"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Thursday, September 2, 2010

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

Wednesday, September 1, 2010

இதுதான் திருப்பூர்......2

திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

Tuesday, August 17, 2010

படித்ததில் பிடித்தது -- 17/08/2010

காசிக்குப் போவதற்கு முன்பு ஹரித்துவார், ரிஷிகேஷ் இரண்டிற்கும் போயிருந்தேன். கும்பமேளா நேரம். ஹரித்துவார் வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இளம்பெண்ணைப் போல புரண்டு ஓடும் கங்கை நதியை ஆசைதீர பார்த்துக்கொண்டு இருந்தேன்.

Thursday, July 22, 2010

ஆழ்மனமும்.. வெளிமனமும்..

மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

Thursday, July 15, 2010

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

தியானம் செய்தால் என்னென்னமோ நடக்கும் என்கிறார்கள். நமக்கோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. , புரியாத மாதிரியும் இருக்கு. தியானம் செய்தா நம் உடலுக்கும், மனசுக்கும் என்ன நன்மை அப்படின்னு கேள்வி வரும்போது இந்த மனசு இருக்கிறதே அது எதையும் நம்ப மாட்டீங்குது :))

Wednesday, July 7, 2010

நீங்கள் இடது மூளைக்காரரா?, வலது மூளைக்காரரா?

நமது மூளையை முன்மூளை, நடுமூளை,பின்மூளை என பகுக்கலாம். அதில் முக்கியமாக முன்மூளைப்பகுதி எனப்படும் இரு அரைவட்டப் பகுதிகள் உணர்தல், மொழி, சிந்தனை போன்றவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதிகள் இடதுமூளை, வலது மூளை எனவும் அழைக்கப்படுகின்றன.

Thursday, May 27, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி நான்கு

நம் மனதிற்குப் பிடிக்காத உறவினர்கள், நண்பர்கள், பகைவர்கள் உள்ளிட்டவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைத்து ஆத்திரப்படுதல் சநதிப்பவர்களிடமெல்லாம் அவர்களைப்பற்றி பேசிக் கோபத்தை கொட்டித்தீர்த்தல் என்பது தவிர்க்க வேண்டியதில் நான்காவது ஆகும்.

'நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
'   குறள்-108

என குறள் ஆசான் சொன்னதை நினைவில் கொள்வோம்.

அதோடு மட்டுமில்லாமல்

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
’.      குறள் 152

'ஏதோ ஒரு தீயகுணம் அதிகப்பட்டதன் காரணமாக, (அல்லது நமது கர்மவினை காரணமாக) பிறர் நமக்குச் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது உயர்ந்த பண்பு.  உடனுக்குடன் அந்த துன்பத்தையும் அதைச் செய்த மனிதரையும் நம் நினைவில் இருந்து அகற்றி விடுவது அதைவிட உயர்ந்த பண்பு'.என்றும் சொல்லி இருக்கிறார்.

பிறரை எச்சரிக்கை செய்யும் பாணியில் சொல்வது என்பது சரிதான், அதுவே நம் மனதைத் தாக்கக்கூடாது என்பதே இதில் முக்கியம்.துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது என்பதே நம் மனதின் சமநிலை பாதிக்காமல் இருக்கத்தான்.

பிடிக்காத மனிதர்களை நினைக்கும் நேரம் எல்லாம் வீணான நேரம். அவர்களைப் பற்றிப் பேச செலவிடும் ஆற்றல் வீணான ஆற்றல்.  திரும்பத்திரும்ப அவர்களை நினைப்பதால் அவர்களைப் பற்றி பேசுவதால் நமக்கு ஏற்படும் மனப்பதிவு,  நமக்கு மன உளைச்சலையும் உடல் உபாதைகளையும் உண்டாக்கும் ஆதலால் இதைத் தவிர்ப்போம் மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்வோம்.


”நமை தூற்றிப் பொறாமையினால் பிறர் பழித்தால்
நம் வினையே வெளிப்படுதலாக எண்ணி
சுமை மனதில் கொள்ளாது அமைதி கொள்வோம்
சொற்சூடு அளிப்பவர்க்கு வாழ்த்து சொல்வோம்
இமை கண்ணைக் காப்பது போல் இறை எவர்க்கும்
எத்துன்பத்துக்குள்ளும் காவலாக
அமை(ந்த) நியதி எப்போதும் மறத்தல் கூடா
அச்சமில்லை அச்சமில்லை அருட்சுடர் நாம்.”

- வேதாத்திரி மகரிஷி ஞானக்களஞ்சியம் பாடல் 602

Tuesday, April 27, 2010

விதியை வெல்ல வேண்டுமா ???

விதியும் மதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அவற்றைப் பிரிக்க முடியாது. மேலோட்டமாய்ப் பார்த்தால் எதிர் எதிர் அம்சங்கள் போல் தெரியும். ஆனால் உண்மையில் அப்படி அல்ல.

Friday, March 12, 2010

நித்தமும் ஆனந்தம்...

பழைய கவலைகளைத் திரும்பவும் நினைவுபடுத்தி அசைபோடுவதும் ’செப்டிக் டேங்க்’ வரை போய் மக்கிப்போன மலத்தைத் திரும்பவும் மலக்குடல் வழியே இழுத்து வந்து வாயில் வைத்து அசைபோடுவதும் ஒன்றுதான்.

