"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 18, 2009

ஆன்மிகம் என்றால் விரும்புவது ஏன்?

இதுதான் என் வாழ்க்கை, என் வாழ்வும் சாவும் இரண்டும் என் கையில் என்பதே ஆன்மீகம்.

நண்பர் எல்லாம் இருக்கும் வரை அவர்களின் இடுகையை படித்தேன். அவருடைய கருத்துக்களோடு ஒத்துப் போன போதிலும் சில கருத்துப் பகிர்வுகள் தேவை என நினைத்ததால் இந்த இடுகை. எனவே இதை படிக்கும் முன் அவரது இடுகையினை படித்துவிடுதல் நலம். அதன் தொடர்ச்சியே இது:))

\\ஆன்மிகத்திற்கு விளக்கம் அவசியமில்லை எனும் கருத்து எனக்குண்டு. ஆன்மிகம் ஒரு உணர்வு. \\ இது நண்பரின் கருத்து.,

இனி எனது கருத்து

மீன் தண்ணீருக்குள் இருந்து வாழ வேண்டும் என்பது விதி.

ஆனால் ஆற்று நீரோட்டத்தின் வழியே வாழ்வது, விதியின் வழியே வாழ்வது ஆகும் ஆனால் எதிர்நீச்சல் போட்டு, தன் விருப்பப்படி வாழ்வது முயற்சி ஆகும். ஆனால் இரண்டுமே தண்ணீரை விட்டு வெளியே வராது, வந்தால் மரணம்தான்.

இது மனித வாழ்வில் உன் முயற்சியினால். எப்படி வேண்டுமோ அப்படி வாழ்ந்து கொள் என அனைத்தையும் இயற்கை விதி நமக்கு வழங்கி இருக்கிறது. இது நம் முறை, விளையாட்டாக சொன்னால் பந்து நம் கையில், என்னவேண்டுமானாலும் செய்யலாம், அந்த உரிமையை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வது நம் சுதந்திரம்:))

ஆன்மீகம் என்பது விளக்க வேண்டிய ஒன்றே. அந்த விளக்கம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் சரியாக உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது சரியாக வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும். அப்படி வாழ முழுமையாய் உணர்ந்தால்தான் வாழ முடியும்.

இந்த கருத்தை, அதாவது ஆன்மீகத்தை விளக்க முயலாவிட்டால் நாம் எதிர்கால சந்ததியினருக்கு தவறிழைக்கிறோம் என்பதே என் கருத்து.


ஆன்மீகம் என்பது ஒருங்கிணைத்துப் பார்ப்பது

அறிவியல் என்பது தனித்தனியாக பார்ப்பது

இவ்வளவுதான். இதை சரியாக பிடித்துக் கொண்டால் ஆன்மீகம் என்பது எளிதில் விளங்கிவிடும்.

ஆன்மீகம் என்பது வேறொன்றுமில்லை, உடல்நலம், உயிர்நலம், மனநலம், சமுதாயநலம் இவை ஒன்றுக்கு ஒன்று முரண்படாமல் இனிமை காத்து வாழ்வது என்பதுதான். இதில் பல சாதனைகளும் சாதரணமாகிவிடும்.

இதற்கு உதவவே வேதங்கள்,கலைகள், புராணங்கள் என்று புரிந்து கொண்டு பார்த்தால் எல்லாம் சரியாக இருப்பது தெரியவரும்,

மனதிற்குத்தான் எல்லாமுமே.மனம் சிலசமயம் சொன்னதைக்கேட்கும், சில சமயம் முரண்டுபிடிக்கும்,அலையும்,எப்படி வேண்டுமானாலும் மாறும், இதை கட்டுக்குள் கொண்டுவந்து இந்த உயிரும், உடலும் மேன்மை அடையவே இந்த வேதங்கள்,கலைகள், புராணங்கள், மதங்கள் அனைத்தும்

மனம் அடங்கிவிட்டதா,? அன்பாகவே, கருணையாகவே மாறிவிட்டதா,? இனி எச் சூழலிலும் இதிலிருந்து மாறாதா? அப்படியானால் உங்களுக்கு சொல்லப்பட்டதல்ல வேதங்கள்,கலைகள், புராணங்கள்.! இனி உங்களுக்கு அவை தேவையுமில்லை.

