"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, January 22, 2013

டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழா - திருப்பூர்

திருப்பூர் வந்தோரை வாழவைக்கும் நகரம். பனியன் தொழில் ஏற்றுமதித்துறையில் சாதித்துக்கொண்டிருந்த நகரம். சினிமாத்துறைக்கு ஈடாக பல்வேறு உபதொழில்களை தன்னகத்தே கொண்டு பலரையும் உயரவைக்கும் நகரம்.

சிலரை குப்புறத் தள்ளியும் வேடிக்கை பார்த்திருக்கும். அது நகரத்தின் குற்றமல்ல.. வீழ்ச்சியின் பின்னணியில் இருக்கும் சங்கதிகளை ஆராய்ந்தால் தெளிவாகத் தெரியும்.

முயல் போன்ற ஓட்டம் இங்கே வேலைக்கு ஆகாது. குதிரை போன்று ஓடிக்கொண்டு இருக்க வேண்டும். எதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மை., பொறுமையிலும் பொறுமை என்பதெல்லாம் இத்தொழில் செய்வோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படைக்குணங்கள்.

வடமாநிலங்களில் இருந்து வந்து உழைக்கத் தயாராக இருப்பவர்கள் கூட எனக்கு இன்ன சம்பளம் வேண்டும் கேட்டு வாங்கும் நிலை இங்கே உண்டு. கொடுப்பதை வாங்கிக்கொள் என்கிற அடிமைத்தனம் இங்கே அறவே இல்லை. அதேசமயம் உழைப்பதிலும், புத்திக்கூர்மையிலும் நுட்பங்கள் அவசியம் தேவை என்பதே இங்கே முன்னேற ஆசைப்படுபவர்களின் அடிப்படைத் தகுதி.

அப்படி தனது உழைப்பால் இன்று குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கும் திருப்பூர் நண்பர் ஜோதிஜி அவர்கள்  அனுபவத்தை ஆர்வமுள்ளவர்களுக்கு  பயன் தரும் விதத்தில் 4தமிழ்மீடியா நிறுவனம் நூலாக பதிப்பித்திருக்கிறார்கள்.



விழாவிற்கு  26 ம் தேதி திருப்பூர் வருபவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். தங்குமிடம் பற்றிய விவரங்கள் தருகிறேன். என் அலைபேசி எண் 9790036233

 விழாவில் கலந்து கொள்வதில் சிரமம் இருப்பவர்களுக்கு டாலர்நகரம் புத்தகம் திருப்பூர் 2013 புத்தக கண்காட்சியில் கிடைக்கும்


5 comments:

  1. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்க்கள் ஜோதிஜி!!

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)