Tuesday, March 9, 2010

மனதை உற்சாகமாய் வைத்துக்கொள்ள.....பகுதி மூன்று

வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருள்களை வாங்க நகரில் உள்ள டிபார்மெண்டல் ஸ்டோர்-க்கு மனைவியுடன் சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாகத் தேடித்தேடி எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் எல்லா பொருள்களையும் எடுத்துக்கொண்டு பில் போடும் இடம் வந்தேன்.

Thursday, February 4, 2010

எதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)

எதிர்காலம் குறித்த அச்சம்

எதிர்காலத்தை எண்ணி எந்த நேரமும் அச்சம் கொள்வது.. அவநம்பிக்கை கொள்வது, மனதை விட்டு அகற்ற வேண்டியது அவசியம்.

எதிர்காலத்தில் நாம் எப்படி வரவேண்டும், வாழவேண்டும் என திட்டமிடுதல், அதன்படி வாழ்தல் என்பது வேறு. ஆனால் எதிர்காலத்தில் எப்படி ஆவோம், அல்லது வாழ்வோமோ என்ற அச்சம் அறவே கூடாது.

இந்த அச்சம் ஏன் வருகிறது?. போதுமான விளக்கமும், விழிப்பும் அறிவுக்கு கிடைக்காததே..

விதியின் பிடியில், மாயையின் பிடியில், மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்கிறோம். எந்தவித திட்டமிடுதலும் இல்லை. ஆனால் வருமானம் வாடகை, வட்டி, தரகு என்றோ அல்லது தொழில் நல்ல முறையில் நடப்பதாலோ வருமானம் வந்து குவியும்.

அப்போது இந்த பணம் ஏன் நமக்கு வருகிறது.? எந்த வழியில் வருகிறது.? இதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்றாலே நாம் விதியின் பிடியில் இருக்கிறோம் என்று பொருள்.

"கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை
எனும் தெளிவும் இலார் " என்பார் பாரதி.. வாழ்வில் துன்பம், கஷ்டம் வரும்போது இது ஏன் வந்தது என சிந்திக்க தெரியாததால்தான் அப்படியே வாழ்கிறோம்.

இதனால் எதிர்காலம் குறித்த அச்சம் நிச்சயம் வரும்.

இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல..ஜாதகமும் காரணம் அல்ல.

பெரும்பாலும் நாமும், பெற்றோர் வழியிலான வினைப்பதிவு தொடருமே காரணம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வினைப்பதிவுடன் கூடிய நமது வாழ்க்கை, ஒரு சேமிப்பு வங்கி கணக்குக்கு அப்படியே ஒப்பிடலாம்.

பணம் போட்டால் பதிவு, எடுத்தால் பதிவு, போட்ட பணத்திற்கு வட்டி வந்தால் வரவுப்பதிவு, குறைந்த பட்ச இருப்பு இல்லையென்றால் அபராதக் கட்டணம் பற்று பதிவு.

கற்பனை செய்யுங்கள். சில இலட்சங்கள் இருப்பிலிருந்தால் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் கொஞ்சநாள் கழித்து இருப்பு குறைந்து அபராதம் வரும், மாறக குறைந்த பட்ச இருப்புதான் என்றால் ஒரு முறை பணம் எடுத்த உடனே அபராதப்பதிவுதான். இதுதான் வினைப் பதிவு, செயல்விளைவுத்தத்துவம் எல்லாம் :))

ஆக வங்கிக் கணக்கில் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பது நம் கையில் உள்ளது, நமக்கு வேண்டியது வட்டி வரவா அல்லது அபராதமா என நாம் தீர்மானிப்போம். இதுதான் முயற்சி..

எதிர்காலம்(வினைப்பதிவுகளின் இருப்பு) இயற்கையின் கையில் உள்ளது. அது எந்த அதிசயத்தையும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழத்தலாம். எந்த அற்புதத்தையும் நம் வாழ்வில் உருவாக்கும்.

அதேசமயம் எதிர்காலம் என்பது நமது அறிவு, திறமை, நம்பிக்கை, முயற்சி, இயற்கையின் ஒத்துழைப்பு போன்ற பலவித அம்சங்களால் தீர்மானிக்கப்படும். அற்புதமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மனதுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாகும்.

நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ண்ங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதற்கு பெயர் நம்பிக்கை அல்ல. என்னைப் பொறுத்த வரை இதுவே வாழ்க்கை கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.

வாழும் நுட்பத்தை அறிந்து கொண்டு உங்கள் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும், மனதின்ஆற்றல் பெருகும். உற்சாகமாக இருக்கலாம்.

Tuesday, February 2, 2010

மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள.. பகுதி ஒன்று

கடந்த காலத்தில் நமது வாழ்வில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து வருந்துவது மனத்திலிருந்து எடுத்தெறிய வேண்டிய தொல்லைகளில் முதன்மையானது.

