"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அசைவம். Show all posts
Showing posts with label அசைவம். Show all posts

Tuesday, November 10, 2009

மனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது?

மனிதன் அசைவம் சாப்பிடலாமா கூடாதா இது இன்னும் தீர்வு இல்லாத கேள்வி, இது தவறு என நான் நினைக்கிறேன்.

ஒரே ஒரு கருத்துதான் நான் சொல்ல விரும்புவது

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆறாவது அறிவு

அதென்ன ஆறாவது அறிவு?

தோல், கண், காது, மூக்கு, வாய் என்ற புலன்கள் மூலமான ஐந்து உணர்வு, அறிவு பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொது,

ஆறாவது அறிவு, என்பது சிந்தனை, மனம்

சிந்தனை மலர்ந்து அதன் விளைவு

1)பிற உயிர்களின் இன்பதுன்ப உணர்வுகளை உணரும் ஆற்றல், (எனக்கு வலிப்பதுபோல் அவனுக்கும் வலிக்கும்)

2)உடலின் கருவிகளுக்கு சூழ்நிலைக்கேற்ப உதவ உபகருவிகள் செய்து பயன்படுத்துதல், (காலுக்கு உதவியாக வாகனங்கள்,)

3)செயற்கையாக இயற்கையானவற்றை அருவி,ஏரி,தீவு போன்று உருவாக்கும் ஆற்றல்

4)குகைகளைப்போல் அல்லாது விருப்பப்படி வாழும்வகையில் வீடுகளை உருவாக்கி அதில் வாழும் ஆற்றல்

5)உணவுக்கு தேவையானவற்றை உணவுதானிய, தாவர வகைகளை இயற்கை நமக்கு வழங்குவதை விட பலமடங்கு விவசாயம் செய்து பெருக்கும்
ஆற்றல்.

இத்தனையும் நமக்குஇருக்கிறது ஆறாவது அறிவாக

புலி வீடும் கட்டாது, விவசாயம் பண்ணாது, புலி உயிரினம் தோன்றிய காலம்தொட்டு பிற உயிரினங்களை கொன்றுதான் சாப்பிடும்,
நமக்கு வலிப்பதுபோல் அதற்கும் வலிக்கும் என சிந்திக்க தெரியாது. அதனால் அது செய்வது சரியே

ஒரு நெல்லை பல நெல்லாக்கும் வித்தை தெரிந்த நாமும் புலி செய்வதையே செய்தால் மனிதன் அல்ல, ........@#$$$%^& .தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்

துருவப் பிரதேசத்தில், பாலைவனத்தில் இருப்பவன் என்ன செய்ய? என்றால் அவனுக்கு முடிந்தால் நீங்கள் உணவுப்பொருள்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது அவன் சாப்பிட்டுவிட்டு போகிறான், உணவுப்பயிர்கள் விளையும் இடத்தில் இருக்கும் நீங்கள் ஊர்வன, பறப்பன இவற்றில் கப்பல், விமானம் மீதி
அனைத்தையும் ஏன் சாப்பிட வேண்டும்?

குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.

இந்தத் தகவலை முஸ்லீம் நண்பர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. மகான்களின் வாழ்க்கையைப் பின்பற்றினாலே போதும்.

அவர் விதிவிலக்காக சொன்னது நம் செளகரியத்தை முன்னிட்டு அத்தியாவசியமாகி விட்டது.

மனிதன் மனதிற்கும், நாக்குக்கும் அடிமை, இதுதான் உண்மைகாரணமே தவிர பிற உயிரை மதிக்க வேண்டும் என நினைத்தாலே நமது உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடும். மதங்களும், சாதியும் இந்த விசயத்தில் சப்பைக்கட்டுகளே :))

சந்திப்போம், சிந்திப்போம்