மனதோடு போராடிக் கொண்டு இருப்பவருக்கே இவையெல்லாம் தேவை

ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டால் நமக்கு நாமே பிணக்கு, அல்லது பிறரிடம் சமுதாயத்திடம் பிணக்கு என்பது எழாது. அப்படி எழுந்தால் நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

*** ***

நோய் இல்லாத உடம்பை இறைவனிடம் ஒப்புவிக்க வேண்டும் என்பது ஆன்மீகம் என்றால் இறைவனுக்கு இந்த மனிதர்களின் உடம்பை வைத்து என்ன செய்யப் போகிறான், ஒருவேளை சிவன் வெட்டியான் என்பதால் இந்த கருத்தோ?:))

நோய் இல்லாத உடம்பில் இறைவன் குடி கொள்வான் என்பதே குறிப்பு, நாம் உடல்நலம், உயிர்நலம் பேண வேண்டும் என்பதே இங்கு முக்கியம்,

நோய் வந்த பின் மருந்து என்பதை விட நோய் வராத நிலை வேண்டும் என்பதே ஆன்மீகம், வந்த பின் நோயை குணமாக்கலாம் என்பது அறிவியல். இதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆன்மீகத்துக்குள் அறிவியல், நோக்கம் ஒன்றுதான்.

மதம், சடங்கு சம்பிரதாயம் எல்லாமே ஆன்மீகத்தில் அடக்கம்தான், தேவையானதுதான். ஆனால் அதை புரிந்து கொள்வதில், அல்லது எடுத்து விளக்குவதில்தான் தவறு நேர்கிறது, எல்லாமே மனிதகுல மேன்மைக்காக ஏற்படுத்தப்பட்டது என்ற உணர்வோடு பார்த்தால் எல்லாமும் சரியாகவே இருக்கும்.

சரி இப்போது சிந்தியுங்கள் ஆன்மீகம் என்றால் ஒதுங்கிப்போவோரா நீங்கள்?:))

மீண்டும் சந்திப்போம்

24 comments:

  1. ம்.....ம்...... புரியுதுண்ணே! :)

    ReplyDelete
  2. :)

    ஆன்மிகம் என்பது கடவுள் இருப்பை நம்புவது.

    மதம் என்பது கடவுள் இருப்பையும் கொள்கைகளையும் நம்புவது.

    மதவெறி என்பது தன் மதத்தின் கடவுளை நம்புவதுடன், தன் மதக் கொள்கைகளையும் தீவிரமாக பின்பற்றுவது.

    //சரி இப்போது சிந்தியுங்கள் ஆன்மீகம் என்றால் ஒதுங்கிப்போவோரா நீங்கள்?:))//

    நரி வலம் போனால் என்ன ? இடம் போனால் என்ன ? நம்மைக் கடித்துக் குதறாமல் போனாலே நல்லதும்பாங்க !
    :)

    ReplyDelete
  3. இல்லையே, நரி முகத்தில் விழித்தால் அதிர்ஷடம் என்பார்களே !! :)))

    \\ஆன்மிகம் என்பது கடவுள் இருப்பை நம்புவது.\\

    அதுதான் ஏன்?எதற்கு? என கேட்டுக்கொள்ளுங்கள்.
    அப்போதுதான் அந்த பதிலுக்கு ஏற்ப கடவுள் இருப்பை எந்த அளவு நம்புவது, என்பதில் தெளிவு வரும்.
    இன்னும் கொஞ்சம் மேலே வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்:))

    \\மதம் என்பது கடவுள் இருப்பையும் கொள்கைகளையும் நம்புவது.

    மதவெறி என்பது தன் மதத்தின் கடவுளை நம்புவதுடன், தன் மதக் கொள்கைகளையும் தீவிரமாக பின்பற்றுவது.\\

    சரிதான் :))

    ReplyDelete
  4. \\☼ வெயிலான் said...