நம் ஒவ்வொருவருக்கும் எதாவது ஒருவகையில் நம் மனதிற்கோ, உடலுக்கோ துன்பம் தரும் நிகழ்வுகள் நடந்திருக்கும்.. நம்மை காத்து வளர்த்த தாய்,தந்தை, நெருங்கிய உறவினர் மறைந்திருக்கலாம்.

தொழில் சூழ்நிலைகளினால், பல்வேறு காரணங்களினால் நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம். மிகவும் நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்,

பிறர் நம்மை புரிந்து கொள்ளாமல் அவமதித்திருக்கலாம்,

இந்த விசயங்கள் எல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாக, ஒரு அனுபவமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அளவில் ஆராய்வதோடு, உணர்ந்து கொள்வதோடு, யோசித்து முடிவெடுப்பதோடு நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

மாறாக நினைத்து நினைத்து வருந்துவது, கவலைப்படுவது என்பது நமது மனம் நிகழ்காலத்தில் இயங்குவதை தடுத்து இறந்தகாலத்தில் சஞ்சரிக்கும் நிலையையே ஏற்படுத்தும்.

விளைவு இனிமேல் நடக்க வேண்டிய செயலில் நம் கவனம் சிதறும். நமது செயல்வேகம் குறையும். உறவுகளில் சிக்கல்கள் நம்மால் வரலாம். பலன் இதிலும் இன்னும் நட்டம், இழப்பு, இந்த நிலை நமக்கு தேவையா? என சிந்திப்போம். 

மீண்டும் மீண்டும் அதை நினைத்து வருந்துவதால் நேரம் வீணாவதோடு மனம் இன்னும் பல்வீனமடைகிறது. அது அதிகமாகிறபோது அது உடல் நோயாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம்.


ஏனெனில் நடந்து முடிந்த ஒரு செயலை யாராலும் மாற்ற முடியாது. என்ன வருத்தப்பட்டாலும் நடந்தது நடந்ததுதான். போனது போனதுதான். அதிலிருந்து வெளியே வந்தால் ஒழிய அடுத்த கட்டத்திற்கு நம்மால் முன்னேற முடியாது



இதற்கு மனதை வேறு பல நல்ல வழிகளில் திருப்பலாம். எந்த வழி என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

அருள்கூர்ந்து, நடந்து முடிந்த துன்ப அனுபவங்களை மனதிலிருந்து அகற்றுங்கள். இதுவே பலவழிகளிலும் நாம் முன்னேற வழி.

வாழ்த்துகள்

Wednesday, December 2, 2009

வெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்

A winner is always a part of Answer. A loser is always a part of the problem

சோப்பு தயாரிப்பு நிறுவனத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட பேக்கிங் பிரிவில் தவிர்க்கவே முடியாமல் ஒரு சில காலி உறைகளும் பேக்கிங் ஆகி நிறுவனத்திற்கு தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. அலுவலகத்தில் பலகட்ட/பலமட்ட ஆலோசனைகள் பயன் தரவில்லை.

அப்போது ஒரு தொழிலாளி ”இதற்கு எதுக்கு இவ்வளவு சிரமப்படுறீங்க, ஒரு ஃபேன் வாங்கி நிக்க வச்சா போதும், காலி உறை வெளியே விழுந்து விடும்” என்றார்.. இவர் ஒரு வெற்றியாளர். part of answer

A winner always has different Programmmes, A loser always has so many excuses

வெற்றியாளன் எந்த கடினமான பொறுப்பைக் கொடுத்தாலும், அதை எளிதாக நிறைவேற்ற பல வழிகளை சிந்தித்தபடி இருப்பான். தோல்வியாளனோ ஒருவேளை பொறுப்பு நிறைவேறாவிட்டால் அதற்கான காரணம் என்ன? என சொல்லி தப்பிக்கலாம் என சிந்திப்பான்.

A winner says"Let me do it for you". A loser says,"That is my not job"

வெற்றியாளன் எந்தப் பணியைக்கொடுத்தாலும் “ உங்களுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா? என உற்சாகமாக ஏற்றுக்கொள்வார் தோல்வியாளரோ "இது என் வேலை அல்ல, இதற்கு வேறு ஆளைப் பார்" என தப்பிக்கவே முயல்வான்.

A winner sees an answer in every problem; A loser sees a problem in every answer

வெற்றியாளன் ஒவ்வொரு சிக்கல்களிலிருந்தும் ஒரு தீர்வைக் கண்டு பிடிப்பான். தோல்வியாளனோ ஒவ்வொரு தீர்வுக்குள்ளும் புதிய சிக்கல் ஒன்றைக் கண்டுபிடித்தபடியே இருப்பான்.


A winner ever says,"It may difficult but it is possible". A loser ever says,"It may be possible but it is too difficult"

வெற்றியாளன் "இது கடினமான பணியாக இருந்தாலும் எப்படியும் வெற்றி பெறலாம்" என்பான். தோல்வியாளன் "வெற்றிபெறலாம்தான். ஆனால் இத்தனை பிரச்சினைகள் உள்ளன. இதனால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்பான்.

உங்களிடம் உள்ள சிந்தனைப் போக்கு எத்தகையது என பாருங்கள். அது வெற்றியைத்தருவதா தோல்வியைத்தருவதா என பிரித்து ஆராயுங்கள்
உங்களுக்கு வெற்றி என்பது சாதரணமாகி விடும்.

