"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 7, 2009

துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

தீக்குச்சியை பற்ற வைக்கிறீர்கள். அது எரிந்து கொண்டிருக்கிறது.
காற்றடிக்கிறது. தீக்குச்சி அணைகிறது

அதே சமயம்..

உலைகளில், அடுப்பில், தீ எரிந்து கொண்டிருக்கிறது.

காற்று வீசப்படுகிறது.

தீ மேலும் நன்றாக பாதுகாப்பாக எரிகிறது.

தீக்குச்சியை அணைத்த அதே காற்று,
சூழ்நிலையை பலப்படுத்திய பின் தீயை வளர்க்கிறது.


துவக்க நிலையில்..

உங்கள் யோசனைகள் திட்டங்கள் முயற்சிகள் சூழ்நிலைகளினால்,
அல்லது மற்றவர்களால் பாதிக்கப்படலாம்.

அதைக் கண்டு மனம் தளர்ந்து, அத்துடன் அக் காரியத்தை அதோடு விட்டுவிடாதீர்கள்


அந்த திட்டம், எல்லா வழிகளிலும் உங்களால் யோசிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்பொழுது, அசாதாரண சூழ்நிலை அமைந்தால் ஒழிய பின்வாங்க வேண்டியதில்லை

மனம் தளராமல் கூடுதல் அக்கறையுடன், சரியான வழியில் உழைப்பைச் செலுத்துங்கள்.
உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இலக்கை அடைவது நிச்சயம்.


குறிக்கோளை அடைய.. துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

நன்றி; கருத்து ,அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து

4 comments:

  1. // துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

    பல சாதிக்க துடிக்கும் மக்களின்(நான் உட்பட) முக்கிய பிரச்சனை துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சுவது, அதனால் பல எதிர்பார்புகள் காணாமல் போய்விடுகிறது.

    துவக்க நிலை என்பது குழ்ந்தை போல பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும் இல்லையெனில் அக்குழந்தை இந்த சாமுதாய ஒட்டத்தில் காணாமல் போககூடும்.

    //உங்கள் யோசனைகள் திட்டங்கள் முயற்சிகள் சூழ்நிலைகளினால்,
    அல்லது மற்றவர்களால் பாதிக்கப்படலாம்//
    அதுக்குதான் ஒரு கூட்டமே அலையுதே!

    ReplyDelete
  2. \\அதுக்குதான் ஒரு கூட்டமே அலையுதே!\\

    அதை எதிர்கொள்ளும் தைரியமும், அதே குணம்
    நம்மிடம் இருக்கக்கூடாது என்பதற்குமே இது போன்ற
    சிந்தனைகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அட நானெல்லாம் பதிவெழுதுறதே அதிசயம்தானுங்கோ!!!எதிர்ப்ப கண்டு அஞ்சீயிருந்தா முடியுமா??? ஹ ஹ..

    நல்ல தன்னம்பிக்கை டானிக்...

    ReplyDelete
  4. \\எதிர்ப்ப கண்டு அஞ்சீயிருந்தா முடியுமா??? ஹ ஹ..\\

    துணிவுக்கு பாராட்டுக்க்ள்..கடைக்குட்டி

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)