"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, November 23, 2009

நடராஜர் கோவிலில் ராஜாத்தி (அம்மாள்) சாமி தரிசனம்

சிதம்பரம், நவ.23-
சிதம்பரம் நடராஜர் கோவிலில், முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனுடன் சாமி தரிசனம் செய்தார்.

முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி, தனது பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யனுடன் நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். தி.மு.க. நகர செயலர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

கோவிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாள், ஆதிமூலநாதர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.


நன்றி தினமலர்-23-11-2009 கடைசிப்பக்க செய்தி

டவுட் தனபாலுக்கான பதில் - முதல் மனிதனின் வினை

திரு.டவுட் தனபால் அவர்களின் சென்ற இடுகையை ஒட்டிய கேள்வி

\\என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் செய்த வினை (செயல்) தான் காரணம் என்றால், நான் இவ்வுலகில் முதன் முதலில் ஒரு பிறப்பு எடுத்திருப்பேன் அல்லவா? [அதற்கு முன் பிறப்பில்லை.] அப்படிபட்ட முதல் பிறப்பில் நான் செய்த செயல்களுக்கு எது காரணமாக இருந்தது?


முன்னால் எதுவும் செயலும் விளைவும் இல்லாத சூழலில் எனக்கு நிகழ்வுகள் எப்படி ஏற்படுத்தபட்டது? \\

டிஸ்கி:என்னைச் சார்ந்த மரியாதைக்குரிய புரியாத பொன்னுசாமி அவர்களிடம் இந்த கேள்வியின் விபரம் தரப்பட்டு அதற்கான பதில் வாங்கி இங்கு இடுகையாக வெளியிடப்படுகிறது.:))


முதல்ல இந்த கேள்வியின் அடிப்படை முதல் மனிதன் திடீரென தோன்றினான். எனவே மனிதன் திடீரென படைக்கப் பட்டதால் அதற்கு முன்னதாக எந்த செயலும் இல்லை, விளைவும் இல்லை. பின் எப்படி விளைவு வந்தது ? சரிங்களா !!”

இதையே கொஞ்சம் மாற்றிப் பாருங்க..

முதல் பிறப்பு, முதல் மனிதன் அப்படிங்கறதே இல்லை, எந்தக் கடவுளும் மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்தவன்தான். விலங்கினங்களிடம் இருந்த அடிப்படைக் குணங்கள் அவனிடமும் இருந்தன,

எனவே விலங்கினத்தொடர் மனிதன், அப்படின்னா
விலங்கினப் பதிவுகள் நம் வினைகள், அவ்வளவுதான்.

போதுங்களா., தேவைன்னா இனி சற்று விளக்கமாப் பார்ப்போம்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நான்கு கால்களோடு வாழ்ந்த ஐயறிவு உயிரினங்கள், பின்கால்கள் இரண்டைக் கொண்டே நிற்கப் பழகிக் கொண்டு, இரண்டுகால் உடைய உயிரினமாகவும், அதிலிருந்து ஆதிமனிதனாகவும் பரிணாமம் அடைந்தன.

ஆதிமனிதன் ஒருபோதும் கடவுளால் இப்போது உள்ளவாறு திடீரென படைக்கப் படவில்லை, அதேசமயம் மனிதனுக்காக வேறு எந்த உயிரினத்தையும் படைக்கவில்லை. :))

 பரிணாம வளர்ச்சியில் யூகம், அனுமானம் என்கிற ஆறாவது அறிவுடன் மனிதன்வந்தான்.

இவையெல்லாம் வருவதற்கு பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவே மனித பரிணாம வளர்ச்சியின் சாரம்.

மனிதன் எங்கிருந்து வந்தான் எனப்பார்த்தால் பல கோடி வருடங்களாக பல உயிரினங்களின் வித்துத் தொடராக வந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறான்.

பிரபஞ்சம் உருவாகி விரிவடைந்து வரும் கோடிக்கணக்காக வருடங்களில் இப்புவியில் நிலம், நீர், காற்று, வெப்பம், விண் முதலான பஞ்சபூதங்கள் முதலியன  ஒரு பொருத்தமான கூட்டாக தக்க சூழ்நிலையில் சேர்ந்தது.

அப்போது அது ஒரு செல் உயிரினமாக நீரில் தோன்றியதிலிருந்து விலங்கினம் வரை வித்துத் தொடராக அவற்றின் வாழ்க்கை முறைப் பதிவுகள் அனைத்தும் நம்முள்ளே உண்டு. ஆகையால் மனிதனிடத்தில், அவனுடைய வித்தில், கருமையத்தில் இவை அனைத்தின் சாரம்சமும் உள்ளடங்கியே இருக்கும்.