என்ன செய்வீர்களா :))

Tuesday, November 17, 2009

பிதற்றல்கள்.. செக்ஸ் குறித்தான... (17-11-2009)

கொஞ்ச நாளா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது.. சரி இன்னும் வலுப்பெறட்டும் என விட்டுவிட்டேன்.


மனதில் தோன்றியதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்


கலவிக்கு சற்றுமுன்...
கலவியின்போது...
கலவிக்குப் பின்....

அதன் பின் அடுத்த நாள்...

உங்கள் மனநிலை என்ன?

உங்கள் துணையோடு(ஆண், பெண் இருபாலருக்கும் மன உறவு எப்படி இருந்தது.?

பின்னூட்ட நிபந்தனைகள்

1)இதில் அங்குபடித்தது, இங்கு கேட்டது இது எல்லாம்  எழுத வேண்டாம்

2)முழுக்க முழுக்க உங்களது சொந்த மனம் குறித்தான அனுபவங்களை மட்டும் எழுதுங்கள் (உடல் அனுபவத்தை நான் கேட்கவே இல்லைங்க சாமிகளா)

3)திருமணமானவ்ர்கள், திருமணம் ஆகாதவர்கள், குறுக்குத்தொடர்பு உள்ளவர்கள் எல்லோருமே பின்னூட்டமிடலாம்.

4)கூச்சமா இருக்கா.

கவலையே படவேண்டாம், முழுக்க முழுக்க அனானி என்ற பெயரிலேயே பின்னூட்டமிடுங்கள், அந்த வசதி இந்த இடுகைக்கு  மட்டும் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

5)நான் இடையில் கருத்து தெரிவிக்கமாட்டேன்.

6)ஆபாசம் தொனிக்காமல் தகவல் தெரிவிக்கும் இயல்பான தொனியில் பின்னூட்டங்கள் இருத்தல் வேண்டும்,

7)வக்கிரமான பின்னூட்டங்கள் வந்தால் நீக்கப்படும்.

இது கலவி குறித்த விழிப்புணர்வுக்கான இடுகை

ஓட்டுப்போடுங்கள், கூடவே உங்கள் நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள்


கலவி  என்றால் என்ன என தெரியாதவர்கள் வெளியேறவும் , நன்றி

காத்திருக்கிறேன்......உங்களுக்காக

***************************************************

டிஸ்கி: இந்த இடுகையின் நோக்கம் கலவி நம் மனதில் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.? கலவியில் மனம் நிறைவு பெறுவது எப்படி?,  இதில் துணை தவிர்த்து நம் பங்கு என்ன? இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற சிந்தனையைத் தூண்டுவதே
****************************************************

Tuesday, November 10, 2009

மனிதன் ஏன் மாமிசம் சாப்பிடக் கூடாது?

மனிதன் அசைவம் சாப்பிடலாமா கூடாதா இது இன்னும் தீர்வு இல்லாத கேள்வி, இது தவறு என நான் நினைக்கிறேன்.

ஒரே ஒரு கருத்துதான் நான் சொல்ல விரும்புவது

மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் ஆறாவது அறிவு

அதென்ன ஆறாவது அறிவு?

தோல், கண், காது, மூக்கு, வாய் என்ற புலன்கள் மூலமான ஐந்து உணர்வு, அறிவு பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொது,

ஆறாவது அறிவு, என்பது சிந்தனை, மனம்

சிந்தனை மலர்ந்து அதன் விளைவு

1)பிற உயிர்களின் இன்பதுன்ப உணர்வுகளை உணரும் ஆற்றல், (எனக்கு வலிப்பதுபோல் அவனுக்கும் வலிக்கும்)

2)உடலின் கருவிகளுக்கு சூழ்நிலைக்கேற்ப உதவ உபகருவிகள் செய்து பயன்படுத்துதல், (காலுக்கு உதவியாக வாகனங்கள்,)

3)செயற்கையாக இயற்கையானவற்றை அருவி,ஏரி,தீவு போன்று உருவாக்கும் ஆற்றல்

4)குகைகளைப்போல் அல்லாது விருப்பப்படி வாழும்வகையில் வீடுகளை உருவாக்கி அதில் வாழும் ஆற்றல்

5)உணவுக்கு தேவையானவற்றை உணவுதானிய, தாவர வகைகளை இயற்கை நமக்கு வழங்குவதை விட பலமடங்கு விவசாயம் செய்து பெருக்கும்
ஆற்றல்.

இத்தனையும் நமக்குஇருக்கிறது ஆறாவது அறிவாக

புலி வீடும் கட்டாது, விவசாயம் பண்ணாது, புலி உயிரினம் தோன்றிய காலம்தொட்டு பிற உயிரினங்களை கொன்றுதான் சாப்பிடும்,
நமக்கு வலிப்பதுபோல் அதற்கும் வலிக்கும் என சிந்திக்க தெரியாது. அதனால் அது செய்வது சரியே

ஒரு நெல்லை பல நெல்லாக்கும் வித்தை தெரிந்த நாமும் புலி செய்வதையே செய்தால் மனிதன் அல்ல, ........@#$$$%^& .தெய்வம் என்றுதான் சொல்ல வேண்டும்

துருவப் பிரதேசத்தில், பாலைவனத்தில் இருப்பவன் என்ன செய்ய? என்றால் அவனுக்கு முடிந்தால் நீங்கள் உணவுப்பொருள்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது அவன் சாப்பிட்டுவிட்டு போகிறான், உணவுப்பயிர்கள் விளையும் இடத்தில் இருக்கும் நீங்கள் ஊர்வன, பறப்பன இவற்றில் கப்பல், விமானம் மீதி
அனைத்தையும் ஏன் சாப்பிட வேண்டும்?