    ம்.....ம்...... புரியுதுண்ணே! :)\\

    தேறீட்டேன்னு சான்று தலைவர் கையால் :))

    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. \\ஆன்மிகம் என்பது கடவுள் இருப்பை நம்புவது.

    மதம் என்பது கடவுள் இருப்பையும் கொள்கைகளையும் நம்புவது.

    மதவெறி என்பது தன் மதத்தின் கடவுளை நம்புவதுடன், தன் மதக் கொள்கைகளையும் தீவிரமாக பின்பற்றுவது.\\

    இது பகுத்தறிவு கண்ணாடி அணிந்து பார்ப்பதால் இப்படி தெரிகிறது. இதுவும் சரிதான்.

    நான் கண்ணாடியை கழட்டி விட்டு இயல்பாக பார்க்கிறேன் அவ்வளவுதான்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //இது பகுத்தறிவு கண்ணாடி அணிந்து பார்ப்பதால் இப்படி தெரிகிறது. இதுவும் சரிதான்.//

    எதுக்கு உதாரணம் ? அப்ப ஆன்மீக கண்ணாடின்னு எதுவுமே கிடையாதா ?

    //நான் கண்ணாடியை கழட்டி விட்டு இயல்பாக பார்க்கிறேன் அவ்வளவுதான்

    வாழ்த்துக்கள்//

    நல்ல வேளை நீங்க துண்டு கட்டிக் கொண்டு குளிப்பதாக சொல்றிங்க, நான் அது இல்லாது குளிக்கிறேன் என்று சொல்வது போல் இருக்கு !
    :)

    ReplyDelete
  7. //அதுதான் ஏன்?எதற்கு? என கேட்டுக்கொள்ளுங்கள்.
    அப்போதுதான் அந்த பதிலுக்கு ஏற்ப கடவுள் இருப்பை எந்த அளவு நம்புவது, என்பதில் தெளிவு வரும்.
    இன்னும் கொஞ்சம் மேலே வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்:))//

    பெற்றோர் வழி நம்பிக்கை ஊட்டப்படாவிட்டால் ஒரு குழந்தை என்ன நம்பிக்கை கொண்டிருக்கும் ?

    ReplyDelete
  8. \\நல்ல வேளை நீங்க துண்டு கட்டிக் கொண்டு குளிப்பதாக சொல்றிங்க, நான் அது இல்லாது குளிக்கிறேன் என்று சொல்வது போல் இருக்கு !
    :)\\

    மாற்றி சொல்கிறீர்கள் :))
    உடல் சுத்தம் கருதி துண்டு இல்லாமல் குளிப்பது நானே, தாங்கள் தான் துண்டோடு குளிக்கிறீர்கள்:))

    ReplyDelete
  9. \\பெற்றோர் வழி நம்பிக்கை ஊட்டப்படாவிட்டால் ஒரு குழந்தை என்ன நம்பிக்கை கொண்டிருக்கும் ?\\

    தான் வாழும் சூழலின் தாக்கத்தை கொண்டிருக்கும்.

    வளர்ப்போரின் தாக்கம், கரு அமைப்பு பதிவுகள் அனைத்தும் குழந்தையிடம் வந்தே தீரும்.

    வருங்காலப் பெற்றோருக்கு வழிகாட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு

    ReplyDelete
  10. //மாற்றி சொல்கிறீர்கள் :))
    உடல் சுத்தம் கருதி துண்டு இல்லாமல் குளிப்பது நானே, தாங்கள் தான் துண்டோடு குளிக்கிறீர்கள்:))//

    நீங்கள் சொல்வதாகத்தான் நானும் குறிப்பிட்டேன்

    ReplyDelete
  11. //அதுதான் ஏன்?எதற்கு? என கேட்டுக்கொள்ளுங்கள்.
    அப்போதுதான் அந்த பதிலுக்கு ஏற்ப கடவுள் இருப்பை எந்த அளவு நம்புவது,//

    இருப்பை நம்புவதில் அளவு வேற இருக்கிறதா ?