சரி அந்த சாராம்சம் என்ன பறித்துண்ணுதல்

சுருக்கமாக..  ஈரறிவு முதல் ஐயறிவு வரை உள்ள உயிரினங்கள் அனைத்திலும் பெரும்பான்மையாக, வேறு ஒரு உயிரைக் கொன்று அதன் உடலை உணவாகக் கொண்டே வாழுகின்றன,

இந்த விலங்கினத்தின் வித்தில், உடலில், மூளையில் பிற உயிரைப் பறித்து உண்ணும் செயல்களும், குணங்களுமே பதிவுகளாக உள்ளன. அதே விலங்கினத்தின் வித்துத் தொடராகத்தான் மனிதன் வந்திருக்கிறான்.

பிற உயிரின் வாழும் சுதந்திரத்தை அழித்தல்
பிற உயிரைத் துன்புறுத்தல், கொல்லுதல்,
பிற உயிரின் பொருளைத்திருடுதல் - இதுவே விலங்கின செயல்


உணவாகப் போகிற, உணவாக்கிக்கொள்கிற இரு உயிர்களின் போராட்டத்தில் ஒன்றால் மற்றொன்றுக்கு துன்பம் விளையும்போது அதை சமாளிக்க எழும் வேகம், கோபமாகவும், பயமாகவும், தனது உணவை மற்றவை பறிக்க வரும்போது அதை காப்பாற்றிக்கொள்ள முனைவது (அதிக)ஆசையாகவும், தன்னைத்துன்புறுத்திய உயிரினத்தை எதிர்க்கும் முயற்சி தோல்வியடையும்போது எழும் உணர்வு வஞ்சமாகவும் வளர்ந்து தொடர்ந்து நீடித்து நம்மிடம் வந்துள்ளது.

இதே பண்புகள் நவீனமாக மனிதனிடத்தில் பொருள்,புகழ், அதிகாரம்,புலனின்ப வசதிகளுக்கான வேட்கையாக மாறி, அதற்கான வெளிப்பாடாக பொய்,சூது,களவு,கொலை,கற்பழிவு எனும் தீய செயல்களாக பல இலட்சம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது..

இது மேலும் மேலும் அதிகமாகி தீவினைப் பதிவுகளாக நமக்கு சேர்ந்து கொண்டே வருகிறது. மனிதனுக்கு வினை வந்த வழி இதுதான்.

இதை உணர்வது ஆறாவது அறிவு, உணர்ந்துபின் அதை களைவதுதான் நமது வாழ்வின் அமைதிக்கு வழி.

தான் பண்படுதல், தனக்கும் பிறர்க்கும் பயன்படுதல். இதுவே வினை அழிக்கும் மந்திரம்.

அவ்வளவுதான் விசயம். இதை நண்பர் டவுட் தனபாலிடம் சேர்த்து விடுங்கள், இதில ஏதாவது டவுட் வந்தா அதையும் அய்யா கிட்ட சொல்லிடுங்க..

-----புரியாத பொன்னுசாமி.

Saturday, November 21, 2009

பாவ புண்ணியங்களும் அதன் விளைவுகளும்

சிலர் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு மாறாகவும் பயன்களை அனுபவிக்கின்றனர்-இது ஏன்?


செயலுக்குத் தக்க விளைவு என்பது இயற்கை நியதி. இதில் சிறிது கூட தவறு இராது.வராது.

செயலுக்கும் விளைவுக்கும் இடையே உள்ள காலநீளம் பல காரணங்களினால் வேறுபடும். மனிதன் ஆயுள் ஒரு எல்லை உடையது. இதனால் எல்லா செயல்களுக்கும் விளைவுகளை இணைத்துப் பார்ப்பதில் பொருத்தமில்லாமல் போகிறது.

ஒரு செயலுக்கு அடுத்த நிமிடமே விளைவு உண்டாகலாம்,
மற்றொரு செயலுக்கு 100 ஆண்டுகள் கழித்து விளைவு வரலாம்.
இன்னொரு செயல் அதைச் செய்தவரிடம் கருவமைப்பாக பதிந்து மூன்று அல்லது நான்கு தலைமுறைக்குப் பின்கூட விளைவு வரலாம்.

கணித்து இணைத்துப் பார்ப்பதில் தவறு இருக்குமே தவிர இயற்கைச் சட்டத்தில் என்றுமே தவறு இருக்க முடியாது.

இதனாலேயே நாம் செய்யும் செயல்கள் முடிந்தவரை பிறரின் உடல், உயிர்,மனம் இவற்றிற்கு துன்பம் தருமா என்பதை ஆராய்ந்து செயலாற்ற வேண்டும். அதே சமயம் நமது உடல்,ம்னம், உயிருக்கு இனிமை தருவதாகவும் அமைய வேண்டும்.

நன்றி - அன்பொளி 1983ம் வருடம் -  வேதாத்திரி மகரிஷி

வருங்கால சந்ததிக்கு நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சேர்த்து வைக்கும் சொத்து வினைப்பதிவுகளே. ஆகவே நம் வினைகளை தேர்ந்து செய்வோம்.

