"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, March 1, 2009

லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்...

லெப்ட்... ரைட்... லெப்ட்...ரைட்

ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பின்போது கேட்கும் ஒலி. இதை இதுநாள்வரை ஒழுங்காக ஒரேசீராக நடைபயில கொடுக்கப்படும் குரலாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.

பதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் நினைவாற்றல் வளர புத்தகம் படித்தபொழுது முழுவிளக்கம் கிடைத்தது.

”கட்டளைக்குக் கீழ்படிந்து நட” இதை பழக்கிவிட்டால் போதும்.நடக்கச் சொன்னால் நடப்பார்கள்;நிற்கச் சொன்னால் நிற்பார்கள்;பதுங்கச் சொன்னால் பதுங்குவார்கள்; பாய சொன்னால் பாய்வார்கள். தூக்கத்திலும் கூட அதே ஆயத்தநிலையில் இருப்பார்கள்.
உடலுக்கு தரும் இதே பயிற்சியை மனதிற்க்கு கொடுத்தால் நம் சொன்னபடியெல்லாம் மனம் கேட்க ஆரம்பித்துவிடும். அதைத்தான் ‘மந்திரப் பயிற்சி’ என்கிறோம்.
ஓம் முருகா ஓம்
ஓம் நமசிவாய…
ஓம் நமோ நாராயணாய..
இயேசுவே…
நபியே…..
இதில் மதம் முக்கியமில்லை. இது போன்று எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும்
அமைத்துக் கொள்ளுங்கள். ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் அதை சொல்லிப்
பழக்குங்கள்.
இதற்கு மதமும் தடையல்ல, மொழியும் தடையல்ல
பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.சிந்திப்பதற்கு ஏதும் உருப்படியான செய்தி இல்லையென்றால், உடனே “ஓம்……….” போன்ற மந்திரங்களை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.
படுக்கையில் படுத்து, தூக்கம் வராமல், மனம் அலைகிறதா? உடனே ஆரம்பித்துவிட வேண்டியதுதான். மனம் கட்டுக்குள் வரும்.
மனதை கட்டுப்படுத்துவதன் ஒரு கட்ட பயிற்சியே இது.

மிகச் சரியான விளக்கமாக என் மனதில் பதிந்தது

5 comments:

  1. வாழ்க வளமுடன்...நல்ல தகவல்!

    could you please disable word verification?

    ReplyDelete
  2. வருக திரு.பழமைபேசி அவர்களே, வாழ்த்துக்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி

    ReplyDelete
  3. நண்பரே Followers Enable செய்யுங்கள்

    ReplyDelete
  4. வருக திரு.வடிவேலன் அவர்களே
    உடனே செய்துவிடுவோம். நன்றி

    ReplyDelete
  5. அன்பின் சிவசு

    மனதைக் கட்டுப்படுத்த சிறந்த பயிற்சி

    பயிலுவோமே

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)