மானசரோவர் ஏரி கண்களில் பட்டதுமே சிறு குழந்தை போல் உள்ளம் துள்ளியது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். கடலைப் போல் பரந்து விரிந்து கிடந்தது ஏரி. வாகனத்தை விட்டு இறங்கியதுதான் தாமதம். எப்போது மானசரோவரில் நீராடலாம் என்கிற ஆர்வம் அடக்க முடியாததாக இருந்தது.
"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label இமயமலை. Show all posts
Showing posts with label இமயமலை. Show all posts
Thursday, July 21, 2011
Saturday, July 16, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 7
பொதுவாக நியாலத்தில் இருந்து கிளம்பி,(230கிமீ தாண்டி)பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள சாகா என்கிற ஊரில் தங்குவதே வழக்கம். ஆனால் அங்கு இடமில்லை என்று அதற்கு அடுத்ததாக(மொத்தம் 375 கிமீ) டோங்பா என்ற இடத்தில் ஏழுமணிநேரம் ஜீப்பில் பயணித்து தங்கினோம். இடமில்லை என்ற காரணம் உண்மையானதாக எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் சாகா ஊரை கடக்கும்போது அங்கு நிறைய தங்கும் வசதியுடைய கட்டிடங்கள் இருந்தன. ஒருவேளை கட்டணங்கள் அதிகமாக இருந்திருக்கலாம். நமது வழிகாட்டி பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக டோங்பா சென்றிருக்கலாம் என்பது என் கணிப்பு, டோங்பா வசதிகள் மிகக்குறைவாகவே இருந்தது.
Wednesday, July 13, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 6
மலைமீது ஏறினால் அங்கே இதுவரை காணாத பனிபடர்ந்த மலையின் காட்சி என்னைக் கட்டிப்போட்டது. இந்த யாத்திரையில் முதன்முதலாக பனிபடர்ந்த மலைகள், கயிலைநாதனைக் காணச் செல்லும் நமக்கு கட்டியம் கூறுவது போல் காட்சியளித்தன.
Tuesday, July 12, 2011
திருக்கைலாய யாத்திரை பகுதி 5
இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது லேசாக தலைசுற்றல் ஆரம்பித்தது. அப்படியே அமர்ந்தவாறு மூச்சை மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்துவிட்டுக்கொண்டே என்னுள் நடப்பதை கவனித்தேன். மெல்ல காது அடைத்தது. நண்பர்கள் பேசுவது எல்லாம் கேட்பது குறையத்துவங்க, கண்ணுள் பூச்சி பறந்தது. இதெல்லாம் சுமார் 20 முதல் 30 விநாடிக்ள் இருக்கும்.
மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.
மூச்சைக்கவனிக்க ஆரம்பித்துவிட, அப்படியே எல்லாம் அடங்கி உடல் இயல்பான நிலைக்குத் திரும்பியது. இதுவும் உயர்மட்டத்தில் உடல் தன்னைத் தானே சரி செய்துகொள்ளும் தந்திரம்தான். இதற்குப்பின் எந்த இடத்திலும் இதுபோன்ற எந்த அறிகுறிகளும் வரவில்லை.
Thursday, December 30, 2010
பயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு
11.08.2010 அன்று நன்கு ஓய்வுக்குப் பின் எங்களுடன் வந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சமையல் குழுவினருக்கு எங்களுடைய பங்களிப்பாக இயன்ற நன்கொடைகளை கொடுத்தோம் அமைப்பாளர்கள் என்னதான் சேவைக்கட்டணம் பேசி இருந்தாலும், அவர்களின் உழைப்பு நம்ம ஊரைப்போல் காசுக்காக என இல்லாமல் ஒவ்வொரு கணமும் முகம் சுளிக்காமல் எங்கள் முழுமையான பாதுகாப்புக்கும், பயணத்திற்கும் உத்தரவாதம் தந்தார்கள். மகிழ்ச்சியுடன் எங்கள் அன்பை ஏற்றுக் கொண்டனர்.
