"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 30, 2010

பயணத் தொடர் 7 ரிஷிகேஷும் எந்திரன் ரஜினியும்..

ரிஷிகேஷில் கங்கையிலும் வெள்ளம், கரையிலும் பக்தர்கள் வெள்ளம் என்றால் மிகையில்லை. பாலத்தில் நடக்கக்கூட இடமில்லாத அளவு கூட்டம். நானும் இன்னும் இரு நண்பர்கள் மட்டும் சிறு குழுவாக இணைந்து கொண்டு அங்கு சுற்றிப்பார்த்தோம்.

என்னுடைய 12 மெகாபிக்ஸல் சோனி சைபர்ஷாட் காமராவில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் சற்று முன்னதாக சென்று கொண்டிருந்தார்கள். அடிக்கடி படம் புடிக்கிறேன் என நின்னுட்டே இருந்தா அவங்க என்ன செய்வார்கள். :)

Monday, September 27, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...6 (ரிஷிகேஷ்)

முஸோரி இரயிலில் நாங்கள் வந்தசமயம் ஹரித்துவாரில் கோவிலுக்கு காவடி எடுக்கும் சீசன். சிவனுக்கு காவடி எடுத்துக்கொண்டு இரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேசனிலும் பக்தர்கள் ஏறிக்கொண்டே வந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் உரிமையாக அமர்ந்தும் கொண்டனர்.

கூட்டம் தாங்காமல் இரயிலின் டிடிஆர், படுக்கைவசதி கொண்ட நாங்கள் இருந்த பெட்டிகளின் நான்கு கதவுகளையும் உள்பக்கமாக தாள் போட்டுவிட்டார். நடுஇரவு இரண்டுமணி இருக்கும்.ஏதோ ஒரு ஸ்டேசனில் இரயில் நின்று கிளம்பி வேகம் எடுத்தது. அந்த ஸ்டேசனில் எனக்கு இடதுபுறம் பிளாட்பார்ம் இருந்தது. பெட்டிகளில் பெரும்பாலும் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தது.

Thursday, September 23, 2010

பிரகதீஸ்வரம் - அதுவே விஸ்வரூபம் : பெரிய கோயில் 1000 ஆண்டுகள்

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

Tuesday, September 21, 2010

விழிப்புநிலை பெற எளிதான வழி..

விழிப்புநிலை என்பது பயமற்ற விழிப்புணர்வு என்றால் அதை எப்படி அடைவது? அதன் பலன் என்ன? அது வாழ்க்கைக்கு எல்லாவிதத்திலும் எந்த அளவு உதவும்?..

முதலில் பயம் என்பது என்ன? நமது உடல், உயிர், உடமைகள், உறவுகள் இவைகளுக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம். நிம்மதியாக, இன்பமாக உயிர் வாழ தடை வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற உணர்வுதான் பயம்.

Monday, September 20, 2010

விழிப்புணர்வு என்பது என்ன?

விழிப்புணர்வு என்பதை கொங்குத்தமிழில் சொல்வதென்றால் வே(ய்)க்கானமா இருக்கனும்,விவரமா இருக்கோனும் அப்படின்னு வெச்சுக்குங்களேன்:)

விழிப்புணர்வு என்பது எதிலும் எச்சரிக்கையாக இருத்தலைக் குறிக்கும். எதுகுறித்தும் கூடுதல் விவரங்கள் தெரிந்து வைத்திருத்தலும் கூட விழிப்புணர்வுதான்.

Saturday, September 18, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5

டெல்லி சென்றடைந்தவுடன் அங்கிருந்து ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று பேருந்துகளில் பிர்லாமந்திர் சென்றடைந்தோம். அங்கு முன்பதிவு செய்ததில் ஏதோ குழப்பம்போல. குறைவான அறைகளே கிடைத்தது. இருப்பதை வைத்து எல்லோரும் சமாளித்துக்கொள்ள, நான் இரயிலிலேயே குளித்துவிட்டதால் வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

Wednesday, September 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4

டில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்க்கான நேரம் நெருங்கியது. அறையைக்காலி செய்துவிட்டு, செண்ட்ரல் ஸ்டேசனில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்பார்மில் நிற்கிறது என்பதை டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் பார்த்து 5 வது பிளாட்பார்ம்க்கு சென்றோம். ஏறத்தாழ அனைவருமே வந்துவிட்டனர். அனைவருக்கும் மஞ்சள் வண்ணத்துடன் கூடிய தொப்பியும் கழுத்தில் தொங்கவிடும் வகையிலான அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது.

Tuesday, September 14, 2010

பன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...

ஏன் வருத்தம்? தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியாவசியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.

Thursday, September 9, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3

திருப்பூரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழில்ரீதியாக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பதால் பலசமயங்களிலும் நீறுபூத்த நெருப்புப்போல்தான் தன் குடும்பத்தினரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிகிறது. இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2

அலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்துவிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா?’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..

Tuesday, September 7, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்

மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.

Thursday, September 2, 2010

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

Wednesday, September 1, 2010

இதுதான் திருப்பூர்......2

திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.