"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Tuesday, January 29, 2013

ஜெயதேவ் தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப்பு

நண்பர் ஜெயதேவ் இடுகையை அவரது அறிவியல் சார்ந்த இடுகைகளுக்காக படிப்பேன்., நேற்றைய இடுகையில் சில அடிப்படைகள் தவறு என நினைத்ததால் என் ஆட்சேபணையை விரிவாக பொங்கலாக வைக்கிறேன் :)

 இனி சிகப்பு எழுத்தில் இருப்பவை ஜெயதேவ் இடுகையில் வாசித்தது. ஆட்சேபணையான பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். எனது கருத்துகள் கருப்பு எழுத்தில் :)

//தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம். //
ஆத்தீக அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சான்றுகள்னு.. அனைவருக்கும் நான் தான் ரெப்சரண்டேட்டிவ்னு சொல்றத பார்த்தா ஏதாவது தடை போட்டுருவாரோன்னு பயந்துகிட்டேதான் எழுதறேன்:)

//தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும். நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம். //இந்த கண்ணாடியப் போட்டுட்டு பார்த்தா அப்படித்தானே தெரியும். நீங்க போலிகளா சொன்ன அத்தனை பேரும் பகவத் கீதையின் வழியே வாழ்றவங்களா? கீதய சொல்றதுக்கும், கீதையின்படி வாழ்றதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு.

//அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி சரணடைந்து நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும். இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும். //

இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி இருக்கீங்க ..இங்க எங்க நீங்க பலதடவ சொல்ற குரு பரம்பரை வருது.?

//யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆதாரம் என்ன? //இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது. அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர். அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார். கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள 4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார். //

இந்த கணக்கெல்லாம் நான் எப்பவோ படிச்சதுதான். கடந்து போய்விடுவேன். இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? (நீங்க கேட்ட கேள்விதான்: ) கிருஷ்ணர் என்னிக்கு பூமியில் பிறந்தாரோ அப்பவே மனுசந்தான் :) அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் கடவுளா அவரை கொண்டாட வச்சுது.

//3. கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம், என்பவர்கள் போலிகள்:// நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.//ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.//

இதப்படிச்ச உடன் கொஞ்சம் கூட புரியாம நீங்க எழுதுனதான் அடுத்த வரிகள் \\இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா? அவ்வாறு போதிப்பவன் போலி.\\ 
கட்டுரையின் உச்சபட்ச தடுமாற்றம் இதுதான் ஜெயதேவ்..:)

பிரம்மம் தனி, நான் தனி, அதனோடு முக்தி அடைந்து ஐக்கியமாகி விடுவோம்னு சொன்னது தவறுன்னா என்ன அர்த்தம்னா.. பிரம்மமும் நீயும் வேறவேறன்னு சொல்லாத எல்லாமே ஒன்னுதான்.. அதுதான் அப்பவும் இருந்துது, இப்பவும் இருக்குது. இனியும் இருக்கும் அத்தனையையும் ஒன்றாகப்பார்க்கிற விசயத்தை புரிஞ்சிக்கிறத விட்டுட்டு, புரிஞ்சுக்க முடியாம திணறகிற அவங்கள போலின்னு சொல்றதும், முட்டள்னு சொல்றதும் எப்படி சரியாகும்?.. இது வக்கிரம்தான் :)


4. போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி: பலபேருக்கும் மருத்துவரே கடவுளாகத் தெரிகையில் வைத்தியம் பார்ப்பவன் குரு அல்ல என்ற முடிவு சிரிப்புதான் வருகிறது. தேவையானவர்களுக்குத் தேவையானதைத் தருபவர்தான் உண்மையான குரு. ஒருவன் ஞானத்தெளிவடைய தடையாய் இருக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை உடைத்தெறியும் ஆற்றல் குருவுக்கு இருக்கும். உடல்நலத்தைத் எல்லோருக்கும் வாரிவழங்கும் மந்திரவாதி அல்ல அவர். ஆன்மீகப்பாதையில் தீவிரமாய் பயணிக்கும் ஒருவனது உடல்நிலை பாதிப்பை அதன் வேரை  அடையாளம் கண்டு ஒரு கையசைப்பில் அல்லது ஒரு வார்த்தையில் பக்தனது மனதில் அடிஆழம் வரை ஊடுருவி திருப்பத்தை உண்டு பண்ணும் நிலையை நீங்கள் சாதரண வைத்திய முறையாக பார்ப்பது வாசிப்பனுபவம் மட்டுமே உங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. (இப்படிப்பட்ட குரு இங்கொன்றும் அங்கொன்றுமாக தேவைக்கேற்ப தோன்றுவார்கள். இதில் பரம்பரைக்கெல்லாம் வேலை கிடையாது )

//, அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது. வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.//

ஆன்மாவைக் காப்பாத்தினா மனுசனுக்கு என்ன பிரயோசனம்னு தெரியல..உடம்புங்கிறது என்ன? உயிர்னா என்ன ? மனசுன்னா என்ன? இதெல்லாம் தாண்டி ஆன்மான்னா என்ன இதுகளுக்கெல்லாம் இருக்கிற இணைப்பு என்ன? . உடம்ப நோய் இல்லாம காப்பத்தறதுக்கு சொல்ற எதுவுமே ஆன்மீகத்தான். அது ஆன்மாவுக்கு நாம செய்ற உபகாரம். அதச் சொல்லித்தர்றவன் குருதான். ஆன்மா அப்படின்னு ஒன்னு இருந்தா அதுஎங்க இருக்கும் உடம்பில் உயிர் ஓடிட்டு இருக்கற வரைக்கும் தானே..இதுக்கு மருத்துவ அடிப்படையப் பத்தி பேசணும். வேணாம் விட்டர்றேன் :)

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: ஆனா இன்னிக்கு தமிழ்நாட்டுல சென்னைக்கு கிருஷ்ணாநீர் வர்றது இந்த மனுசனாலதான்யா சாத்தியமாச்சு.. இந்த ஒன்னுக்காக சாய்பாபாவ தாராளமா கடவுள்னு சொல்லலாமே.....குருன்னும் சொல்லலாமே

//திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை. செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ] \\
ஏன் தன்னோட பரம்பரைக்கு போகனும்னு செஞ்சதா வச்சுக்குங்க.. பொருளை எப்படி கையாளனுமோ அப்படித்தான் கையாளனும். நான் யார்னு யோசின்னு ஞானப்பாதைக்கான வாசலை சமீபகாலத்துல எளிமையாச் சுட்டிக் காட்டியவர்தானே ரமணர். இவரையா போலிங்கறீங்க :)

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

இவருக்கு என்ன குறைச்சல் கிருஷ்ணர கும்பிட்டு இருக்கனுமோ.. உருவ வழிபாட்டின் அடிப்படையை மக்கள் மறந்து சடங்காக மாற்றியபோது ஜோதி வழிபாட்டின் மூலம் அதை உலகுக்கு உணர்த்தியவர். உயிர்க் கொலையை தவிர்க்க வலியுறுத்தின இவரு போலியா... :)

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

பேரச் சொல்லி எழுதக்கூட தைரியமில்லாத நீங்க ஈனத்தைப் பத்தியும், மானத்தைப் பத்தியும் பேசறது எனக்கே வெட்கமா இருக்கு:).. செக்ஸ்னா என்னென்னு தெரியனும் வெறுமனே உடல் உறவு மட்டுமே செக்ஸ்னு நினைக்கிற பொதுமனப்பான்மையும், கடவுள்னா விழிப்புணர்வுதான்னு புரிஞ்சு அதை அனுபவிக்காத தன்மை., இதையெல்லாம் மாற்ற பாடுபட்டவர் ஓசோ. இதெல்லாம் சும்மா நாலு வார்த்தைல எழுதற விசயமல்ல. சும்மா அடிச்சு விடாதீங்க ஜெயதேவ்..

//அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ] //
சகோதர சகோதரிகளே என்ற ஒற்றை வார்த்தைல இந்தியாவின், தமிழகத்தின் பாரம்பரியத்த வெளி உலகிற்கு புரியவைத்த நல்ல மனுசன் இவரு..ஒற்றை வார்த்தையில் உலகை கட்டிப்போட்டவன் தெரிஞ்சவர்தான் குரு. இவ்ரைப் போலி என்றால் ...:)

//பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு அதுதான் ஆன்மிகம் என்றவர்,//
வாழுங்கலை ரவிசங்கர் மூச்சை அடிப்படையா வச்சு தன்னோட பயிற்சிய வடிவமைச்சிருக்காரு. மூச்சுக்கும் உடம்புக்கும் மனசுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள சம்பந்தம் என்னங்கிறது அனுபவிச்சவங்களுத்தான் தெரியும் ஜெயதேவ் இந்த உண்மை தெரியாத நீங்க இவர போலிங்கிறதுல ஆச்சரியமில்லை உடம்ப மருத்துவமனைக்கு கொண்டு போய் சித்திரவதைப்படுத்தாம இருக்க மூச்சுதான் முக்கியம். அதுதான் சாதி மதம் நாடுன்னு எதுக்குள்ளும் சிக்காத பொது சமாச்சாரம் எனக்குத் தெரிஞ்சு மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்றது இவரு ஒருத்தருதான். இவரு சகசமா அரசியல் பிரச்சினைகளுக்கு கருத்து சொல்வாரு. அது தப்பா…

//எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர். பயோகிராபி எழுதியவர் ]உடல் நாறமா இருக்கிறதோட அருமை அத மதிக்கிறவங்களுத்தான் தெரியும். சான்றிதழ் வாங்கிட்டது சாதிச்சதுனாலதானே :)

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]
இந்த ஆளுவேணா பாலியல் ரீதியான சில பயிற்சிகளை செய்து விந்து நீண்டநேரம் வெளிப்படாமல் செய்தார். இதுவும் ஆன்மீகத்தின் ஒரு அங்கம் தான், என்ன சரியான வழில பயன்படுத்தாம பொம்பளைய மடக்கிறதுல பயன்படுத்தினதால தப்பான மனுசனாயிட்டான். இந்தஆள் போலிதான்:)

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ] இந்த ஆள் நீங்க வலியுறுத்தறா மாதிரி குருபரம்பரையைச் சேர்ந்தவர்தான், எனக்குப்பிடிச்ச குருபரம்பரை இல்லைன்னு நீங்க சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. லட்சணம் என்னென்னு நீங்களே பரர்த்துகுங்க., மனிசனா பொறந்தா செக்ஸ் இல்லாம இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை சாத்தியமில்லை. இவரும் அதுல சிக்கிட்டாரு..அதுக்காக போலிங்கிறது ரொம்ப ஓவரு :) ....மனுசன்னு சொல்லுங்கஒத்துக்கிறேன்.

//கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி//
ஒரு பொம்ப்ள எல்லோரையும் கட்டிப்பிடிகிறான்னா அதுல ஒரே செய்தி மட்டும்தான்., என் அன்பை வெளிப்படுத்துகிறேன்,. அவ்வளவுதான்.. அன்பு ஒன்னுக்குத்தான் உலகமே அடிமை… எங்கே 1000 ஆம்பிளைகளை நீங்க கட்டிப்பிடிச்சு காமிங்க பார்ப்போம்.... அதனால்தான் அங்கே பணம் குவியுது, அன்பால நெகிழ்ந்தவர்கள் தருகிற நன்கொடைகளினால்...இந்தம்மாவை போலின்னா அன்பு பத்திக்கூட புரிதல் உங்களுக்கு இல்லையோன்னு சந்தேகப்படறேன் .:)
//நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர். இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செக்ஸ் நாட்டம் அதிகமாகாத வரைக்கும் மத்ததுல கவனம் இருக்கும். அதிகமாச்சு, வாய்ப்பும் அமைஞ்சது., பயன்படுத்திக்கிட்டாரு மனுசன். ரஞ்சிதா சம்மதத்தோடதானே எல்லாமே நடந்துச்சு.. பேச்சு ஒன்னு, செயல் ஒன்னுங்கிற குறைதான் இவருகிட்ட தப்பு ..இவரு உண்மையா இருந்து போலியா மாறிட்டாரு

//செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி, ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

இங்க பக்கத்து ஊருதான், இந்த ஆள் செஞ்சது ஒன்னெ ஒன்னுதான் பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு பூசைகள் செய்யலாம். சமூகத்தில் ஆன்மீகத்தில் பக்தி வழிபாட்டில் கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காதன் அம்சத்தை ஆராயாமல்.மேலோட்டமாக நடத்திய புரட்சிதான் கிளிக் ஆகி இன்னிக்கு இந்த ரேஞ்ச்..இதில எங்க இவரு போலி.. வெளிப்படையாத்தான் இருக்காரு மனுசன்..பின்னால போற மக்கள்தான் பாவம்:)

//நாலு லட்சம் வருஷத்துக்கு ஆப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அல்ல, தாங்கள் அவரதாரம் என்கிறார்கள். கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண் எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இதுவும் ஒரு கற்பனைதான். இதய உல்டா பண்ணித்தானே இந்தகுருப் காலம் தள்ளுது. இந்த போலிக்கு மூலகாரணமே கல்கி மேட்டர்தான்.

