"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label திருப்பூர் பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label திருப்பூர் பதிவர் சந்திப்பு. Show all posts

Saturday, January 26, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939

View Larger Map கிளிக் பண்ணுங்க..

விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.



நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Monday, January 25, 2010

திருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010

அன்பு நண்பர்களே,

திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
















வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))

திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருப்பூர் கே.ஆர்.சி., சென்டரில் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது; தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் முன் னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள் என, 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இந்நிறுவனங்கள் அமைக்கும் 94 ஸ்டால்களில், குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக் கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் என, அனைத்து பிரிவுகளிலும் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சி வரவேற்புக்குழு தலைவர் துரைசாமி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நிசார் அகமது ஆகியோர் கூறுகையில், "ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர் கண் காட்சி விழா மேடையில் பேச உள்ளனர். தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்,' என்றனர்.
வாழ்த்துகள்

Monday, June 29, 2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு கடந்த 14.06.2009 நடைபெற்று கொண்டிருந்தபோது சிறு காலதாமதத்திற்கு பின்னரே நான் கலந்து கொள்ள முடிந்தது.,

‘நிகழ்காலத்தில்’ என என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபோது., சற்றே யார் என புரியாமல் இருந்த நண்பர்கள் ’அறிவே தெய்வம்’ என்றவுடன் சிரிப்புடன் இயல்பான நிலைக்கு வந்தார்கள்.,

வெயிலான் பரிசல் தலைமையில் நடந்த பதிவர் சந்திப்பு குறித்து ஏற்கனவே பரிசல் எழுதி விட்டதால் படங்கள் இங்கே




(ஈரவெங்காயம், நிகழ்காலத்தில், செந்தில்நாதன்,செல்வம், பரிசல், வெயிலான்,சிறப்பு விருந்தினர் வடகரைவேலன், க்ர்பால்)

அது என்னவோ திருப்பூரில் உள்ள பதிவர்களின் உள்ளூர் சந்திப்பு என்பதால் உரையாடல் பல தலைப்புகளுக்கு சென்றும் மீண்டும் தொழில் பற்றியதாகவே அமைந்துவிட்டது.

தொழிலின் தன்மை, அதன் காரணமாய் முதலாளிகளின் நடவடிக்கைகள், தொழிலாளிகளின் நடவடிக்கைகள் , அதன் காரணமாய் அமையும் தாமதமாக சரக்கு அனுப்புதல், மற்ற தொழில்களுக்கும், திருப்பூரின் தொழில் தன்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என வடகரை வேலன் அண்ணாச்சியும், ராமனும் நன்கு அலசினர்.

கடைசியாக கிர்பால் அவர்களின் கேமாராவினால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இடம்,தேநீர்,வடை,போண்டா அனைத்தும் ராமன் அவர்கள் ஏற்பாடு. அதற்கு நன்றிகள் பல.





நான், நடுவில் நண்பர் வெயிலான் , வலதுபுறம் இருப்பது ராமன்