குர்-ஆன் தந்த நபிப் பெருமான் குர்-ஆன் தரும்முன் மாமிசம் உண்டாலும், அறிவு ஞானம் பெற்று குர்-ஆன் ஐ தந்தபின் அசைவம் முற்றிலுமாக துறந்து வாழ்ந்தார்.

இந்தத் தகவலை முஸ்லீம் நண்பர்கள் உறுதிப் படுத்தினால் நல்லது. மகான்களின் வாழ்க்கையைப் பின்பற்றினாலே போதும்.

அவர் விதிவிலக்காக சொன்னது நம் செளகரியத்தை முன்னிட்டு அத்தியாவசியமாகி விட்டது.

மனிதன் மனதிற்கும், நாக்குக்கும் அடிமை, இதுதான் உண்மைகாரணமே தவிர பிற உயிரை மதிக்க வேண்டும் என நினைத்தாலே நமது உணவுப் பழக்க வழக்கம் மாறிவிடும். மதங்களும், சாதியும் இந்த விசயத்தில் சப்பைக்கட்டுகளே :))

சந்திப்போம், சிந்திப்போம்

Saturday, October 10, 2009

உருவ வழிபாடு ஏன்?

உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, உடல்வலிவு, சுகம், செல்வம், இவ்வேழு சம்பத்துக்களும் சரியாக இருந்தால்தான் ஒரு மனிதன் வாழ்க்கையில் தங்கு தடையின்றி எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொள்ளமுடியும்.

இது கருவமைப்பின் மூலமாகவோ அல்லது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வின் காரணமாகவோ ஒவ்வொருவருக்கும் ஒன்றில் சிறப்பு இருக்கும். ஒவ்வொன்றில் குறைவு இருக்கும்.

குறைவாக உள்ளதை சரி செய்து, சமப்படுத்திக் கொள்வதற்கு அவரவர்கள் அறிவினாலேயே மனதில் சங்கல்பத்தின் மூலம் திடப்படுத்தி, பல தடவை அதையே எண்ணி எண்ணி குறைபாட்டைக் களைந்து நிறைவு செய்து வருவதற்கு, அறிவிற்குத் துணை செய்வதற்கு பூஜாவிதிகள் என்பதை முற்காலத்தில் ஏற்படுத்தினார்கள்.

பூஜாவிதி என்பது சடங்குகள் என்றாலும் எந்தக் குறைபாடு மனிதனிடம் இருக்கிறதோ, அந்தக் குறைபாட்டை அவனே நீக்கிக் கொள்வதற்காக மனஎழுச்சி, மனோதிடம், கற்பனையாக இருந்தாலும், பலதடவை செய்து செய்து இம்மாதிரி எனக்கு வேண்டும் என்று எண்ணும்போது முனைமனமானது, அடிமனதோடு தொடர்பு கொள்ளும்., அடிமனமானது பிரபஞ்சம் முழுவதும் உள்ள ஆற்றல் களத்தோடு தொடர்பு கொண்டு, எங்கேயிருந்தாலும் இவனுக்கு வேண்டியது தானாக வந்து சேரும் அளவுக்கு உண்டாக்கும்.

இயற்கைச் சட்டம் என்ன என்றால் fraction demands totality supplies

இயற்கையிலிருந்து துண்டுபட்டுள்ளதே ஜீவன், மனிதன்


முழுமுதற்பொழுதாக உள்ள இறைநிலை, அறிவு என்ற நிலையில் பிரபஞ்சம் முழுவதும் கலந்து, உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றிலும் நிரம்பி இயங்கி கொண்டிருக்கிறது.

அதனால் எங்கே யாருக்கு என்ன தேவைப்பட்டாலும், விரும்பினாலும் அது கிடைக்கத்தான் வேண்டும்


ஆனால் விரும்புவர்கள் மனதை அதற்குரிய முறையில் அழுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், தகுதியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

---வேதாத்திரி மகரிஷி,

தொடரும்



டிஸ்கி; வேதாத்திரி மகரிஷி அவர்களின் இந்த கட்டுரை எளிமையாக அனைவருக்கும் புரியும்வண்ணம் அமைந்துள்ளதாக நான் எண்ணுவதால் இன்னும் சில பகுதிகள் தொடரும்.