    எந்த அளவு மத நூல்கள் காட்டும் அளவா ? மன அளவா ?

    தெரிந்தும் விடை கூறாவிட்டால் விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சாபம் இட்டது போல் கிடைக்கும்.

    ReplyDelete
  12. \\இருப்பை நம்புவதில் அளவு வேற இருக்கிறதா ?

    எந்த அளவு மத நூல்கள் காட்டும் அளவா ? மன அளவா ?\\

    கடவுள் இருப்பை நம்ப மன அளவுகோலே முக்கியம்,
    அதற்கு முன் நம் மனதின், அளவுகோலின் தன்மையை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்,

    தராசு பலவிதம். மில்லிகிராம் தங்கத்தை போடும் தராசில் டன் கணக்கில் எடைபோடுவதும் தவறு,

    டன் கணக்கில் போடவேண்டிய தராசில் மில்லி கிராம் போடுவதும் தவறு

    மனத் தராசு பற்றி முதலில் தெளிவோம். அப்போதுதான் (கடவுளின்)எடைபற்றி சரியாக அறிய முடியும்

    ReplyDelete
  13. என்னமோ பேசிக்கறீங்கனு தெரியுது...

    என்ன பேசிக்கறீங்கனுதான் தெரியமாட்டைங்குது..

    நான் கொஞ்சம் வளரனும்னு நினைக்கறேன்.

    ReplyDelete
  14. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  15. /நிகழ்காலத்தில்... said...

    கட்டுரை என்ன சொல்ல வருகிறது என சரியா புரிந்து கொள்வதானால் திவாவின் கருத்தே என் கருத்தும்

    இறைக்கு உதாரணம் சொல்லும்போது இந்த அளவில்தான் சொல்லமுடியும்.

    வாழ்த்துக்கள்//

    இப்படி உங்கள் கருத்தை ஒரு பதிவில் பார்த்தேன்.

    ஆன்மிகம் என்பது விளங்கிக் கொள்வதில் விளைவது. விளக்குவதில் இல்லை. ஆழியாரில் நண்பர்களோடு ஒரு தியானப் பயிற்சி அளித்தவர் விளக்க விளக்க, குழப்பம் தான் அதிகரித்ததே தவிர, ஆன்மிகம் அங்கே விளையவில்லை. கையில் பஞ்சு மிட்டாயை வைத்துக் கொண்டு, இது கலர் கலாராய் இருக்கும், தின்னத் தின்ன இனிப்பாய் இருக்கும் என்று காட்டினதோடு சரி.

    வேண்டுமானால், வறுமைக்குக் காரணம் என்ன என்பதைத் தான் கண்டுபிடித்துவிட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். படித்து விட்டுப் புரிந்தால், அதன் மூலம் வறுமையைப் போக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கே இருந்தால், எனக்குச் சொல்லி அனுப்புங்கள்!

    அதுவரைக்கும், நீங்கள் சொன்ன இந்த வார்த்தை, 'இறைக்கு உதாரணம் சொல்லும்போது இந்த அளவில்தான் சொல்லமுடியும்.' பச்ஞ்சுமிட்டாயைக் கண்ணால் பார்த்து, தித்திப்பு என்றால் என்ன என்று புரிந்து கொண்ட மாதிரித் தான் இருக்கும்.

    இதற்கு வால்பையன் பேசுகிற நேரடி நாத்திகமே எவ்வளவோ மேல்!

    ReplyDelete
  16. \\ஆன்மிகம் என்பது விளங்கிக் கொள்வதில் விளைவது.\\

    நண்பரே ஆன்மீகம் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது.

