"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Saturday, July 31, 2010

இதுதான் திருப்பூர்.....1

பனியன் கம்பெனிகளில் பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என பலவகையாக இருக்கின்றன. அவற்றுள் பல ஏற்றுமதி நிறுவனங்கள் வரவேற்பறை, பாதுகாவலர் எனத் தனித்தனியாக பலவகையான வசதிகளுடன் இயங்கும் பெரிய கம்பெனிகள். அதேசமயம் ஏற்றுமதி நிறுவனத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சிறுகம்பெனிகளும் இங்கு நிறைய இயங்குகின்றன.

Tuesday, July 13, 2010

உங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....

வேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் :)

Sunday, January 24, 2010

படித்ததில் பிடித்தது 24/01/2010

கூடுசாலை நண்பரின் இடுகை நாம் பரிசோதனை எலிகள் இல்லை

//இந்த மலட்டு விதைகளை கொண்டு நம் விவசாயிகள் மீண்டும் விதைக்கமுடியாது. விளைவு விவசாயிகள் விதைகளுக்கு மீண்டும் அந்த நிறுவனத்தையே அண்டியிருக்க வேண்டும். நம் முன்னோர்கள் “விதைகள்” என கொஞ்சம் தானியங்களை தலைமுறை தலை முறையாய் காப்பாற்றி நம் கைகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கும் தானிய ங்களை இழந்துவிட்டு விதைக்காக வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட நிறுவனங்களிடம் நிற்கவேண்டும்.//

பெரிய அளவில் பணம் பண்ணுவது என்பது மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தோடு, ஒரு நாட்டின் விவசாயத்துறையையே மலடாக்கத்துடிக்கும் இயல்பு கண்டு மனம் கொதிக்கிறது.. நீங்களும் படித்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

***********************************************
அடுத்தது ஒரு தொழில்நுட்பம்....


இன்டர்நெட் விரும்பியா? உஷார் ஜெர்மன் அரசு எச்சரிக்கை

பெர்லின் : இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக உள்ளதை, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதை தொடர்ந்து, அதற்கு மாற்றாக வேறு இணைப்பை பயன்படுத்துமாறு, ஜெர்மன் அரசு, அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூகுள் இணையதளங்களில் சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் இணையதளங்களை, சீனா திருடி வருவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. இதை தொடர்ந்து, கூகுள் போன்ற இணையதள இணைப்பிற்கு செல்ல பயன்படுத்தும், இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பலவீனமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டது.எனினும், இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, இதனால் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு தீவிர அபாயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு அமைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்தது.

இதுகுறித்து, ஜெர்மன் நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகம் அல்லது பி.எஸ்.ஐ., கூறியதாவது:ஜெர்மனியர்கள், எக்ஸ்புளோரரின் அனைத்து வெர்ஷன்களையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், தாக்குதல்கள் நடத்துவது என்பது சிறிது கடினமானது; ஆனால், முழுவதுமாக பாதுகாப்பு அளிக்காது. எனவே, இணையதளத்தை பயன்படுத்தும், ஜெர்மனியர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வேறு பிரவுசரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தாமஸ் பாம்கார்ட்னர் கூறுகையில்,"ஜெர்மன் அரசின் எச்சரிக்கை குறித்து, மைக் ரோசாப்ட் நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. ஆனால், இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கூகுள் இணையதளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், குறிப்பிட்ட நோக்குடன், பெரியளவில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள், சாதாரண மக்கள் அல்லது நுகர்வோர்களுக்கு எதிராக நடைபெறாது'

நன்றி: தினமலர்

Thursday, November 26, 2009

அறிவும் உணர்ச்சியும் தொழில்நுட்பக் கோளாறும்

நண்பர்களே


நம் வாழ்க்கை பயணத்தில் எங்காவது தடை நேர்கிறது, சிக்கல் வருகிறது என்றால் அந்தத் தடைக்கு அறிவு, உணர்ச்சி என்னும் இந்த இரண்டு அம்சங்களில் ஏதோ ஒன்றில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றே பொருள்.


”எந்த மாற்றத்திற்கும் தயார்!” என்ற ஊக்கத்துடன் மனதை வெட்ட வெளியாகத் திறந்து வைத்திருப்பர்க்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாக வாய்க்கும்.


”நான் எந்த விதத்திலும் மாறமாட்டேன். மற்றவர்கள்தாம் எனக்காக மாறவேண்டும்!” என்று அடம் பிடிப்போர்க்குத்தான் எல்லாமே சிக்கலாகத் தெரியும்.


மாறமாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்தப் பிடிவாத மனதிற்குப் பெயர்தான் விதி... வினைப்பயன்...துரதிர்ஷ்டம் என்று பல பெயர்கள் வைத்துள்ளோம்.


சமையலில் சிறிது உப்பு அதிகம் என்றால் சற்று தண்ணீர் சேர்த்து சரி செய்யலாம். அதே போல் தண்ணீர் அதிகமாகிவிட்டால் சற்று தண்ணீர் அதிகமாக்கி சரி செய்யலாம்.


அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும், (உறவுச் சிக்கல்கள்)


அறிவு சார்ந்த சிக்கல்களுக்குச் சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும் (தொழில்சிக்கல்கள்)


முயற்சித்துப் பாருங்களேன்

வாழ்த்துகள்