"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அன்னை மீராபாய். Show all posts
Showing posts with label அன்னை மீராபாய். Show all posts

Friday, June 12, 2009

அன்பும் புறச் சாதனங்களும்--அகத்தூய்மை

தினமும் குளிப்பதனால்தான்

ஹரியை அடைய முடியுமெனில்


நீரில் வாழும் விலங்குகள்


ஹரியை அடைந்துவிட்டனவா?




பழங்களையும், கிழங்குகளையும் உண்டால்தான்


ஹரியை அடைய முடியுமெனில்


வெளவால்களும், குரங்குகளும்,


ஹரியை அடைந்து விட்டனவா?




துளசிச் செடியை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் துளசித் தோட்டத்தையே வணங்குவேனே!




கல்லை வணங்குவதால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


நான் மலையையே வணங்குவேனே!




இலைகளையும் தழையையும் தின்றால்தான்


ஹரியை அடைய முடியுமெனில் ஆடுகள்


ஹரியை அடைந்து விட்டனவா?




பாலை மட்டும் அருந்தினால் தான்


ஹரியை அடைய முடியுமெனில்


கன்றுகள் ஹரியை அடைந்துவிட்டனவா?




புறச் சாதனங்களால் அல்ல


உண்மையான அன்பினாலேயே


நந்தகோபனை அடைய இயலும்.




அன்னை மீராபாய்

*******************************************************************************
நன்றி—ஞானப்புதையல் – முனைவர் எம்.இராமலிங்கன் – பூர்ணா பதிப்பகம்
********************************************************************************
இறைநிலையை உணர மேற்கண்ட உடல்சுத்தம், சைவ உணவுமுறை,கோவில் வழிபாடு, போன்றவைகளெல்லாம் ஆரம்பநிலை வழிமுறைகளே. இதை உணர்ந்து செய்யலாம். இவை உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சரியான திசையில் நகர்த்திச் செல்லும்.

ஆனால் ’இதுவே ஆன்மீகவாழ்க்கை’ என நாம் இதிலேயே சிக்கிக் கொண்டு அன்பை உள்ளே உணராமல், உணர்ந்தது வெளியாகாமல், அதுவாகாமல் வாழ்வது பொருத்தமானது அல்ல. இதையே அன்னை வலியுறுத்துகின்றார்