    இது என் கருத்து இடுகையில், ==>ஆன்மீகம் என்பது விளக்க வேண்டிய ஒன்றே. அந்த விளக்கம்
    அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் சரியாக உணர்ந்து இருக்க வேண்டும் அல்லது சரியாக வாழ்ந்து காட்டி இருக்க வேண்டும். அப்படி வாழ முழுமையாய் உணர்ந்தால்தான் வாழ முடியும்.==> இது உங்களது கருத்தை உள்ளடக்கித்தானே இருக்கிறது.!!
    தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், சிந்தனை செய்வோம்

    //ஆழியாரில் நண்பர்களோடு ஒரு தியானப் பயிற்சி அளித்தவர் விளக்க விளக்க, குழப்பம் தான் அதிகரித்ததே//

    :)) ஆன்மீகம் என்பது வார்த்தைகளில் ஓரளவுக்குதான் விளக்கமுடியும் என்பதை மீண்டும் சொல்கிறேன்.அது மட்டுமில்லாமல் ’சொல்பவர் விளங்கிக் கொண்ட முறையும்’, கேட்பவர் புரிந்து கொள்ளும் முறையும் பொருந்த வேண்டும், இல்லை என்றால் குழப்பம் நிச்சயம் வரும்:))

    வறுமைக்கு காரணம் பற்றி அவர் சொன்னதன் விபரம் தந்தால் அது குறித்து சிந்தனை செய்யலாம்.
    என்னளவில் உழைப்பால் முன்னேறி வறுமையின்றி இருக்கிறேன். அது ஆன்மீக வழியினால் என நம்புகிறேன். இங்கு ஆன்மீகம் என்பது வால்பையன் ஆன்மீகம் அல்ல, இடுகையில் நான் குறிப்பிட்ட ஆன்மீகம்

    நான் பேசுவது உடல், உயிர், மனம் சமுதாய நல்உறவு இருக்க, உருவவழிபாட்டை பயன்படுத்த வேண்டும், மதகோட்பாடுகளையும் அதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதில் மற்றவரோடு கண்டிப்பாக பிணக்கு வராமல் வாழ்வதே ஆன்மீகம் என்பதே என் கருத்து.

    நன்றி என்னை நாத்திகவாதியாக பார்த்ததற்கு:)))

    ReplyDelete
  17. மிகவும் வித்தியாசமான சிந்தனை. நல்லதொரு கருத்தை நிலைநாட்ட வந்த இந்த இடுகையின் போக்கு திசைமாறிப் போவது சாத்தியமே.

    //ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டால் நமக்கு நாமே பிணக்கு, அல்லது பிறரிடம் சமுதாயத்திடம் பிணக்கு என்பது எழாது. அப்படி எழுந்தால் நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.//

    மிகவும் சரி, ஆனால் பிறர் எழுதிய விளக்கங்களும், நீங்கள் எழுதிய விளக்கங்களும் படிக்கும்போது அங்கே ஒருவித எண்ண வேறுபாடு தலைதூக்க வழியாகிறது. எது சரி என்பதில் சென்று முடிய தலைப்படும்போது அங்கே எது சரியில்லை என்பது பிரச்சினையாகிறது.

    ஆன்மிகம் விளக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகவே இருக்கட்டும்.நீங்கள் சொல்வதைப் போல் விளக்கம் தந்தாலும் அவரவர் உணர்ந்தால்தான் அதனால் பயன் ஏற்படும்.

    ஆன்மிகம் கண்டு ஒதுங்குவது இல்லை நான், ஆன்மிகம் சொல்லும் வழியில் வாழ தலைப்படுகிறேன்.

    இரண்டு நாட்களாக யோசித்து எழுதிய கட்டுரை ஒன்றை இன்று எனது வலைப்பூவில் எழுதுகிறேன். மீண்டும் இடறிவிட்டேனா எனத் தெரிந்துவிடும்.

    தங்கள் கருத்துக்கும், எனது வலைப்பூவினை சுட்டியமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  18. என்றும் முடியாத விவாதம்.. ஆனால் எப்போதும் புதியது போலவே தோன்றும்.. இளவயதில் வாழ்வை துறந்து காசிக்கு சென்ற பெரியார் பின்னாளில் கடவுள் மறுப்பாளர் ஆனார். கடவுளே இல்லை சொன்ன விவேகானந்தர் பின்னாளில் ஆன்மீக சிங்கமாக மாறினார்.. எல்லாம் அவன்செயல்

    ReplyDelete
  19. \\ஆன்மிகம் விளக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாகவே இருக்கட்டும்.நீங்கள் சொல்வதைப் போல் விளக்கம் தந்தாலும் அவரவர் உணர்ந்தால்தான் அதனால் பயன் ஏற்படும்.\\

    வெ.இராதாகிருஷ்ணன் கருத்துக்கு நன்றி

    என்னதான் படித்தாலும் உணர்ந்தால்தான் பயன்படும் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்

    நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  20. \\karthik said...