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை] இவர யாரும் கடவுள்னும் சொல்லலை, குருன்னும் சொல்லலை. அப்புறம் ஏன் கோபம். ஆமா இவரு மேல என்ன பாசம் :)

ககி சவம் [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர்]
 

இவர் தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறவர். சில விசயங்களை வித்தியாசமா சொல்லி, பார்த்து, உண்மை தெரியும்னு சொல்லி தொழில் முறை பேச்சாளரா இருக்கிறாரு, இவர ஏன் போலின்னு சொல்றீங்க :) பாவம் விட்டுருங்க :))

//வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......] //

இவரு திடீர் சாமி.. எவரோட பணமோ இவருகிட்ட விளையாடுது.. சுற்றுலாத்தளம் மாதிரி ஒரு கோவில் டில்லில அக்சார்தம் மாதிரி தென்னகத்தில் ஒரு கோவில் கட்டிய சாதனைக்கு பினாமி சொந்தக்காரர்தான்,, இதுல எங்க போலி வந்துது. டம்மின்னு சொல்லுங்க ஒத்துக்கலாம். போலிங்கிறதுக்கு அர்த்தமே வேற.. மேலும் கோவிலோட பிரபலம் இந்த சாமிக்கு இல்லவே இல்லை.

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] இந்த ஆள் மொக்கைதான்.,ஓசோவையும் நடப்பு ஆன்மிகத்தையும் கலந்து அடிக்கிறாரு. வாஸ்தவம்தான். என்ன பண்றது ருசியான பிரியாணியா இருக்கிறதுனால கூட்டம் அம்முது:) அதுக்காக போலிங்க வேண்டியதில்லை. விசயம் கம்மின்னு சொன்னா ஒத்துக்கிறேன் :) ஒரு தடவ ஈசா போயிப் பாருங்க..இந்த மொக்கை எம்புட்டு செலவு செஞ்சிருக்கின்னு...

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. எத்தனையோ அக்கிரமங்களை நம்ம மனுச சாமிகள் பண்ணினாலும் ஒரு முறை அந்த பெருவழில கூட்டமில்லாத மழை நாட்கள்ல போய்ட்டு வந்து அனுபவத்து சொல்லுங்க.. போறதுக்கு ஒரு காரணம் அய்யப்பன். அவர ஏன் போலிங்கிறீங்க.. அவரு பேரச் சொல்லி திரியற நம்மாளுங்களைச் சொல்லுங்க.. கொஞ்சம் நிசம் இருக்கும்.

முடிவா குரு பரம்பரை அவசியம் வேணும்கிற ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை மட்டுமே. ஆன்மீகம் குறித்தான விரிவான பார்வை இன்றி வெறுமனே விமர்சிக்கிற தன்மையை ஆட்சேபித்து எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த விளக்கம் இணைய நண்பர்களுக்கு நேர்எதிர்கருத்தையும் படிக்கிற வாய்ப்பைத் தரும் என்பதற்காகவே பதிகிறேன்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

Wednesday, October 31, 2012

உள்ளுற நோக்குதல் - விபாஸ்ஸனா

தீபாவளி பக்கம் வந்துவிட்டது. இன்னும் 10 நாட்களே இருக்கையில் அதற்குப் பின்னதாக வரும் லீவு நாட்களை , மனதில் கொண்டு  ஓட வேண்டி இருக்கிறது.

அன்றாட வாழ்க்கையும், அதை உரசல் இல்லாமல் நகர்த்த பணம் ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட பணத்தின் மீது பற்றுதல் இல்லை என மனம் சொன்னாலும் பணத்தின் பின்னால் ஓட வேண்டி இருக்கிறது என்பதே நிதர்சனம்.. இது ஒன்றும் கடினமான பணி அல்ல. சற்றே அயர்ச்சியைத் தரும் பணி அவ்வளவுதான்.

இங்கே அயற்சியை உணர்வது உடல் அல்ல.மனம்தான் :)

இச் சூழ்நிலையில் மனதைப் பயன்படுத்துவதில் வரும் சிக்கல்களுக்கு தீர்வு என்ன. என்று பார்த்தால் மனதிற்கான வடிகாலாக, தற்காலிகமாக கவனத்தை இடமாற்றம் செய்வது......திசைதிருப்புவது மற்றும் கவனஈர்ப்புதான்... ஆடல், பாடல் திரைப்படம், கிண்டல், கேலி இணையம் என மனதை வெளிப்புறமாக திசை திருப்புதல்தான் நடக்கின்றது.

 சில சமயங்களில் இவை தற்காலிக நிம்மதியைக் கொடுத்தாலும் கிண்டலும் கேலியும் இருக்கிற நிம்மதியையும் கெடுத்துவிடுகின்றன.:( இணையத்தில் டிவிட்டரில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளே இதற்குச் சாட்சி.

நமக்கென ஒரு மனத்தோற்றத்தை நாம் ஒவ்வொருவரும் வைத்துகொண்டுள்ளோம். நாம் பார்க்க விரும்பும் தோற்றத்தைப் பார்க்கின்றோமே  தவிர நாம் உண்மையைப் பார்ப்பதில்லை.:)  பிறரும் அவ்வாறே பார்க்கவேண்டும் என விரும்புகிறோம். அவ்வாறு இல்லையெனில் புரிதல் இல்லாது பிரச்சினைகள் பெரிதாகின்றன.

