"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, February 8, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி 3

ஒருமுறை சதுரகிரிமலை ஏற சாதாரணமாக நமக்கு 5 மணி நேரம்  ஆகும். இந்த சுமைதூக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதரணமாக ஏறிஇறங்குகின்றனர்.  சீசன் சமயங்களில் மூன்று முறை கூட ஏறுவார்களாம். முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது.  இன்னும் செல்லச் செல்ல  வழியில் தென்பட்டது குதிரை ஊத்து....கூர்ந்து கவனித்தால் இரண்டு பாறைகளுக்கு இடையே கனமான வேர் ஒன்றை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதைப் பிடித்துக்கொண்டே போகலாம்...



நாங்கள் சென்ற காலம் டிசம்பர் 25 என்பதையும் தமிழகத்தில் பெரு மழைக்காலம் முடிவுற்ற சமயம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பளிங்கு போன்ற நீர் ஓடிக்கொண்டு இருந்தது.

அதைக்கடந்து இன்னும் மேலே செல்லச் செல்ல வழுக்குப்பாறை என அழைக்கப்படும் படிவெட்டிப்பாறை இருந்தது. படி வெட்டாததற்கு முன் வழுக்கியதால் இந்தப்பெயர் வந்திருக்கலாம். படிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் பயமின்றி நடக்கலாம். இதே போன்ற இன்னும் அதிகம் படிகொண்ட பாறை ஒன்று மேலே செல்லம்போது இருந்தது:))


அந்தப் பாறையிலிருந்து மறுபுறம் கீழே தேங்கி இருக்கும் நீர்....நன்றாக ஓடி ஆடி  குளிக்கலாம். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இறங்க வேண்டும். ஆழம் அதிகம் இல்லை.

 அதே பாறை மேலிருந்து கீழ் நோக்கிய பார்வையில்................

பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா

9 comments:

  1. சதுரகிரிக்கு செல்லும் ஆசையை தூண்டுகிறது உங்கள் எழுத்தும், புகைப்படங்களும்.

    உண்மையில் சாதாரண கோயிலுக்கு போவதைவிட, இதுபோன்ற மலைசார்ந்த பயணம் மனம், உடல் இரண்டுக்கும் நல்லது.

    ReplyDelete
  2. நாம் பெரும்பாலும் உருப்படியான இடங்களுக்குச் செல்ல விரும்புவதே இல்லை. அற்புதமாக எடுத்துள்ள இந்த படங்களைப் பார்க்கும் போது மனதிற்குள் பல பாடங்கள் கற்றுத் தருவது போல் இருக்கிறது. எந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும் என்றாலும் குழந்தைகளும் மனதில் வந்து போவதால் இன்னும் சில வருடங்கள் கழித்து இது போன்ற இடங்களுக்குச் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் தரும் விசயங்கள் எனக்கு புதிதாக இருக்கிறது.

    ReplyDelete
  3. போட்டோக்கள் அருமையாக இருக்கின்றன. தொடரை ஆழ்ந்து படிக்க புக்மார்க் பண்ணி வைத்துள்ளேன். படித்து பிறகு கருத்துகள் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா...

    நன்றி சிவா., சற்று தனிமையாக பாசாங்கின்றி இருக்கும் வாய்ப்பு இது போன்ற இடங்களில்தான்..

    ReplyDelete
  5. //எந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமென்றும் என்றாலும் குழந்தைகளும் மனதில் வந்து போவதால் இன்னும் சில வருடங்கள் கழித்து இது போன்ற இடங்களுக்குச் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும்.//

    இல்லை ஜோதிஜி.. இப்போதே நேரத்தை ஏற்படுத்திக்கொண்டாவது பல இடங்களுக்கும் நாம் தனியாக சென்று வரவேண்டும். பின்னர் அவர்களுடன் செல்லும் போது இந்த அனுபவம் மிக உதவியாக இருக்கும் எல்லாவிதத்திலும்......

    ReplyDelete
  6. DrPKandaswamyPhD

    தங்களின் வருகைக்கு நன்றிகள் பல:))

    கருத்துக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. சதுரகிரி அழகிய படங்களுடன் கவர்கிறது.

    ReplyDelete
  8. hello!sir.i am rajesh.from;trichy.ennakku siththa,ayurved aciramam paththi theriuma. selluka.treatment edukkunum. kollimalai irrutha .plz.selluga. mail id;rajmaya84@yahoo.com

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)