"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, April 13, 2009

மன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....

மனிதர்களுக்குத் தோன்றும் விதவிதமான கவலைகளை எந்தவொரு புத்தகத்திலும் (பதிவிலும்) அடக்கிவிட முடியாது. கவலைகளுக்கு முடிவே கிடையாது.

எதைப் பற்றியாவது, சதா யோசித்துக்கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும் இருப்பது மனித சுபாவம்.

சின்னச் சின்னதாகத் தோன்றும் கவலைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் அவை தோன்றும் வேகத்திலேயே காணாமல் போய்விடும்.

பஸ் வருமா, வராதா என்ற கவலை, பஸ் வந்தால் தீர்ந்துவிடும்.பரிட்சையில் பாஸ் ஆகிவிட்டால், பரீட்சை பற்றிய கவலை தீர்ந்துவிடும்.

அதேசமயம் பரீட்சையில் பெயில். அது மூட் அவுட் ஆக்கும் சங்கதிதான்.ஆனால் அடுத்தது என்ன செய்வது என்று சிந்தித்து, அப்போதே அதிலிருந்து மீண்டு விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை.

மீளா விட்டால்தான் பிரச்சினை, மன அழுத்தம் என்ற விஷயம் இங்கேதான் வருகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டால், மனம் மட்டுமல்ல, உடலும் சேர்ந்தே பாதிப்படைகிறது. அதனால்தான் ”பிரச்சினையா? என்னால் முடியவே முடியாது சாமி” என சோர்ந்து ஒடுங்கி விடுகின்றனர் பலர்.

அதோடு நம் எண்ணங்கள் மாறுகின்றன. நமது சாப்பிடும் முறை மாறுகிறது.தூக்கம் கெடுகிறது. மூச்சு குறுகி விடும். மொத்தத்தில் நம்மை முற்றிலுமாக தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.

மன அழுத்தம் தாக்கும்போது பயப்படக்கூடாது. உடைந்து போகக்கூடாது


மன அழுத்தம் என்பது ஒரு மூட், மனநிலை. அவ்வளவுதான்..அதில் அழுந்திவிடக் கூடாது.


ஆரம்பநிலையில் ’வாழ்க்கையே வெறுமையா இருக்கு. ரொம்ப போரடிக்குது.என்ன செய்யறதுன்னே தெரியலே ’இப்படி ஓர் எண்ணம் வந்தால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிய வேண்டும். என்ன செய்தால் வெறுமை ஒழியும், எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்று நமக்குநாமே டிடெக்டிவ்வாக மாறி கண்டு பிடிக்க வேண்டும்.

மாறாக மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டால் பிரச்சினை தீராது. மாறாக அதிகரிக்கவே செய்யும்.யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும். கணவனோ, மனைவியோ, பெற்றோர் அல்லது நண்பராக இருக்கலாம். அப்படி பேசினால்தான் மன பாரம் குறையும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.

சரி, பிறருக்கு மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் நாம் என்ன செய்யலாம்?

அவர்களோடு மனம் விட்டுப் பேசவேண்டும். மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்கள், பிறருடைய அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். நல்ல விதமாக யாரவது நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா? என்று ஏங்குவார்கள்.

என்ன....அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர இனிமேல் உதவுவீர்களா?

(தொடரும்)

நன்றி; கருத்து நோ ப்ராப்ளம் -- (சிபிகே சாலமன்) நூலில் இருந்து

4 comments:

  1. தொடரும்னு போட்டுட்டீங்களே

    ReplyDelete
  2. நல்ல விஷயம்...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  3. \\தமிழ்நெஞ்சம் said...

    தொடரும்னு போட்டுட்டீங்களே\\


    இன்னும் கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியே
    தொடரும் போட்டிருக்கிறேன்...
    (மன அழுத்தம் தொடராது!?!?!?)

    ReplyDelete
  4. \\வேத்தியன் said...

    நல்ல விஷயம்...
    பகிர்வுக்கு நன்றி...\\

    கருத்துக்கு......நன்றி

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)