நமது வாழ்க்கை முழுவதும் நாம் புறத்தே பார்த்தே பழகிவிட்டோம். வெளியில், நடப்பது என்ன என்பதிலும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலுமே எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்துவந்திருக்கிறோம்.

நம்மையே. நமது மன உடல் கூட்டமைப்பையே, நமது சொந்த செயல்களையே, நமது சொந்த உண்மையையே நாம்  ஒருபோதும் முழுமையாக ஆய்வு செய்ய முயற்சித்ததே இல்லை.  நாம் நம்மை அறியாமலே இருந்து வருகின்றோம். இந்த அறியாமை எவ்வளவு தீமையானது என்பதை நாம் உணர்ந்தவர்களும் இல்லை.

நம்முள் இருக்கும் மன உந்துதல்களுக்கு நாம் எவ்வளவு அடிமையாக இருந்து வருகின்றோம் என்பதைப் பற்றி அறியாமலும், புரியாமலுமே இருந்து வருகிறோம். உண்மையை புரிந்துகொள்ள இந்த உள்ளிருள் நீக்கப்பட வேண்டும்.

இதற்கான நெறிதான் தன்னையே உற்று நோக்கும்  விபாஸ்ஸனா தியானமுறை.

நம்மையே உற்று நோக்குவதால், நமது மனதை மூடுகின்ற, மறைக்கின்ற நம்மிடமிருந்தே உண்மையை மறைக்கின்ற, துன்பங்களை உண்டாக்குகின்ற சில எதிர்வினைகளையும், தவறான எண்ணங்களையும் பற்றியும் முதன்முதலாக விழிப்புணர்வு கொள்கிறோம். இதெல்லாம் படிக்க நன்றாக இருந்தாலும் செயலில் நாம் இறங்காதவரை விழிப்புணர்வை அனுபவிக்க முடியாது.

மனதிற்கான மருந்து தியானம்தான்,  இந்த தியானம் உலகியலிலிருந்து தப்பித்து வாழும் நிலை என்பதாக சிலர் நினைக்கக்கூடும். ஏனென்றால் தீவிரமாக தியானம் செய்வதாக சில அன்பர்கள் வேறு உலகத்திலே மிதந்து கொண்டிருப்பது போல் மற்றவர்களுக்குத் தோன்றும். இதில் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது.,

விபாசனா என்பது உள்ளுற நோக்குதல்., என்பது பொருளாகும். உள்ளுற கவனித்தல் மட்டுமே...வேறு எந்த விளக்கங்களையும் திணித்துக்கொள்ளாமல் செயலில் இருந்தால் மட்டுமே இது அனுபவமாகும். 

விபாசனாவில் நீங்கள் உங்களை உள்ளுற நோக்குதலுக்குரிய சூழலை ஏற்படுத்தித் தருகிறார்கள். அவ்வளவே..

ஆர்வம் இருப்பவர்களுக்காக
பத்துநாள் முகாம் ஒன்றில் பங்கேற்றுப் பாருங்கள்.  கூடுதல் விவரத்திற்கு இங்கே சுட்டுங்கள்.

 கோவை சார்ந்த பகுதியினருக்காக
முகாம் மற்றும் நாட்கள் இடம் தொடர்பு கொள்ள
10-நாள் முகாம் (ஆண்கள் மட்டும்)
29-நவம்பர்-2012 முதல் 10-டிசம்பர்-2012 வரை
உலக அமைதி நிறுவனம் (Universal Peace Foundation),
நல்லகவுண்டம்பாளையம்,
படுவம்பள்ளி,
கருமத்தம்பட்டி-அன்னூர் சாலை,
கோயம்புத்தூர் - 641659.
1. திரு அரவிந்த் வீரராகவன் - 81481 35795
2. திரு பரத் ஷா - 98423 47244
3. திரு சிவாத்மா - 98422 80205


 சென்னையில்

டிசம்பர் 2012 
1)5-16 தேதி வரை
 

2)19-30 தேதி வரை 

 தம்ம சேது விபஸ்ஸனா தியான மையம்,
533, பழந்தண்டலம் சாலை,
(திருநீர்மலை வழி),
திருமுடிவாக்கம்,
சென்னை 600 044.

தொலைபேசி (தரைவழி): +91-44-64504142, +91-44-24780952, +91-44-24780953
முகாம் குறித்த விசாரணைகள் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தொடர்பு எண்கள்: +91-9444462583, +91-9442287592, +91-8148581350, +91-9042632889, +91-8015756339, +91-9940467453

Monday, September 3, 2012

போலி குருக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?

நண்பர் இக்பால் செல்வத்தின்  தியான சார்ந்த இடுகையில் நான் பின்னூட்டமிட அதன் தொடர்ச்சியாய் நண்பர் சார்வாகனனின் பின்னூட்டங்கள், அதில் சில விளக்கங்கள் கேட்டிருந்தார்.  நண்பர்கள் மேற்கண்ட இடுகையை படித்துவிட்டு இதைப் படித்தால் எளிதாக புரியும்.

Thursday, August 23, 2012

என்ன நடக்குது இங்கே - 4

ஆன்மீகம் என்பதை முழுமையாக புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில், ஏற்கனவே நாம் இந்த வலைதளத்தில் ஆன்மீகம் குறித்து கொஞ்சம் பேசி இருப்போம் அதன் தொடர்ச்சியாகவே இந்த இடுகைகளும் பயணிக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாகப்புரியும்.

இங்கு ஞானமார்க்கத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டு வருகிறது. பக்தி மார்க்கத்தை என்ன செய்வது என்றால் இன்றைய சமூச சூழ்நிலைக்கு ஏற்ப போற போக்கில புரிந்து எடுத்துக்கொள்ள முடிந்தால் கொஞ்சமா எடுத்துக்குங்க. இல்லைன்னா அதை பைபாஸ் பண்ணி போயிருங்க..,  போராட்டம் வேண்டாம், அதிக ஆராய்ச்சி வேண்டாம் என்பதே.,

 பக்தியோ, ஞானமார்க்கமோ மனதைத் தகுதிப்படுத்தாமல் வெற்றி சாத்தியமில்லை. அதற்கு மனதை தயார் படுத்தும் விதமாக மனம் எதுனுடனெல்லாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது என உணர வேண்டும். இதற்கு விழிப்புடன் இருந்து தன் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை குறை கூறாமல், ஏன் வந்ததுன்னா.... அப்படின்னு தீர்ப்பு ஏதும் சொல்லாமலும்,  வந்த எண்ணத்தை கருமம் வந்துட்டுதேன்னு திட்டாமலும் ஒவ்வொரு எண்ணத்தையும் தொடர்ந்து சாட்சியாய் இருந்து கவனித்துவர வேண்டும். எழுதுவது எளிது. ஆனால் சிலநிமிடங்கள் கூட தொடர்ந்து செய்ய இயலாது என்பதுதான் உண்மை., மனம் தளராமல் முடிந்தவரை கவனித்து கவனித்து பழகவேண்டும்.