Wednesday, September 23, 2009

பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய்

காலையில் வேலைக்கு கிளம்பும் அவசரம், குளித்துவிட்டு தயாராகி காலை உணவுக்காக காத்திருப்பேன், குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் மும்முரமும் சேர்ந்து கொள்ள, கிடைக்கும் பதினைந்து நிமிட இடைவெளியில் இணயத்தில் மேய்வது வழக்கம்,






அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்னவள் வந்து "அப்பா தோசையப் பிச்சுப் போட்டுக்கொடுங்க" என்று அழைக்க

"அம்மாகிட்ட போயேன்,"


"ஏன் உன்னால பிச்சுப் போட்ட்டுக்கொடுக்க முடியாதா?"


"இல்ல, சுவாரசியமா படிச்சிட்டு இருந்தேன், அதனாலதான்ன்..."


"இந்த வேலை எல்லாம் இங்க நடக்காது, பொத்திக்கிட்டு என்ன செய்யனுமோ அதைச் செய், இந்த பம்மாத்தெல்லாம் இங்க வேகாது...."


"சரிங்ங்ங்..."

சட்டென சின்னவளின் தட்டில் இருந்த தோசையை பிய்த்து போட்டேன், மகளின் முகத்தில் உருவான புன்முறுவல் மனதிற்கு சந்தோசமாக இருந்தது.

என் மகளுக்கு ஒரு இனிய நிகழ்வை கொடுத்த நிறைவு ஏற்பட்டது.

மேற்கண்ட உரையாடல் எனக்கும் யாருக்கும் இடையே நடந்திருக்கும், சரியாக ஊகித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளலாம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
'அம்மாகிட்ட போயேன்' என்று சொல்லலாம் என மனதுள் எண்ணம் எழுந்துவிட்டது, வாய்வரை வந்து சொல்லாக மாறவேண்டியதுதான் பாக்கி...

உள்ளிருந்தே ஒரு குரல் என்மனதை கேள்வி கேட்க ஆரம்பித்தது, முடிவு என் மனம் வாலைச் சுருட்டிக்கொண்டு அதன் சொன்னபடி கேட்டது, விளைவு நீங்கள் அறிந்ததே ,

இது அனைத்தும் நடந்தது விநாடிக்கும் மிகக்குறைவான நேரத்தில்தான்.


இதுபோல உங்களாலும் மனதை கட்டுப்படுத்த முடியும், மனம் கட்டுப்படும்.


பல்வேறு செயல்களின் ஊடேயும் இப்படி மனதைக் கேள்வி கேட்டுப்பாருங்கள்,

விளைவுகளை பின்னூட்டமிடுங்கள், சாதக பாதகங்களை அலசுவோம்.

சிந்திப்பதுடன் செயல்படுவோம்

வாழ்த்துக்கள்,

Friday, September 11, 2009

பாட்டுக்கேட்டுக்கிட்டே வேலை செய்வது.....

ஏற்றுமதி பனியன் தயாரிப்பு தொழிலில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. நிட்டிங், டையிங்,பிரிண்டிங், எம்ப்ராய்டரி இதுபோல இன்னும் பல துறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் தேவையான பிரிண்டிங் வரைபடத்தை கணினியில் மேம்படுத்தித் தருதல், அங்கு பணிநிமித்தம் சென்றேன், காலை 10.00 மணி இருக்கும் ,

மூன்று கணினிகள் உள்ள அலுவலகம், தொழிற்சாலையும் அதுதான்:))

எனக்குத்தேவையான டிசைனை மேம்படுத்த சென்றிருந்தேன். கணினியின் பின்புலத்தில் சினிமா பாடல்கள் பாடிக் கொண்டிருந்தது. எல்லா பாடல்களுமே நான் அதிகம் கேள்விப்படாதவை, எல்லாமே புதியவை.

சற்று சத்தமாகவே இருந்தது."என்ன தம்பி, வேலை செய்யும் போது கொஞ்சம் மெதுவாக சத்தம் வைக்கலாம் அல்லவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே சத்தம் குறைத்து, பின்னர் வேலையில் ஈடுபட்டார்.

வேலையின் சலிப்பை போக்கிக்கொள்ள பாட்டுக்கேட்பதாக எடுத்துக்கொண்டேன்.

அந்த நபர் பாட்டை ஒழுங்கா கேட்பாரா !!

இல்லை வேலைய ஒழுங்கா செய்வாரா !!






சரி நான் கார் ஓட்டிப்பழகும்போது, பாட்டுக்கேட்டால் எப்படி கார் ஓட்டமுடியும், ரோட்டைப்பார்த்து எப்படி காரோட்டுவது என்று பயிற்றுவிக்கும் நண்பருடன் சண்டைக்கே போய்விட்டேன்.

ஆனால் இப்போது கார் ஓட்டும்போது ஏதேனும் பாட்டோ, உரையோ ஒலித்த வண்ணம் தான் இருக்கிறது.

இதெல்லாம் சரியா, தவறான்னு மனசு யோசிக்குது :)))

நீங்க எப்படி ?

உங்க மனசுல தோணுவதை சொல்லுங்க, அலசிப் பார்ப்போம் :)

Monday, August 31, 2009

ஜோதிடமா? முன்வினையா? முயற்சியா?

நம் முன்னேற்றத்தை முடிவு செய்வது சோதிடமா? முன்வினைப்பதிவா?, முயற்சியா? விதிப்படிதான் எல்லாம் நிகழும் என்றால் முயற்சி எதற்கு?


