"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, September 15, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...4

டில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்க்கான நேரம் நெருங்கியது. அறையைக்காலி செய்துவிட்டு, செண்ட்ரல் ஸ்டேசனில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் எந்த பிளாட்பார்மில் நிற்கிறது என்பதை டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் பார்த்து 5 வது பிளாட்பார்ம்க்கு சென்றோம். ஏறத்தாழ அனைவருமே வந்துவிட்டனர். அனைவருக்கும் மஞ்சள் வண்ணத்துடன் கூடிய தொப்பியும் கழுத்தில் தொங்கவிடும் வகையிலான அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டது.

Tuesday, September 14, 2010

பன்றிக்காய்ச்சல் தடுப்பூஊசி 150 ரூபாய்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவி வருவதை தடுக்கும் வகையில் புதிய தடுப்பு ஊசி விலை 150.00 ரூபாய். வருத்தம் கலந்த மகிழ்ச்சியான செய்தி...

ஏன் வருத்தம்? தமிழக அரசு இலவசத்தொலைக்காட்சி அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்க முடிகிற்து. குடிசைகளை மாற்றி இலவச வீடு கட்டித்தரமுடிகிறது. இலவசமாக விவசாயிகளுக்கு மோட்டார் தரமுடிகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் வாழ்க்கையின் அத்தியாவசியமாக இல்லாதபோதும் தரப்படுகிறது.

Thursday, September 9, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...3

திருப்பூரில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோர் தொழில்ரீதியாக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருப்பதால் பலசமயங்களிலும் நீறுபூத்த நெருப்புப்போல்தான் தன் குடும்பத்தினரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தமுடிகிறது. இப்படித்தான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2

அலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்துவிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா?’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..

Tuesday, September 7, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்

மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.

Thursday, September 2, 2010

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.