அப்போது கண்ணாடியின் மீது படர்ந்து பனித்திவலைகளைத் துடைத்துப்பார்ப்பது போல தன் மனதின் ஆழத்தில் மறைந்து இருக்கும் குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை  போன்றவைகளைக் கண்டு கொள்ள முடியும். இவற்றிற்கும் பக்திக்கும், ஞானத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

 உடனடி விளைவாக இவைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் நம் மனதின் ஆற்றலை இழந்துகொண்டேதான் வருவோம். உபரியாக உடலும் பாதிக்கப்படும். மனம் இவற்றின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளில் சிக்கிப் போராடிக்கொண்டு இருக்கும். இதைச் சரிசெய்ய, இயல்புக்கு வர உற்றுக்கவனித்தல் உதவும். மனதின்  உள்வாங்கும் திறன்,  பாராபட்சமின்றி அணுகும் திறன எல்லாமே சமநிலைக்கு வரும்.

மனதின் ஆற்றலை முழுமையாக பயன்படுத்துமுன் அதன் ஓட்டைகளை அடைத்து அதை செப்பனிடவேண்டியது அவசியம். தற்போதய ஆன்மீகரீதியான, யோகா சார்ந்த வழிமுறைகள் பெரும்பாலும்  இதை அதிகம் வலியுறுத்துவதில்லை.  பக்திவழியோ, ஞான வழியோ அவர்கள் தரும் குறிப்புகளுடன் நடக்கும்போது மனம் சக்தி பெற்று அமைதி அடைவதும், அதன் பின் இயல்பு வாழ்க்கையில் வழக்கம் போல சோர்வுற்று இருப்பதும் இதனால்தான்..

நம்முடைய அபிப்ராயங்கள், நம்பிக்கைகள் முடிவுகள் அனுபவங்கள் பிம்பங்கள் ஆகியவைகளை கொண்டுதான் நாம் அனைத்தையும் பார்த்து வருகிறோம். இவைகள் உண்மைநிலையை அவ்வாறே காட்டாமல் திரித்து ஒரு பொய்யான தோற்றத்தை உண்மை என தவறாககாட்டி வருகின்றன. உண்மைநிலையை நம்மால் கண்டுகொள்ள முடியாதபோதுதான் சண்டைகளும் சச்சரவுகளும் தோன்றுகின்றன். கூடவே குழப்பம், கலக்கம், பொறாமை, பயம், ஆசை எல்லாம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

உண்மைநிலையை மறைப்பதில் மனதின் தன்மைகள் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என உணருங்கள். ஆக ஒவ்வொன்றாக சரி செய்ய முயன்றால் கோபத்தை எப்படி தவிர்ப்பது? கவலையை எப்படி ஒழிப்பது, ? என்று தனித்தனியாக முயற்சித்தால் தற்காலிக வெற்றி மட்டுமே கிட்டும். நிரந்தரமான வெற்றி வேண்டுமானால் மனதை தன் அடையாளங்களில் இருந்து விலகி இருக்கப் பழக்கினால் கிடைக்கும்.

எழுதுவது போரடிக்கிறதா நண்பர்களே., நாலு ஜென்கதைகளைச் சொல்லி சம்பந்தமில்லாம இரண்டு நல்ல விசயங்களையும் சொன்னால் கட்டுரை சுவரசியமாகப் போகும். இவைகள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால் என் தளத்தில் பகிரப்படும் விசயங்கள் சொற்பமாக சில இடங்களில் காணப்படலாம். ஆகவே புரியாதமாதிரி தோன்றினால் மீண்டும் மீண்டும் படியுங்கள்.,

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

Monday, August 20, 2012

என்ன நடக்குது இங்கே - 3

ஆன்மீகம் பற்றி அதில் உள்ளவர்களே போதுமான தெளிவில் இல்லை. தாம் தெளிவில்லாமல்  இருக்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாத அப்பாவிகள் அநேகர். இவர்களைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு எனக்கு அந்த சக்தி இருக்கிறது. இது இருக்கிறது என அவர்களிடம் காசு பார்க்கும் கூட்டமும் இதே ஆன்மீகத்தின் பேரைச் சொல்லி பிழைத்துக்கொண்டு இருக்கிறது ஆன்மீகத்தை கெடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த சூழ்நிலைதான் கம்மெனு போறாவங்களையும் திரும்பி நின்னு காறித்துப்பச் செய்துவிடுகிறது. (விதிவிலக்குகள் இருக்கும்)

இந்தநிலை என்று மாறுகிறதோ அன்றுதான் ஆன்மீகப் பாதையில் பயனிப்பதன் பலனை அனைவரும் பெறமுடியும். ஆன்மீகம் என்பது வெறும் அற்புதங்கள் செய்வது மட்டுமோ,  குறை தீர்ப்பது மட்டுமோ அல்ல. இதெல்லாம் பக்க விளவுகள்தான். உண்மையில் ஆன்மீகம் என்பது எவ்வகையிலாவது உடலைப் பேணி நம் மனதிற்கு தெம்பூட்டுவதுதான். உடல்,உயிர்,மனம் இவற்றிற்கான ஒத்திசைவை, இணக்கத்தை அதிகப்படுத்துவதுதான்.

இதற்கு முதல்படி தன்னை உணர்வது மட்டும்தான். இதை ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால்தான் சமுக முன்னேற்றம் என்பது கிடைக்கும். அப்படி தன்னை உணர்வது பற்றி எல்லோருக்கும் ஓரளவிற்கு தெரிந்து இருக்கலாம். எனக்கும் தெரியும் என்பது முக்கியமல்ல. தெரிந்ததை வைத்து என்ன செய்தோம் என்பதே முக்கியம்.