இதை புரிந்து கொள்ள முதலில் நமது வாழ்க்கையை, மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை, மனம் கடந்த வாழ்க்கை என இருவிதமாக பிரித்துப்பார்ப்போம்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது அஞ்ஞான வாழ்க்கை , இவ் வாழ்க்கை இகலோகம் எனப்படும் இவ்வுலகத்தை சுற்றி, சார்ந்தே அமையும்.

கல்வி, தொழில், மனைவி, மக்கள், உறவினர் சமுதாயம், பொருள் சம்பாத்தியம், அந்தஸ்து, அதிகாரம், புகழ் என இப்பூமியைச் சுற்றியே பின்னப்பட்ட வாழ்க்கை ஆகும்.

மனதிற்கு உட்பட்ட வாழ்க்கை என்பது மூலாதாரம், சுவாதிஸ்தானம், மணிபூரகம்,அனாகதம், விசுக்தி என்னும் ஐந்து ஆதாரத்துக்குள்ளேயே வாழ்வது, அதாவது விசுக்தி என்னும் கண்டத்தைத் தாண்டாத வாழ்க்கை ஆகும்

அத்தகைய கண்டம் கடக்காத அஞ்ஞான வாழ்க்கைக்கு முன்வினைப்பதிவு, முன்னோர் வினை, சோதிடம், என்கணிதம்,வாஸ்து ,விதி, சமுதாயம், தெய்வங்கள் என சகலத்தடைகளும் உண்டு. இவைகளின் பாதிப்பு உண்டு.

இவைகளிலிருந்து விடுபட முயற்சி கண்டிப்பாக தேவை, எதிர்நீச்சல் வெற்றியைத் தரும். இதற்கு தன்னம்பிக்கை முன்னேற்ற பயிற்சிகள், இதர ஆன்மீக அமைப்புகள், வழிமுறைகள் ஓரளவு உதவும், இது குறித்த விழிப்புணர்வும் நமக்கு வேண்டும். இல்லாவிடில் சிக்கலே. இது மனதின் தன்மைக்கு ஏற்ப ஒருவருக்கொருவர் வேறுபடும்.

வினைப்பதிவை நீக்கக்கூடிய வாழும் முறை,பரிகாரம், மனம் சார்ந்த பயிற்சிகள் போன்றவைகளினால் மேற்கண்ட தடைகளை கண்டிப்பாக குறைக்க அல்லது நீக்க முடியும்,

இந்த மனிதப்பிறப்பில், வாழ்வில், நமது தலைவிதியை நம் கையில் எடுத்து முயற்சியால் மாற்றலாம். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல, அதற்கும் மனமே மறைமுகமாக தடையாக இருக்கும். மனமே தலைவிதி எனலாம்.

இந்த மனதிற்கு உட்பட்ட வாழ்க்கைக்கு, முயற்சி நிச்சயம் உதவும்.

இதற்கு மனம் கடந்த வாழ்க்கை முறைக்கு உரிய வழிகளை பின்பற்ற வேண்டும்.





இனி  மனம் கடந்த வாழ்க்கை

மனம் கடந்த வாழ்க்கை என்பது ஞான வாழ்க்கை, இது இகலோகத்தை சார்ந்திருந்தாலும், பரலோகத்திற்குரிய எண்ணத்திலும், முயற்சியிலும் விடாமல் கவனம் வைத்திருக்கும் வாழ்க்கை ஆகும். திருமுறைகள்,மகான்கள் வழிபாடு, தவமுயற்சிகள் என்ற தொடர்புகள் ஏற்படுத்திக்கொண்டு வானத்தை நோக்கிய பயணமாக, வாழ்க்கை இருக்கும். இதில் மத வேறுபாடு கிடையாது.

மனம் கடந்த வாழ்க்கை என்பது விசுக்தி எனும் கண்டம் கடந்த
ஆக்ஞை, சகஸ்தரதளம் என்னும் ஆதாரங்களில் வாழும் தவ வாழ்க்கை ஆகும்.

இந்த ஞான வாழ்க்கைக்கு வந்தோர்க்கு சோதிடம்,விதி, முன்வினைப்பதிவு, சமுதாயம், தெய்வங்கள் போன்ற தடைகள் கிடையாது. மிச்சம், மீதி இருப்பதும் கரைந்து கொண்டே வரும். எந்த பாதிப்பையும் உண்டு பண்ணாது,

இதன் பின்னர் முயற்சி தேவைப்படுமா என்றால் இங்கு முயற்சிக்கு வேலையே கிடையாது, எதிர்நீச்சல் அவசியமே இல்லை. இதற்கு உதவுவதெல்லாம் ஞானியர் தொடர்பு, மந்திர உபாசனை, உடல் ஒழுக்கம், செயல் ஒழுக்கம் ஆகியவையே.

