"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 19, 2009

நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே

நமக்கு தெரிந்த விசயந்தான்,

0,1,2,3,4,5,6,7,8.............+ + + +
சைபருக்கு அடுத்த மதிப்பு கூடிக்கொண்டே போகும்

..........-5,-4,-3,-2,-1,0
சைபருக்கு முன்மதிப்பு குறைந்து கொண்டே போகும்.

சரி ஒரு சின்ன விளையாட்டு

-5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5 இதுதான் எண்வரிசை, நிரந்தர அமைப்பு, உண்மையானது.

மேலே சைபர் இல்லாமல் பத்து எண்கள் இருக்கிறாதா? உங்களை பொறுத்தவரை இதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லையே?

சரி நான் தான் சைபர், இப்ப நான் கடைசியில் வந்து நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை -10,-9,-8,-7,-6,-5,-4,-3,-2,-1,0.

சரி மீண்டும் நடுவில் நிற்காமல் முதலில் சென்று நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை 0,1,2,3,4,5,6,7,8,9,10

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்வரிசை, மாற்றமுடியாத உண்மை. சத்தியம்.

உங்களின் 0 வை நான் நிற்கும் இடத்தைப் பொறுத்து நான் எப்படி மதிக்கிறேன்,பார்க்கிறேன் தெரியுமா? முதலில் நிற்பதால் 5 ஆகவும், கடைசியில் நிற்பதால் மைனஸ் -5 ஆகவும் பார்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை இடம் மாற மாற மதிப்பும் கூடியோ, குறைந்தோ போகும்., உண்மையில் மாறுவதில்லை.

பல சமயங்களில், வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும், எழுத்திலும்,நடப்பவற்றை இப்படி மாறி நின்று நாம் பார்ப்பதால்தான் பிரச்சனைகளே உருவாகிறது. ஜீரோவாக நின்று பார்த்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது புரியும்.


புரியலை இல்லையா.....

சரி இந்தப் பதிவு

3 மிகமிக நல்லபதிவு
2 மிக நல்லபதிவு
1 நல்லபதிவு
0 பதிவு 0
-1 மொக்கை
-2 படுமொக்கை
-3 சூரமொக்கை

இதில் ஏதோஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

உண்மையில் இந்த பதிவு, ஒரு பதிவு அவ்வளவுதான். ஜீரோ . இதுதான் உண்மை

ஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாத் தோன்றுகிறது. இது தவறுமல்ல, அதே சமயம் உண்மையும் அல்ல.


இதே மாதிரி எல்லாபிரச்சினைகளையும் அணுகி பாருங்கள், அதனுடைய எல்லா கோணங்களும் தெரியும், சாதக பாதகங்கள் புரியும். சரியான படி முடிவெடுக்கலாம்

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், பலன் கிடைக்கிறது. நீங்களும் முயற்சித்து பார்த்து எந்த பலன் கிடைத்தாலும் பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டுள்ளது தவறாக இருந்தால் அதை புரிந்து கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

15 comments:

  1. கடமையை செய்....... பலனை அனுபவிக்காதே

    ReplyDelete
  2. வருக தமிழ்நெஞ்சம்
    நான் ஒரு ஜீரோ...அவ்வளவுதான்
    நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே,
    நான் ஒரு வருடமாக எதோ எழுதி வருகிறேன் என்றாலும், எனக்கு தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போன்ற தொகுப்பாளர்களின் அறிமுகம் சில நாட்களுக்கு முன்புதான் நண்பர் செல்வம் மூலமாக கிடைத்தது அதில் நாள் பார்த்த முதல் பதிவு உங்களுடையது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வருக உள்ளூர் நண்பரே, வாழ்த்துக்கள்.
    செல்வம் திருப்பூரா..? சினிமா நிறைய
    பார்ப்பீர்கள் போல் உள்ளது..??????

    ReplyDelete
  5. அருமையான சொன்னீங்க.. “நடுநிலைமை”ங்கிறதுக்கு நல்ல அருமையான பதிவு..

    தண்ணீர் எப்படி தான் இருக்கு பாத்திரத்தின் வடிவத்தையும் நிறத்தையும் பெறுகிறதோ..அதே மாதிரி தான் ஜீரோ..

    பச்சையா சொல்லனும்னா.. பச்சோந்தி மாதிரி..

    சூப்பரப்பு :))

    ReplyDelete
  6. சூழ்நிலைக்கேற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்ளும்
    உயிரினம். நல்ல உதாரணம்.
    நன்றி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சூழ்நிலைக்கேற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்ளும்
    உயிரினம். நல்ல உதாரணம்.

    கமெண்ட் மாடரேஷனா வெரி குட்

    ReplyDelete
  8. நண்பர் பிகிலுக்கு,
    பல லட்சம் மதிப்புள்ள பேருந்து,தன் பயணிகளோடு
    யாருக்கு அடங்கும்னா பிகிலுக்குதான்.
    வருக வருக வருகைக்கு நன்றி.


    வருக மதுபாலா நன்றி. உங்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஹல்லோ சார்....கலக்கல்....
    பூஜ்யமின் மதிப்பு பெரியது தான்....அது பூஜ்யம் இல்லை....
    (ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு கொழப்பிட்டேன் )

    ReplyDelete
  10. செமையா வாரீட்டீங்க....
    நன்றி

    ReplyDelete
  11. பல்லடம் ரோடு பக்கம் வந்தால் இப்படி ஒரு பதிவு எழுதியதற்க்காக சாலை மறியல் நடைபெறும் என மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

    ReplyDelete
  12. நான் என்ன என்ன ஏற்பாடுகளோடு வர வேண்டும் என்பதையும் சொல்லி விடுங்கள், கார்மேக ராஜா.,

    ஆமா நீங்க இருந்துமா திருப்பூரில் மழை வரவில்லை;)))

    ReplyDelete
  13. ஓஓ இப்படி ஒரு சிந்தையின் சிந்தனை இருக்கிறதா


    ம்ம்ம்ம்ம் - ஒண்ணும் சொல்றதுக்கில்ல

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)