நாம் இந்த தொடரில் நம்மை (தன்னை) உணர்வதில்,அதன் வழிமுறைகளில் சிலவற்றைப் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். இவை எல்லாம் தனித்தனியானது அல்ல. ஒவ்வொன்றுமே முக்கியமானதுதான். .

முதலில் நம் மனதில் உள்ள அடையாளங்களை இனங்கண்டு கொள்ள வேண்டும். நான் இன்ன சாதி.எனது கட்சி இது. எனது மதம் இது என் தலைவன் இவர் என் கடவுள் இது, கடவுளே இல்லை, என் வாழ்க்கை முறை இப்படித்தான். என எல்லோருக்கும் தெரியும் வண்ணம் நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருப்போம். இதுதான் ஊர்உலகத்துக்கே தெரியுமே என்கிறீர்களா? இங்கே உங்கள் மனம் இவற்றோடு எந்த அளவு பிணைக்கபட்டிருக்கிறது என்பதை நீங்கள்  கண்டுபிடிக்கவேண்டும் எனபதுதான் முக்கியம்.

உதாரணமாக நம் சாதியைப் பற்றி ஒருவர் குறை கூறும்போது எனக்குக் கோபம் வந்தால் மிக இறுக்கமாக இதனுடன் என மனம் அடையாளப்படுத்தப்படுகிறது. மாறாக ஏன் சொல்றாங்க, அப்படி சொல்லும்படி நாம் என்ன தவறு செய்தோம். அடுத்த முறை சொல்லாத அளவிற்கு நம்மால் நடக்கமுடியுமா என மனம் சிந்தித்துக்கொண்டு எதிராளியின் மீது பாயாமல் இருந்தல் மனம் கொஞ்சூண்டுதான்  இதில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் :)

மனம் எந்த ஒன்றோடும் எந்த அளவு பிணைக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்வதே, அடையாளம் கண்டு கொள்வதே மனதை அறிவதன் முதல்படி.இதை யோசித்துப்பார்க்க ரொம்ப எளிதாகத் தோன்றும். எனக்கு எல்லாச் சாதியும் ஒண்ணுதான். இப்படி நினைக்கச் சுகமாத்தான் இருக்கும். ஆனால் தகுந்த சந்தர்ப்பம் வாய்க்கும்போதுதான் உங்களுக்கு மட்டும் தெரியும். நீங்கள் எந்த அளவு இதில் தீவிரமாக இருக்கின்றீர்கள் என. இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அஸ்திவாரமே இதுதான் :)

வெளியுலகிற்கு தெரியும் வகையில் உள்ள அடையாளங்கள் எவை? நம் மனதிற்கு மட்டுமே தெரிந்தவை எவை? என அடையாளம் கண்டு அவைகளுடனான பிணைப்பை, அதன் தன்மையை, தீவிரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும். இது அனுபவத்தால் மட்டுமே வரும். சரி இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்க்ளா? இதோ வர்றேன்.

குடும்பம் ஆகட்டும், தொழில் செய்யுமிடம் ஆகட்டும், ஆன்மீக முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும், அல்லது சமுதாய முன்னேற்றத்திற்கான முயற்சிகள் ஆகட்டும் நீங்கள் அதில் குறிப்பிடத்தக்கவராக., சாதனையாளராக, எதிர்ப்பில்லாதவராக, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுப்பா என்று ஒதுங்காதவராக மாற வேண்டும்.இது ஒன்றே பத்தோடு பதினொன்றாக நாம் வாழவில்லை, ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறோம் என்ற நிறைவைக் கொடுக்கும். இதை வேண்டாம் என்று சொல்பவர் யார்?

இதற்கு முதலில் மனதை தகுதிப்படுத்தவேண்டும். அப்படி தகுதிப்படுத்த மனதைப் பற்றிய புரிதல் நடைமுறையில் அது இயங்கும் தன்மைகளை அறிந்து அதற்கேற்றவாறு இயங்கவேண்டும்.மனதின் ஏற்கும்தன்மையை முழுமையாகப் பயன்படுத்த அதை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு
நம்மிடம் உள்ள நமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் குணங்களை அடையாளம் காண வேண்டும். இந்த குணங்கள் நம்மிடம் எப்படி தீவிரமடைகின்றது என்பதை கண்டுபிடிக்கத்தான் எதனோடு அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்று ஆராய்கிறோம்.


மேலோட்டமாக மனதில் உள்ள பொறாமை, ஆசை, கவலை, கோபம்...போன்ற குணங்களை அறிய முடிந்தாலும். எனக்கு இவைகள் இல்லை எனச் சிலர் சொல்லக்கூடும். இந்த குணங்கள் குறைந்த அளவில் நம் மனதில் அடி ஆழத்தில் மறைந்து கிடந்தால் அவற்றை அறிவது கடினம்.... இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு திரிவோம் :) ஆனால் அடையாளம் கண்டுகொண்டால்தான் இவற்றை கையாள்வது எளிதாகும்.

தொடர்ந்து சிந்திப்போம்.
நிகழ்காலத்தில் சிவா

Thursday, August 16, 2012

என்ன நடக்குது இங்கே - 2

ஒருநாள் காலையில் ஜீ தொலைக்காட்சியில் ஆன்மீக பேச்சாளர் ஒருவர் முருகனைப் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். எந்நேரமும் கடவுள் சிந்தனை வேண்டும். தனியா உட்கார்ந்து முருகனை நினைக்கமுடியலையா, பரவாயில்லை ரசத்துக்கு புளி கரைக்கும்போது முருகான்னு நினைங்க.. புளி ரசம் பக்தி ரசமா மாறிடும் அப்படின்னார் :)

இப்படித்தான் நமது ஆன்மீகம், பக்தி ரசமாக போய்க்கொண்டு இருக்கிறது, ஆன்மீகம் குறித்து தெளிவு நம்மிடம் இன்னும் தேவை. தேவை.:) நமது வாழ்க்கை நாம் நினைத்தவண்ணம் இல்லாது, எந்தவிதமாகவேனும் நகரும்போது  அதை பக்குவமாக எதிர்கொள்ளும் விதத்தை  கற்றுக்கொடுப்பது எல்லாம் ஆன்மீகம்தான் :)

Tuesday, August 14, 2012

என்ன நடக்குது இங்கே..1

 ஒருவரோடு ஒருவர் பேசுவதில் தன் மனதில் உள்ளதை அப்படியே எதிரே இருப்பவருக்கு முழுமையாக தான் உணர்ந்தவாறு சொற்களால் உணர்த்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம்.