Thursday, December 23, 2010
இனிய பயணம் - கேதர்நாத்க்கு..15
பிரகாரத்தைச் சுற்றி வந்த பின் கோவிலின் இடதுபுறம் வெளியே உள்ள சிவபிண்டா எனப்படும் ஜோதிர்லிங்கத்தைத் தரிசனம் செய்தோம். வெண்மைநிறத்திலான லிங்கம் அதன் வடிவம் என்ன எனத் தெரியவில்லை. அனேகமாக பிரபஞ்சவடிவமாக இருக்கலாம் (நீ போய் பாத்தியான்னு அங்க யாரு கேட்கிறது) கோவிலின் ஆராவாரமில்லாமல், மிக அமைதியான இடமாக இருந்தது. கண்ணை மூடி உட்கார நேரம் போனதே தெரியவில்லை. (யாரது அது நல்ல தூக்கமான்னு கேட்கிறது)
Monday, December 13, 2010
இனிய பயணம் கேதார்நாத்க்கு - 14
குதிரை பயணம் ஆரம்பத்தில் எனக்கு எளிதாகத் தெரிந்தது. போகப்போக அதன் சிரமங்கள் புரியத் துவங்கின:) குதிரைப் பயணத்தில் மிக முக்கியம் முன்னே பார்த்து ரசிப்பதை விட நாம் கால் வைத்திருக்கும் இடத்தில் கவனம் அதிகம் இருக்க வேண்டும்.
எதிரே வரும் குதிரைகள் உரசும். அல்லது நம் குதிரை செல்லும்போது நமது கால் பக்கவாட்டில் பாறைகள், இரும்பு பைப் தடுப்பில் மோத வாய்ப்பு உண்டு. அதனால் இரண்டு கால்களையும் சமயத்திற்கு ஏற்றாற்போல் உள்ளடக்கி, மேலே தூக்கி சமாளித்துக்கொள்ள வேண்டும். இன்னும் எதிரே மோத வரும் குதிரையை தள்ளிக்கூட விடவேண்டி வரும்:)
எதிரே வரும் குதிரைகள் உரசும். அல்லது நம் குதிரை செல்லும்போது நமது கால் பக்கவாட்டில் பாறைகள், இரும்பு பைப் தடுப்பில் மோத வாய்ப்பு உண்டு. அதனால் இரண்டு கால்களையும் சமயத்திற்கு ஏற்றாற்போல் உள்ளடக்கி, மேலே தூக்கி சமாளித்துக்கொள்ள வேண்டும். இன்னும் எதிரே மோத வரும் குதிரையை தள்ளிக்கூட விடவேண்டி வரும்:)
Thursday, December 9, 2010
இனிய பயணம் - கேதர்நாத்க்கு..13
08.08.2010 அன்று காலையில் கிளம்பி கேதார்நாத் செல்ல ஆயத்தம் ஆனோம். உத்தர்காசியிலிருந்து ஸ்ரீநகர், குப்த காசி வழியாகச் சென்று கேதார்நாத் அடிவாரமான கெளரிகுந்த்-ல் தங்குவதாகத் திட்டம். பயண நேரம் சுமார் 10 மணி நேரம் ஆகலாம் எனத்தெரிந்ததால் காலை உணவை ஏழரை மணி அளவில் முடித்துக்கொண்டு 8 மணிக்குக்கு பேருந்தில் ஏறி கிளம்பினோம்.
Tuesday, November 30, 2010
இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12
பாறை விழுந்த பாதை துண்டிக்கப்பட்ட இடத்திற்கு மறுபுறம் நடந்து சென்றபோது அந்தப்பகுதியில் நிறைய வாகனங்கள் கீழிறங்க வழி இல்லாமல் காத்திருந்தன.
அதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.
அதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.