    என்றும் முடியாத விவாதம்.. ஆனால் எப்போதும் புதியது போலவே தோன்றும்.. எல்லாம் அவன்செயல்\\

    இது முடியக் கூடிய விவாதமே, நம்மை ஆட்டுவிக்கும் சக்தி ஒன்று என்று உணர்ந்து வாழ்வை இனிமையாக வாழவே ’அதை’ முக்கியப்படுத்துகிறோம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  21. அருமையான பதிவு

    ReplyDelete
  22. //Several tips said...

    அருமையான பதிவு//

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  23. When anmikam is explained, it becomes a theory; a philosophy limited to words; an intellectual exercise; or, in many cases, pleasure. To understand the theory, the philosophy; and to enjoy the pleasure of the intellectual act, is not possible to all: What about those who can’t hear, can’t see or cant both hear and see, and those who are not endowed with such intellect as to understand the arcane theologies about god? Even if you simplify all to them, do they have time? Should we call those who toil and moil in the soil, with little time for anything else, barbarians, incapable of anmikam? If we do, such anmikam is questionable, sinful and immoral. Anything that neglects the common and simple folk is an act of satan – even if we do in the name of God.

    Govi Kannan says, animkam is acceptance of God. ஆன்மிகம் என்பது கடவுள் இருப்பை நம்புவது.

    This is untrue. Buddhism does not accept the concept of a Supreme Being above us. Can we say that Buddhist monks or the Great Gautama himself lacked anikam? In Hindu religion itself, there is a branch called cavarkars who deny God? Can we call them barbarians, I mean, lacking anmikam? Many philosophers like Socrates in Greece did not accept the concept of God. Shall we call them lacking in anmikam? We can thus see the folly of linking the concept of god only with anmikam.

    Anmikam, according to me, may or may not do with god. One can deny god; but still be a great spiritualist than this blogger or anyone who boasts of possession of anmikam.
    Then, what else is anmikam?
    Anmikam is consciousness that our life on earth is transient. We are here for a brief period and then will be gone. During this life, what are we to do with our lives? What is the purpose of our existence? Whether there is any purpose at all? (Because philosopher like Sartre said we had no purpose – he called it Being and Nothing). What do we have to do with our conscious mind and our physical being? How to dovetail the two? Or, should we dovetail at all? Can’t we deny the physical aspect in toto, and accept only the other spatial side of our mind or spirit, as Hindu Rishis recommended? Should we say that our earthly life is just maya, as Sankara said? Or, should we be conscious that there is a Supreme Being? If so, can we call that god? If we do, don’t we limit him? Is God timeless, spaceless or illimitable? If he is so, then, does he not passeth our understanding and comprehension? Why is it the innocent suffer while the mafelactors flourish?

    Such questionings and seeking answers is anmikam. Even if we don’t get the answers, still the struggle is worth awhile, and is called spiritual struggle, an aspect of anmikam. Failure in the struggle is the greatest glory to man than pretending to have attained success. Anmikam is thus to do, with or without god. EVR or Nietze can be a greater spiritualist than many of us, who boast of being a god lover or accepters. Anmikam is therefore nothing but consciousness and what we do with that. If that entails struggle, that is great. Real anmikam entails spiritual struggle – that struggle can be waged even with god, as Job did, and Nammazvaar and Thirumangai aalvaar did sometimes.

    அறிவே தெய்வம் என்பது is human arrogance.

    ReplyDelete
  24. வணக்கம் உங்களுடைய படைப்புகள் அருமை என்னுடைய சித்தர்கள் ரகசியத்தை பாருங்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)