பொருள் சார்ந்த விசயம் எனில் இப்படி செய். இன்ன லாபம் கிடைக்கும். சாட்சிக்கு அவரைப் பார் என்று சொன்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் ஆன்மீகத்தில் அப்படி இல்லை.ஆன்மீகம் என்பது மனம் சார்ந்த விசயம்.

முதலில் ஆன்மீகம் என்றாலே இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது நமது தமிழ்சமூகம். ஆன்மீகம் என்பதே மந்திரங்களும் பூசைகளும்  நம்பிக்கைகளும் அதிசயங்களும்  என்றாகிவிட்டது. விசேச நாட்களில் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே நமது குறைகள் நீங்கிவிடும் கேட்டது கிடைக்கும் என்பதன் விபரமும் ஆன்மீகத்துள் அடக்கம்.ஆன்மீகத்தின் மிகச்சிறிய பகுதிதான் இவைகள் என விளங்கிக் கொள்ள விரும்புவதும் இல்லை.

இங்கே கூர்ந்து கவனித்தால் நமக்குப் புரியவருவது எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி நமது மனதில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டது? எந்தவிதமாகவோ அமைதி ஏற்பட்டது என்பதுதான்:) இதே போல எனக்கு இந்த அமைப்பின் /  யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது அந்த அமைப்பின் யோகா பயிற்சிகள் செய்தால் அற்புதமாக இருக்கிறது, இந்த மதத்தின் வழிபாட்டு முறைகளினால் நன்மை என்பதின் மனோநிலையும் ஏறத்தாழ ஒன்றுதான்.

மனம் அமைதியாக, உற்சாகமாக, நேர்மறையாக இருக்கிறது என்பதுதான் கூட்டிக்கழித்தால் கிடைக்கிற முடிவு.

பக்தி மார்க்கத்தில் கிடைக்கும் அமைதி, சில நாட்கள் அல்லது குறைந்த நாட்கள் என்றால் ஞானமார்க்கத்தில், தியான வழிமுறைகளில் சென்றால் இன்னும் கொஞ்சம் அதிக நாட்கள் அமைதி கிடைக்கிறது. தொடர்ந்த பயிற்சியினால் அதை நீடித்துக்கொண்டதாக யோகப்பாதையில் பயணிப்போர் சொன்னாலும், அவர்களைப் பார்க்கின்ற நம்மைப்போன்ற சாதாரணமானவர்களுக்கு பெரும்பாலும் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

ஏதோ போறார். பரவாயில்லை என்று சொல்லுமளவில்தான் பலரும் இருக்கின்றனர்.இந்த நிலை ஏன். பக்தி சார்ந்த ஆன்மீகப்பாதையோ, யோகப்பாதையோ, இவரைப்போல் பண்பட்ட மனிதன் இல்லை என்று சொல்லுமளவிலோ, அவருடைய வார்த்தைக்கு மாற்றோ எதிர்ப்போ இல்லாத தன்மை எவரிடத்திலாவது இருக்கிறதா என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணுமளவிற்குக்கூட இல்லை. இதுதான் யதார்த்தம். இந்த பண்பு எவரிடத்தில் இருப்பினும் அவர் வந்தவழி, அவர் கடைப்பிடித்த வழி மிகநிச்சயமாய் சரியானது.

என்னைப்பொருத்தவரை இவை மட்டுமல்ல எல்லா விசயங்களும் மனதினுள் அடக்கம்.  விதை ஒன்று வீட்டில் கழனிப்பானையில் கிடக்கும்வரை அதற்கு காலமும் கிடையாது. செயல்பாடும் கிடையாது. எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி., ஆனால் அதே விதையை எடுத்து மண்ணில் போட்டு, தண்ணீர் பாய்ச்சினால், ஒளியின் உதவியோடு முளைவிட்டு செயல்பாட்டுக்கு வரும். அதன் பின்னர் அதன் வளர்ச்சி குறித்து நிறைய பேசிக்கொண்டு இருக்கலாம். இதற்கு முன்னர்வரை எதுவும் பேச முடியாது.

அதே போலத்தான் இயற்கையில் இருக்கின்ற   இந்த பிரபஞ்சத்தில் நாம் வந்து பிறந்திருக்கிறோம். நம்மைப் பொருத்தவரை நாம் உயிரோடு இருக்கும்வரை இதைப்பற்றி பேசலாம். நாம் இறக்கும்போது நம்மோடு பிரபஞ்சமும் மறைந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் இருக்கிறது.:)

இதில் நாம் அறிந்தவை/ அறிந்ததாக மனம் நம்புபவை சொற்பமே., அந்த அறிந்தவைகளும் ஒவ்வொருவரின் மனதிற்கேற்ப ஒவ்வொருவிதமாகவே புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது :) இதுவே கருத்துவேறுபாடுகளுக்கும், சச்சரவுகளுக்கும் அடிநாதமாக அமைந்துவிடுகிறது. இவற்றை தவிர்க்க, களைய என்ன வழி? நாம் எந்த விதமாக மாற்றம் பெற வேண்டும்?


தொடர்ந்து சிந்திப்போம்

Wednesday, July 4, 2012

கருணையே கடவுள்தன்மை



அன்புக்கும் கருணைக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் அன்பின் முதிர்ச்சி நிலை கருணை. அன்பு உயர்ந்தது என்றால் கருணை மகத்தானது. கருணை நிரம்பி வழிபவர்கள் அனைவரும் கடவுட்தன்மை நிரம்பி வழிபவர்கள் என்பதே உண்மை.