அறிவு தெளிவு அடைய அடையத்தான் அச்சம் விலகும், அத்தனை குழப்பங்களும் நீங்கும்

அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

மகான் ரமணர் மனம் கடந்த நிலையில் வெளிப்படுத்திய இவ் மஹாவாக்கியம் பொருள் இகவாழ்விற்கானதல்ல, இதை இப்புவி வாழ்வுடன் இதை பொருத்தி பார்த்தால் குழப்பமே மிஞ்சும்,

நீங்கள் மனம் கடந்த வாழ்விற்கு தயாராகிறீர்களா? உங்களுக்காக சொல்லப்பட்டதே இது. வினைகள் கழிந்து மேல்நிலை அடைய அடைய, பரலோக வாழ்வு நமக்கு எப்படி வாய்க்கும் என்பது நமக்கு தெரியாது. ஆகவே முயற்சி செய்யாதே, உனக்கு இறைவிதிப்படி எப்படி அமைய வேண்டுமோ, அப்படி அமையும், மெளனமாக இரு என மனதிற்கு சொன்னது

ஆக பெரியோர்கள், ஞானியர் வாக்கினை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டுமானால் அவர்களின் மனோநிலைக்கு நம் மனம் செல்லவேண்டும்.

இல்லையெனில் நம் மனதின் தரத்தைக் கொண்டு எடைபோட்டுப் பார்த்தால் அர்த்தம் புரியாமல் முரண்பாடகத் தெரியும், ஆகவே தெளிவடைவோம். மனதிற்குட்பட்ட வாழ்க்கையில் வெற்றியடைவோம்.

மனம் கடந்த வாழ்க்கைக்கான பாதையில் பயணிப்போம்.

Monday, April 13, 2009

மன அழுத்தமா... டிடெக்டிவா மாறுங்க....

மனிதர்களுக்குத் தோன்றும் விதவிதமான கவலைகளை எந்தவொரு புத்தகத்திலும் (பதிவிலும்) அடக்கிவிட முடியாது. கவலைகளுக்கு முடிவே கிடையாது.

எதைப் பற்றியாவது, சதா யோசித்துக்கொண்டும், கவலைப்பட்டுக் கொண்டும் இருப்பது மனித சுபாவம்.

சின்னச் சின்னதாகத் தோன்றும் கவலைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம் அவை தோன்றும் வேகத்திலேயே காணாமல் போய்விடும்.

பஸ் வருமா, வராதா என்ற கவலை, பஸ் வந்தால் தீர்ந்துவிடும்.பரிட்சையில் பாஸ் ஆகிவிட்டால், பரீட்சை பற்றிய கவலை தீர்ந்துவிடும்.

அதேசமயம் பரீட்சையில் பெயில். அது மூட் அவுட் ஆக்கும் சங்கதிதான்.ஆனால் அடுத்தது என்ன செய்வது என்று சிந்தித்து, அப்போதே அதிலிருந்து மீண்டு விட்டால், எந்த பிரச்சினையும் இல்லை.

மீளா விட்டால்தான் பிரச்சினை, மன அழுத்தம் என்ற விஷயம் இங்கேதான் வருகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டால், மனம் மட்டுமல்ல, உடலும் சேர்ந்தே பாதிப்படைகிறது. அதனால்தான் ”பிரச்சினையா? என்னால் முடியவே முடியாது சாமி” என சோர்ந்து ஒடுங்கி விடுகின்றனர் பலர்.

அதோடு நம் எண்ணங்கள் மாறுகின்றன. நமது சாப்பிடும் முறை மாறுகிறது.தூக்கம் கெடுகிறது. மூச்சு குறுகி விடும். மொத்தத்தில் நம்மை முற்றிலுமாக தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது.

மன அழுத்தம் தாக்கும்போது பயப்படக்கூடாது. உடைந்து போகக்கூடாது


மன அழுத்தம் என்பது ஒரு மூட், மனநிலை. அவ்வளவுதான்..அதில் அழுந்திவிடக் கூடாது.


ஆரம்பநிலையில் ’வாழ்க்கையே வெறுமையா இருக்கு. ரொம்ப போரடிக்குது.என்ன செய்யறதுன்னே தெரியலே ’இப்படி ஓர் எண்ணம் வந்தால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிய வேண்டும். என்ன செய்தால் வெறுமை ஒழியும், எதில் நமக்கு ஆர்வம் இருக்கிறது என்று நமக்குநாமே டிடெக்டிவ்வாக மாறி கண்டு பிடிக்க வேண்டும்.

மாறாக மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டால் பிரச்சினை தீராது. மாறாக அதிகரிக்கவே செய்யும்.யாரிடமாவது மனம் விட்டுப் பேசவேண்டும். கணவனோ, மனைவியோ, பெற்றோர் அல்லது நண்பராக இருக்கலாம். அப்படி பேசினால்தான் மன பாரம் குறையும். புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.

சரி, பிறருக்கு மன அழுத்தம் இருப்பதை உணர்ந்தால் நாம் என்ன செய்யலாம்?

அவர்களோடு மனம் விட்டுப் பேசவேண்டும். மன அழுத்தம் உள்ள பெரும்பாலானவர்கள், பிறருடைய அரவணைப்பை எதிர்பார்ப்பார்கள். நல்ல விதமாக யாரவது நாலு வார்த்தை சொல்லமாட்டார்களா? என்று ஏங்குவார்கள்.

என்ன....அவர்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வர இனிமேல் உதவுவீர்களா?

(தொடரும்)

நன்றி; கருத்து நோ ப்ராப்ளம் -- (சிபிகே சாலமன்) நூலில் இருந்து