"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அறிவே தெய்வம். Show all posts
Showing posts with label அறிவே தெய்வம். Show all posts

Monday, July 2, 2012

திரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்




தமிழ்மணம் நேயர்களுக்கு வணக்கம். நிகழ்காலத்தில் சிவா என சுயகுறிப்பில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே திருப்பூர்தான்.:)

திருப்பூரில் பனியன் உற்பத்தி துறையில் சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறேன். உழைப்பால் உயர்ந்தவன் என்று என்னை நானே தட்டிகொடுத்துக்கொள்வது உண்டு. உடலுக்கு வயது நாற்பதை தாண்டிவிட்டது. சிறுவயது முதல் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்ததாலும், எதோ ஒரு வெறுமையை மனம் உணர்ந்ததாலும் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்தேன்.

Friday, December 11, 2009

பாரதியாரும், எனது நூறாவது இடுகையும்

அறிவே தெய்வம் என சொன்னவர் பாரதி

ஞானப்பாடல் தொகுப்பில் 10வது பாடலைப் பாருங்கள்,

11வது பாடல் பரமசிவவெள்ளம்

இறைநிலை குறித்தான விளக்கமாக அமைந்த பாடல்.

நேரம் கிடைக்கும் போது இந்த இரு பாடல்களையும் சிலமுறை படித்துப்பாருங்கள்.

பாடல்கள் இணைப்பு கிடைக்கும் இடம் சிலம்புமதுரைத்திட்டம்

மனதில் ஆன்மீகம் குறித்தான தெளிவு பிறக்கும்.

நான் பாரதியை இப்படித்தான் பார்க்கிறேன் :))

பாரதியாரின் பிறந்தநாள் நினைவு கூறவும், எனது நூறாவது இடுகையாகவும் என் விருப்பமாக இதை உங்களோடு பகிர்நது கொள்கிறேன்

\\\நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்)
– Hide – Always show
100 Posts, last published on Dec 11, 2009 –\\

dash board - ல் இருந்து கிடைத்த தகவல், ஆனால் பதிவின் வலதுபுறம் இந்த வருடம் 99 இடுகையும், சென்ற வருடம் 2 இடுகையும் மொத்தம் 101 காட்டுகிறது. இதை ஒட்டி முன்னதாக, முந்தய இடுகையிலேயே வாழ்த்து சொன்ன கோவியாருக்கும், என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்  காணிக்கையாக்குகிறேன்


வாழ்த்துகள்


இன்று மாலை இந்த பதிவைப் பார்த்தேன். பாரதியைப் பற்றிஎன் பாரதி