஜாதகத்தை மாற்றி எழுதியபோதே நான் சந்தேகப்பட்டேன். இவர் ஒரு தேர்ந்த சாமர்த்தியமான சோதிடக் கலை நிபுணர் ஆவார் என்று. சரி இனி எதிர்காலத்தில் கழக கண்மணிகள் எல்லாம் சோதிடக்கலையில் தேர்ந்து விடப்போவதால், எதற்கும் தற்சமயம் இத்தொழிலில் உள்ள அனைவரும் ஒன்று கழகத்தில் சேர்ந்து விடுங்கள், அல்லது வேறு தொழில் பார்ப்பது உத்தமம்.

இது குறித்து மேலும் நுட்பங்களை அறிய உள்ளூர் கழக, அல்லது வலையுலக கழக நண்பர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பெரியார் வழி வந்த தொண்டர்களுக்கு என் அனுதாபங்கள். என்ன கலைஞர் இருந்தால் அவ்வப்போது, நெற்றியில் திருநீறு இடுவது மூடப்பழக்கம் என ஒரே நாளில் உலகத்தமிழர்களை எல்லாம் சென்று சேரும்படி கொள்கைகளை பரப்புவார். இனி ….


--அங்கலாய்ப்புடன்

புரியாத பொன்னுச்சாமி