Tuesday, November 23, 2010
இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..11
குளித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு மெதுவாக வெளியேறி புகைப்படங்கள் எடுத்துவிட்டு பேருந்துகளைப் பார்த்தேன். மூன்று பேருந்துகளே கண்ணில்பட்டன. பார்க்கிங் வசதியெல்லாம் கிடையாது. எனவே தள்ளி மற்ற இரு பேருந்துகளை நிறுத்தி இருப்பார்கள் என நினைத்தேன். அப்போதுதான் நான்காவது பேருந்து வந்து சேர்ந்தது. அதில் இருந்து 50 பேர் இறங்கினர். இருமடங்கு நண்பர்கள் அதில்வர பின்னே வந்த வண்டி வழியில்
பாறைச்சரிவுக்கு அப்பால் மாட்டிக்கொண்டதாகவும் நான்காவது வந்த பேருந்தின் பின்புறம் சுமார் 5 அல்லது 6 தூர வித்தியாசத்தில் பெரிய பாறை விழுந்தது எனச் சொல்ல அதிர்ச்சியாக இருநதது. அதன் உண்மைத்தன்மை மனதில் சுர்ர்ரென உரைத்தது.
பாறைச்சரிவுக்கு அப்பால் மாட்டிக்கொண்டதாகவும் நான்காவது வந்த பேருந்தின் பின்புறம் சுமார் 5 அல்லது 6 தூர வித்தியாசத்தில் பெரிய பாறை விழுந்தது எனச் சொல்ல அதிர்ச்சியாக இருநதது. அதன் உண்மைத்தன்மை மனதில் சுர்ர்ரென உரைத்தது.
Monday, November 15, 2010
இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10
காங்னானி என்ற இடத்தை சென்று சேர்ந்தோம். இங்கு என்ன விசேசம் என்றால் வெந்நீர் ஊற்றுதான்:) எனக்கு வெந்நீர் ஊற்றை முன்னபின்னே பார்த்தது இல்லையா! அதுனால அது எப்படி இருக்கும். தேங்கியிருக்கும் குட்டைபோல் இருக்குமா? நீர் ஆதாரம் கீழே இருந்து வருமா? என்கிற யோசனை எல்லாம் மனதில் ஓடியது. பேருந்தில் இருந்து இறங்கி நண்பர்களுடன் வெந்நீர் ஊற்றைத் தேடிக்கொண்டே ரோடில் நடந்து போனோம். எங்குமே காணவில்லை. விசாரித்ததில் பஸ் நின்ற இடத்திலேயே கடைகள் நிறைய இருந்தன. அதற்கிடையில் மேலே படியில் ஏறிப்போகச் சொன்னார்கள்.
Wednesday, October 27, 2010
இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..9
இயற்கை வைத்தியம் குறித்து எங்களுடன் வந்த டாக்டர் திரு.சுப்ரமணியம் அவர்கள் உரை நிகழ்த்த அனைவரும் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருந்தோம்.சூரியன் மெல்ல மறையத் தொடங்க, நேரம் மாலை 6.45 க்கு மேல் ஆகிவிட்டது. மலைப்பிரதேசத்தில் சூரியன் மறைய நேரம் ஆவதுபோல் உணர முடிந்தது.
சரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.
சரி இனி பேருந்திலேயே தங்க வேண்டியதுதான் என சிந்தனை செய்து கொண்டே சாலையைத் தாண்டி பேருந்துக்கு வந்தேன், ரோடில் வேன் ஒன்று வந்தது.அருகில் உள்ள ஊரிலிருந்து அதுபோல் அடிக்கடி வாகனங்கள் வந்து கொண்டே இருந்தன. சற்று நம்பிக்கையுடன் உயரே பார்க்க வரிசையாக வாகனங்கள் மலைமீது இருந்து இறங்கி வர ஆரம்பித்தது தெரிந்தது.
Wednesday, October 13, 2010
இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..8
ரிஷிகேஷ்லிருந்து கங்கை நதிக்கு செல்லும் வழி, மற்றும் ஊருக்குள் எனக்குத்தெரிந்தவரை இறைச்சி விற்கும் கடைகள் எங்குமே இல்லை. மதுபானக் கடைகளும் இல்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தமிழ்நாட்டில் அரசே மதுக்கடைகளை அக்கறையோடு நடத்துவதும், இறைச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதையும் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. மக்கள் சரியாக இருந்தால் அரசைக் குறை சொல்ல வேண்டியதில்லை:).
Subscribe to:
Posts (Atom)