"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, November 30, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12

பாறை விழுந்த பாதை துண்டிக்கப்பட்ட இடத்திற்கு மறுபுறம் நடந்து சென்றபோது அந்தப்பகுதியில் நிறைய வாகனங்கள் கீழிறங்க வழி இல்லாமல் காத்திருந்தன.

அதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.

Wednesday, November 24, 2010

லிவிங் டு கெதர்..... (18+)

லிவிங் டு கெதர் என்பது என்ன.. இது சரியா தவறா என்பதைவிட இதன் விளைவுகள் என்ன? சாதக பாதகங்கள் என்ன? இது தேவையா எனப் பார்ப்போம்.

லிவிங் டு கெதர் என்றால் என்னுடைய புரிதல் வயது வந்த ஆணும் பெண்ணும் இருவராக சேர்ந்து வசித்துப் பார்ப்போம். எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் இணைந்து வாழலாம். இல்லையெனில் பிரிந்துவிடலாம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சி என வைத்துக்கொள்கிறேன்.

Tuesday, November 23, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..11

குளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு மெதுவாக வெளியேறி புகைப்படங்கள் எடுத்துவிட்டு பேருந்துகளைப் பார்த்தேன். மூன்று பேருந்துகளே கண்ணில்பட்டன. பார்க்கிங் வசதியெல்லாம் கிடையாது. எனவே தள்ளி மற்ற இரு பேருந்துகளை நிறுத்தி இருப்பார்கள் என நினைத்தேன். அப்போதுதான் நான்காவது பேருந்து வந்து சேர்ந்தது. அதில் இருந்து 50 பேர் இறங்கினர். இருமடங்கு நண்பர்கள் அதில்வர பின்னே வந்த வண்டி வழியில்
பாறைச்சரிவுக்கு அப்பால் மாட்டிக்கொண்டதாகவும் நான்காவது வந்த பேருந்தின் பின்புறம் சுமார் 5 அல்லது 6 தூர வித்தியாசத்தில் பெரிய பாறை விழுந்தது எனச் சொல்ல அதிர்ச்சியாக இருநதது. அதன் உண்மைத்தன்மை மனதில் சுர்ர்ரென உரைத்தது.

Monday, November 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10

காங்னானி என்ற இடத்தை சென்று சேர்ந்தோம். இங்கு என்ன விசேசம் என்றால் வெந்நீர் ஊற்றுதான்:) எனக்கு வெந்நீர் ஊற்றை முன்னபின்னே பார்த்தது இல்லையா! அதுனால அது எப்படி இருக்கும். தேங்கியிருக்கும் குட்டைபோல் இருக்குமா? நீர் ஆதாரம் கீழே இருந்து வருமா? என்கிற யோசனை எல்லாம் மனதில் ஓடியது. பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் வெந்நீர் ஊற்றைத் தேடிக்கொண்டே ரோடில் நடந்து போனோம். எங்குமே காணவில்லை. விசாரித்ததில் பஸ் நின்ற இடத்திலேயே கடைகள் நிறைய இருந்தன. அதற்கிடையில் மேலே படியில் ஏறிப்போகச் சொன்னார்கள்.

Wednesday, November 10, 2010

இதுதான் திருப்பூர். 10.11.2010

தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னர் புதன்கிழமை வங்கிக்கு பணம் எடுக்க சென்றேன். சரியான கூட்டம். காலை 11 மணிக்கு சென்றேன். செக்கைக் கொடுத்து டோக்கன் வாங்கினேன்.  "அப்புறம் வாங்க பணம் குறைவாக இருக்குது". என வங்கி அலுவலர் சொல்ல அடிக்கடி சென்று பழக்கமானதால் சரி என  வந்து விட்டேன்.

Thursday, November 4, 2010

வருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள் - (ஹாக்கிங்ஸ்)

பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார். நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:

Monday, November 1, 2010

மனித உருவில்...மனதின் கோரம்

ரஞ்சித்குமார் ஜெயின்(40); துணிக்கடை வைத்துள்ள இவர் நூல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது மகள் முஸ்கின்(11), மகன் ரித்திக்(8). இருவரும் தனியார் பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பில் படித்து வந்தனர். கடந்த வெள்ளியன்று, குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதற்காக வீட்டருகே, ஆம்னி வேனுக்காக காத்திருந்தனர். அப்போது வந்த ஆம்னி வேனில் ஏறிய இருவரும் கடத்தப்பட்டனர்......