அன்பு உறவுகளை உண்டாக்கும் உந்துதலில் உதயமாவது. கருணையோ முன்பின் அறியாத உயிர்கள் மீதும் பரவலாக விரவி நிற்பது. எல்லா உறவுகளுமே நாளடைவில் நீர்த்துப் போகிற தன்மையுடையவை. உறவுகளின் இருப்பில் எப்போதும் எதிர்பார்ப்பு உட்கார்ந்திருக்கும். ஆளுமை, பொறாமை, அபகரிக்கும் எண்ணம் என்று அனைத்தும் உறவுகளால் ஏற்படும். சண்டையும் சச்சரவும் உறவுகளால் உண்டாகும். இந்த உறவுகள் கடமைகளைத் தாங்கியவை.

Tuesday, July 3, 2012

சுயமுன்னேற்றம் என்பதன் உண்மைநிலை என்ன?

நண்பர்களே சுயமுன்னேற்றக் கருத்துகள் எந்த அளவிற்கு நமக்கு உதவும். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் உதவுமா? அதன் மறுபக்கம் என்ன?

சுய முன்னேற்றக் கருத்துகள் மீது இரு வேறுபட்ட அபிப்ராயங்கள் உண்டு. இவற்றினால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் பலர் உண்டு நான் உட்பட.....எளிமையாகச் சொன்னால் இந்தக் கருத்துகள் திருமணத்திற்கு முன்னர் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கோ அல்லது தொழிலுக்கோ சென்று கொஞ்சம் கையில் காசு பார்க்கும் சமயத்தில் நாம் கேள்விப்பட்டால் நிச்சயம் கொஞ்சமேனும் பலனளிக்கும்.

Monday, July 2, 2012

திரும்பிப் பார்க்கிறேன் - தமிழ்மணம்




தமிழ்மணம் நேயர்களுக்கு வணக்கம். நிகழ்காலத்தில் சிவா என சுயகுறிப்பில் பெயர் இடம் பெற்றிருந்தாலும் என் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். பிறந்தது வளர்ந்தது இருப்பது எல்லாமே திருப்பூர்தான்.:)

திருப்பூரில் பனியன் உற்பத்தி துறையில் சுயதொழில் செய்து கொண்டு இருக்கிறேன். உழைப்பால் உயர்ந்தவன் என்று என்னை நானே தட்டிகொடுத்துக்கொள்வது உண்டு. உடலுக்கு வயது நாற்பதை தாண்டிவிட்டது. சிறுவயது முதல் எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருந்ததாலும், எதோ ஒரு வெறுமையை மனம் உணர்ந்ததாலும் ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்தேன்.

Wednesday, June 20, 2012

மூச்சு விடுவது எப்படி ?

நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம்.  படிக்கலாம் அல்லது  ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?

Monday, May 7, 2012

மனிதருள் வேறுபாடு ஏன் ?



கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.


Friday, April 20, 2012

போடா வெண்ணை.....

நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும்  கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது.  என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.

Thursday, January 5, 2012

சொர்க்க வாசல் திறப்பு....

நட்புகளுக்கு., இந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்போது படிப்பவருக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் தூண்டுதலை ஏற்படுத்தவேண்டும். என்ற நோக்கத்தோடுதான் ஆரம்பித்தேன்.  அதே சமயம் நான் எந்த அளவில் மனம் சார்ந்த விசயங்களில் புரிதலோடும்/செயல்பாட்டிலும் இருக்கிறேன் என்ற சுய பரிசோதனை முயற்சியுமாக ஆரம்பித்தேன்.

வலைதளங்களில் மனம் சார்ந்த விசயக்களை எழுதுபவர்கள் குறைவாக இருப்பதால் இணையத்தில் தேடுவோருக்கு இவை கிடைக்கவேண்டும் என்ற உந்துதலாலும் தொடர்ந்து  மனம் சார்ந்து ஆன்மீக கருத்துகளை பகிர்ந்து வருகிறேன்.

Sunday, January 1, 2012

இனி வரும் நாட்களே நம் கையில்-2012

ஆங்கில புத்தாண்டு 2012 தொடங்கிவிட்டது. இந்த வருடம் நம் அனைவருக்கும் மகிழ்வான தருணங்களை அதிகம் தரட்டும் என உள்ளன்போடு பிரார்த்திக்கிறேன்.

துன்பங்களே இன்றி இருக்க இயலாது. அதை எதிர் கொள்ளும் மன வலிமை நமக்கு அதிகரிக்க வேண்டும் என்கிற புரிதல் நமக்குள் வளரட்டும்.

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

Wednesday, October 19, 2011

மனமென்பது மாயமா?--கழுகு வலைதளத்தில்

நண்பர்களே., வலைதளத்தில் நான் சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து வந்தாலும்,கழுகு என்ற வலைதளம் சமுதாய விழிப்புணர்வு நோக்கோடு, தனிமனிதனின் உயர்வு சமுதாயத்தின் உயர்வு என்ற் உணர்வுடன் இயங்கி வருகின்றது.,

Wednesday, May 25, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 7

மே மாதம் முழுவதுமே சட்டசபைத்தேர்தல் முடிவினை எதிர்ப்பார்த்தும், கணிப்புகளும், கருத்துகளுமாக அனைவருமே பரபரப்பாக இருந்தனர் என்றால் அது மிகையில்லை. ஆக பரபரப்புகள் இப்போதைக்கு ஓய்ந்து விட்டது. நாம் அன்றாட அலுவல்களில், வாழ்வில் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய நிதர்சனத்திற்கு வந்துவிட்டோம்.

Friday, April 29, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 6

நோய், மனச்சோர்வு, சந்தேகம் இவைகள் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைக்கற்கள் ஆகும். தொடர்ந்து பார்ப்போம்...


ஊக்கம் இன்மையும், சோம்பலும் பார்க்க வேறுவேறு ஆகத் தோன்றினாலும் இவைகள் அண்ணன் தம்பிகள்தாம்:) 

Thursday, April 28, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 5

முதலில் தியானம் தவம் ஆகியவைகள் ஏன் நமக்கு சட்டென பிடிபடுவதில்லை என்பதற்கான காரணங்கள் என்ன?

சிலவிசயங்களை மேலோட்டமாகவே தருகிறேன். இவைகள் உங்கள் சிந்தனையைத் தூண்ட மட்டுமே. ஏனெனில் இவை மிக முக்கியமான அம்சங்கள். உங்கள் சிந்தனைக்கு இந்த கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் விளைவு கிடைக்கும்.