"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Monday, November 23, 2009

நடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்

சிதம்பரம், நவ.23-
சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க. நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.


நன்றி தினமலர்-23-11-2009 கடைசிப்பக்க செய்தி

Wednesday, November 18, 2009

பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின்
விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது;

விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என,
முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்


நிதானம், பொறுமை என்ற வார்த்தைகளின் பொருள் தெரியாதவராக இருந்திருக்கிறார் பிரபாகரன்.

காலம், விஞ்ஞானமும் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், எவ்வளவு அதிமுக்கிய முல்லைப்பெரியார், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஈழத்தமிழர் மீதான தாக்குதலின்போதும் பொறுமையாகவும், அவசரமின்றியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கலஞைர் காத்திருக்கவில்லையா?

தமிழ் ஈழம் என்பது தமிழக மத்திய மந்திரி பதவியைவிட உயர்ந்ததா, நேரில்  சென்று தங்கி வாங்கிவர..?

கலைஞரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடும், சுகமாக இருந்திருக்கலாம், பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

Monday, May 11, 2009

தமிழ் இனத் தலைவர் கலைஞர் -- ஒரு குழந்தை

இன உணர்வு என்பது ஒருவகைத் தாய்மை உணர்வு. தான் பெற்ற பிள்ளை குடிகாரனாய், திருடனாய்,தறுதலையாய் எப்படி இருந்தாலும் எப்படி ஒரு தாய் தன் பிள்ளை மீது மாறாத பாசம் வைத்திருக்கிறாளோ அதைப் போன்ற உணர்வே ஓர் இனத்திற்குள் ஒருவருக்கொருவர் கொள்ளவேண்டியதே இன உணர்வு.

தன் இனத்தான் முட்டாளாய் இருந்தாலும், துரோகியாய் மாறினாலும், ஏழையாய் இருந்தாலும், எதிரியுடன் சேர்ந்து கொண்டாலும் அவன் மீது வெறுப்புக் கொள்ளாமல் அவன் உயர்வுக்காக எண்ணுவதும், எழுதுவதும், அதற்கேற்றபடி செயல்படுவதும் இன உணர்வு உள்ளவர்களுடைய கடமை. அப்படித்தான் நம் முன்னோர்கள் உழைத்திருக்கிறார்கள்.

தமிழர்கள் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிந்து கிடப்பது உண்மைதான். அதை ஒரு பலவீனமாய்க் கருதவேண்டிய தேவை இல்லை.
ஏனெனில் ஆடு, மாடுகள்தான் மந்தை மந்தையாய்ச் சேர்ந்திருக்கும். சிங்கங்கள் தனித்தனியாய்ப் பிரிந்துதான் இருக்கும். அதில் தவறேதுமில்லை. ஆனால் தேவை ஏற்படும்போது எல்லா வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேரும் ‘துப்பு’ வேண்டும். அதை மட்டும் பராமரித்தாலே போதும். நம்மை யாரும் வீழ்த்த முடியாது.

நன்றி: விநோதமான வினாக்கள்,கவனகரின் விடிவுதரும் விடைகள்

*************************************************************************************

இனி எமது பார்வையில் ...

மனிதனை மனிதன் துன்புறுத்தாமல், வாழும் உரிமையில் குறுக்கிடாமல் இருப்பது உண்மையான மனிதத்தன்மை. தெய்வத்தன்மை என்றே சொல்லலாம்.

அதிலிருந்து ஒருபடி ஆராய்ச்சிக்காக (வேறு வழி இல்லாமல்) கீழ்இறங்கி பார்த்தால் இராஜபட்சே சிங்கள இனம் அதனால் அவர் தன் இனத்தை காக்க தமிழனின் மீது தாக்குதல் நடத்துவதாக எடுத்துக்கொள்ளலாம்.

அன்னை சோனியா வேறு இனம், வேறு நாடு அதனால் அவரையும் கூட தமிழனுக்கு பதவியை அதிகாரத்தை வைத்துக்கொண்டு எந்த உதவியையும் செய்யாததையும் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் தமிழினத்தலைவர் என அழைக்கப்படும் கலைஞரோ தனது பதவியை வைத்து ஈழத்தமிழருக்கு எதுவுமே செய்யவில்லை. இலங்கைஅரசுக்கு உதவியாக செயல்படும் இந்திய அரசுக்கு துணை நிற்பதைத்தவிர.

குறைந்தபட்சம் எதுவுமே செய்யமுடியவில்லை என்றால் காங்கிரசுக்கு மத்தியில் அளித்துவந்த ஆதரவை விலக்கி இருக்கலாம்.

இங்கே ஆட்சி கவிழ்ந்தாலும், அதையே முதலீடாக வைத்து பின் அனுதாப அலையிலாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து கம்பெனியை உலகத்தின் முதல் பணக்கார (குடும்ப) கம்பெனியாக கொண்டுவந்திருக்கலாம்.

எப்படியும் 2011 ஆட்சி இல்லை. தெரிந்தும் கம்பெனியை படுபாதளத்தில் வீழ்த்துகிறார்.சரி, பதவி விலகினால் இலங்கைதமிழர் பிரச்சினை தீருமா?

தீராது. குறைந்தபட்சம் நமது எதிர்ப்பை பதிவு செய்யலாம். (நல்ல மதிப்பும் புகழும் கிடைத்திருக்கும்.) எதிர்கால கம்பெனியின் நலனுக்கும் உதவும்.

போட்டிக் கம்பெனியினரைப் பற்றி இவருக்கு ஏன் அக்கறை?

அவர்கள் வந்து பிரச்சினையை தீர்த்தால் என்ன? தீர்க்காவிட்டால் என்ன? அவர்களாலும் முடியாது, என்னாலும் முடியாது அதனால் நானே நாற்காலியில் கடைசிவரை இருந்துவிடுகிறேன் என குழந்தைத்தனமாக பிடிவாதம் பிடிப்பது எதற்கு? இதுவரை சம்பாதித்த பணம் போதவில்லையா?

போட்டிக்கம்பெனியினர்க்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால் என்ன? ஒன்று பிரச்சினையை தீர்க்கட்டும். அல்லது அவர்கள் கம்பெனியும் வளரட்டும்.

அதில் என்ன தவறு? ஓ. சம்பாதித்ததை காப்பற்றவேண்டிய கடமையை மறந்துவிட்டேன்.

குடும்பத்தலைவரின் சொத்து பணமானலும் சரி, வினையானலும் சரி
பிள்ளைகளுக்கு சேரும். பாவம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும்.