"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, January 1, 2012

இனி வரும் நாட்களே நம் கையில்-2012

ஆங்கில புத்தாண்டு 2012 தொடங்கிவிட்டது. இந்த வருடம் நம் அனைவருக்கும் மகிழ்வான தருணங்களை அதிகம் தரட்டும் என உள்ளன்போடு பிரார்த்திக்கிறேன்.

துன்பங்களே இன்றி இருக்க இயலாது. அதை எதிர் கொள்ளும் மன வலிமை நமக்கு அதிகரிக்க வேண்டும் என்கிற புரிதல் நமக்குள் வளரட்டும்.

Saturday, December 17, 2011

"பால் காய்ச்ச தெரியுமா?'

 பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும்.

Tuesday, November 15, 2011

ஏற்றுக்கொள்வதா..? ஒத்துக்கொள்வதா....?

நாம்  எந்த ஒரு விசயமாக இருந்தாலும் ஓரளவிற்கு அதைப்பற்றி அறிந்தே வைத்திருக்கிறோம். அது அரசியலாகட்டும். ஆன்மீகம் ஆகட்டும். தொழில் சார்ந்த நடவடிக்கைகள் ஆகட்டும், உறவுகள் ஆகட்டும். நமக்கென ஒரு கருத்து நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

நம் கருத்துடன் ஒத்துபோகிறவர்கள் நமக்கு நண்பர்கள். நம் கருத்தை (முழுமையாக) எதிர்ப்பவர்களோடு நமக்கு ஒட்டுதல் வருவதில்லை என்பது யதார்த்தம். அதையை மீறி நட்பு எனில் அந்த கருத்து இருவருக்குமே அவ்வளவு முக்கியமானதில்லை  என்பதே உண்மை.

Tuesday, October 25, 2011

திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவு

திருக்கைலை யாத்திரை 2012 முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.

நான் தற்போதுதான் திருக்கைலை யாத்திரை 2011 தொடர் எழுதியிருந்தேன். அப்போது பலரும் என்னிடம் தகுந்த பயண ஏற்பாட்டாளர்களை அறிமுகப்படுத்தக் கேட்டிருந்தார்கள்.

Thursday, October 20, 2011

நானும் அப்பாடக்கர்தான்...தமிழ்மணம்

இது பற்றி பேசவே கூடாது. தமிழ் வலையுலகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கும்போது, அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் எனது கருத்துகள் எரிகிற தீயில் எண்ணையாக பார்க்கப்பட்டு,  இன்னும் தூண்டுதலாக அமைந்துவிடுமோ என நினைத்து முடிந்தவரை  பகிர்வதை தவிர்த்தே எழுதியும் டிராப்டில் போட்டுவிட்டேன்.;)

Wednesday, October 19, 2011

மனமென்பது மாயமா?--கழுகு வலைதளத்தில்

நண்பர்களே., வலைதளத்தில் நான் சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து வந்தாலும்,கழுகு என்ற வலைதளம் சமுதாய விழிப்புணர்வு நோக்கோடு, தனிமனிதனின் உயர்வு சமுதாயத்தின் உயர்வு என்ற் உணர்வுடன் இயங்கி வருகின்றது.,