"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 17, 2010

படித்ததில் பிடித்தது -- 17/08/2010

காசிக்குப் போவதற்கு முன்பு ஹரித்துவார், ரிஷிகேஷ் இரண்டிற்கும் போயிருந்தேன். கும்பமேளா நேரம். ஹரித்துவார் வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இளம்பெண்ணைப் போல புரண்டு ஓடும் கங்கை நதியை ஆசைதீர பார்த்துக்கொண்டு இருந்தேன்.

Sunday, August 1, 2010

சேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு

திருப்பூர் வலைதள நண்பர்கள் சமீபத்திய சந்திப்பு ஒன்றில் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தை மக்களிடையே பரவலாக சென்று சேர்க்க, வழிமுறைகள் குறித்து வெயிலான் ரமேஷ் அவர்கள் தலைமையில், ஆக்கபூர்வமாக கலந்து உரையாடினோம்.


அது குறித்த விபரம் தினமலர் 01.08.2010

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா 

Saturday, July 31, 2010

இதுதான் திருப்பூர்.....1

பனியன் கம்பெனிகளில் பெரிய நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள் என பலவகையாக இருக்கின்றன. அவற்றுள் பல ஏற்றுமதி நிறுவனங்கள் வரவேற்பறை, பாதுகாவலர் எனத் தனித்தனியாக பலவகையான வசதிகளுடன் இயங்கும் பெரிய கம்பெனிகள். அதேசமயம் ஏற்றுமதி நிறுவனத்திற்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சிறுகம்பெனிகளும் இங்கு நிறைய இயங்குகின்றன.

Thursday, July 22, 2010

ஆழ்மனமும்.. வெளிமனமும்..

மனதை, பொதுவாக அறிவு மனம்(conscious mind), ஆழ்மனம்(Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

Thursday, July 15, 2010

தியானமும் மன அலைச்சுழல் வேகமும்..

தியானம் செய்தால் என்னென்னமோ நடக்கும் என்கிறார்கள். நமக்கோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு. , புரியாத மாதிரியும் இருக்கு. தியானம் செய்தா நம் உடலுக்கும், மனசுக்கும் என்ன நன்மை அப்படின்னு கேள்வி வரும்போது இந்த மனசு இருக்கிறதே அது எதையும் நம்ப மாட்டீங்குது :))

Tuesday, July 13, 2010

உங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....

வேர்ட்பிரஸ் தளத்தில் வலைப்பதிவு வைத்திருக்கும் நண்பர்கள் தங்களின் வலைப்பதிவை எத்தனைபேர் பாத்திருக்கிறார்கள், எந்த நாளில் எந்த இடுகைகள் அதிகம் படிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என புள்ளி விவரங்களை அள்ளி விடுவார்கள். அப்போதல்லாம் அதை வாயைப்பிளந்து கொண்டு கேட்பது மட்டுமே என்னால் முடியும் :)