"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label புத்தகத் திருவிழா. Show all posts
Showing posts with label புத்தகத் திருவிழா. Show all posts

Saturday, January 26, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939

View Larger Map கிளிக் பண்ணுங்க..

விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.



நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Tuesday, January 22, 2013

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா - திருப்பூர்

திருப்பூர் வந்தோரை வாழவைக்கும் நகரம். பனியன் தொழில் ஏற்றுமதித்துறையில் சாதித்துக்கொண்டிருந்த நகரம். சினிமாத்துறைக்கு ஈடாக பல்வேறு உபதொழில்களை தன்னகத்தே கொண்டு பலரையும் உயரவைக்கும் நகரம்.

சிலரை குப்புறத் தள்ளியும் வேடிக்கை பார்த்திருக்கும். அது நகரத்தின் குற்றமல்ல.. வீழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் சங்கதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியும்.

முயல் போன்ற ஓட்டம் இங்கே வேலைக்கு ஆகாது. குதிரை போன்று ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை., பொறுமையிலும் பொறுமை என்பதெல்லாம் இத்தொழில் செய்வோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைக்குணங்கள்.

வடமாநிலங்களில் இருந்து வந்து உழைக்கத் தயாராக இருப்பவர்கள் கூட எனக்கு இன்ன சம்பளம் வேண்டும் கேட்டு வாங்கும் நிலை இங்கே உண்டு. கொடுப்பதை வாங்கிக்கொள் என்கிற அடிமைத்தனம் இங்கே அறவே இல்லை. அதேசமயம் உழைப்பதிலும், புத்திக்கூர்மையிலும் நுட்பங்கள் அவசியம் தேவை என்பதே இங்கே முன்னேற ஆசைப்படுபவர்களின் அடிப்படைத் தகுதி.

அப்படி தனது உழைப்பால் இன்று குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கும் திருப்பூர் நண்பர் ஜோதிஜி அவர்கள்  அனுபவத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு  பயன் தரும் விதத்தில் 4தமிழ்மீடியா நிறுவனம் நூலாக பதிப்பித்திருக்கிறார்கள்.



விழாவிற்கு  26 ம் தேதி திருப்பூர் வருபவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். தங்குமிடம் பற்றிய விவரங்கள் தருகிறேன். என் அலைபேசி எண் 9790036233

 விழாவில் கலந்து கொள்வதில் சிரமம் இருப்பவர்களுக்கு டாலர்நகரம் புத்தகம் திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் கிடைக்கும்


Monday, January 25, 2010

திருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010

அன்பு நண்பர்களே,

திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
















வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))

திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருப்பூர் கே.ஆர்.சி., சென்டரில் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது; தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் முன் னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள் என, 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இந்நிறுவனங்கள் அமைக்கும் 94 ஸ்டால்களில், குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக் கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் என, அனைத்து பிரிவுகளிலும் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சி வரவேற்புக்குழு தலைவர் துரைசாமி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நிசார் அகமது ஆகியோர் கூறுகையில், "ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர் கண் காட்சி விழா மேடையில் பேச உள்ளனர். தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்,' என்றனர்.
வாழ்த்துகள்