Wednesday, November 18, 2009

சிந்தனையை மாற்றுங்கள், சிக்கல்கள் விலகும்

வெற்றியாளன் எப்போதும் நேர்மறைச் சிந்தனையாளனாகவே திகழ்கிறான்.
தோல்வியாளன் எப்போதும் எதிர்மறைச் சிந்தனையாளனாகவே திகழ்கிறான்



எதிர்மறைச் சிந்தனை என்பது அச்சத்தின் காரணமாகப் பிறவியிலிருந்தே இயல்பாய் நம்மிடம் இருக்கும் அவநம்பிக்கைதான்.

நம்மைச் சுற்றி தோல்வி அலைகளான negative waves அடர்த்தியாய்ச் சூழ்ந்து கொண்டால் தொட்டது எதுவும் துலங்காது.

அதேசமயம் நேர்மறைச் சிந்தனை என்பது இயல்பாக நம்மிடையே இருப்பதுஅல்ல. ஊக்கத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்வதால்தான் வரக்கூடியது.

நம்பிக்கைதான் இந்தசிந்தனையின் அடிப்படை.இந்த சிந்தனை வளர வளர நம்மைச் சுற்றி வெற்றி அலைகள் ‘possitive waves'
அடர்த்தியாய்ச் சூழ்ந்து கொள்வதால் தொட்டது துலங்கும்.


பூக்கள் பூத்திருக்கும் தோட்டத்தில் ‘கும்ம்ம்...’மென்று பூவின் மணம் வரும், 

குப்பையும் சாக்கடையும் நிறைந்திருக்கும் பகுதியிலிருந்து குடலைப்புரட்டும் கெட்ட நாற்றம்தான் வரும்.

நீங்கள் பூ வாசம் வீசும் நேர்மறைச் சிந்தனையாளாரா? சாக்கடை நாற்றம் மிக்க எதிர்மறைச் சிந்தனையாளாரா? யாராக வேண்டுமானாலும் இருக்க
உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. முடிவு செய்து செயல்படுங்கள் :))

எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! எப்படி- என்கிற நூலில் இருந்து..

குடும்பத்தில் இனிமை நிலவ... (18+)

 கள்ளத் தொடர்பு என்பது கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வேறு துணைதேடிப் போவது என நினைக்கிறேன். வாழ்க்கைதுணை அல்லாத வேறு ஒருவருடன் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது என பொதுவாக வைத்துக் கொள்வோம்.

இது ஏன் நிகழ்கிறது?

ஆணோ பெண்ணோ தாம்பத்யத்தில் நிறைவு பெறாமல் இருக்கும்போது, வேறு ஒருவர் தூண்டில் போட்டால் சிக்கி விடுகிறார்கள்., அல்லது இவர்களே வலை வீசி பிடித்து விடுகின்றனர். :))

இது தவறா சரியா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போகவில்லை.,

சமுதாய அமைப்பில் இது தவறு என்றாலும் அவர்களைப் பொறுத்தவரை இது சரியே!


ரி தன் வாழ்க்கைத்துணையிடம் இல்லாதது பிறரிடம் என்ன அதிகமாக இருக்கிறது? எனக்குத் தேவையானதை இங்கேயே கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே,


“எனக்கு என் மகிழ்ச்சிதான் முக்கியம், அதற்கு ஒரேவிதமான தாம்பத்ய நிலைகள் சலித்துப்போய்விட்டது. வித்தியாசம் வித்தியாசமாக இருக்க வேண்டும். என் துணை ஒத்துக்கொள்ளவில்லை, அதனால வேறுபக்கம் போய்விட்டேன், அங்க எனக்கு திருப்தியா இருக்கு.”

”அட அறிவு அதிகமா போனவனே, உன்னோட சொகத்த பார்த்தியே, உன்னோட துணையின் சுகத்த, திருப்திய என்னிக்காவது நினைச்சுப் பார்த்திருக்கியா, அவங்கள திருப்தின்னு மனசில இருந்து சொல்ற மாதிரி நீ செயல்பட்டு இருக்கியா? அவங்க திருப்தியா இருந்தா நிச்சயமா உன்னோட தேவைய நிறைவு செய்வாங்க, எப்படி வேணுமோ அப்படி:))

உன்னோட வேல முடிஞ்ச உடனே ஒதுங்கிட்டீன்னா அவங்களுக்கு ஏமாற்றம்தான், ரிசல்ட் என்ன,?

உடல்வேகம் தாங்க கூடிய அளவில இருந்தா உங்கோட மட்டும்தான் தாம்பத்யம், உடல்வேகம் எல்லைமீறி அளவுக்குஅதிகமா இருந்தா வேலிதாண்டிருவாங்க..

உடல்தாங்கினாலும் மனம்நிச்சயம் தாங்காது, அது எப்படி வெளியாகும் தெரியுமா, எரிச்சல், சண்டை, கெளரவம் பார்க்கிறது அப்படி வெளிப்படும். அதுக்கும், தாம்பத்யத்திற்கும் சம்பந்தமில்லை அப்படின்னு நினைக்காத,

தாம்பத்யத்துல இரண்டுபேருக்கும் முழுநிறைவு வந்துச்சுன்னா கண்டிப்பா இருவருக்குள்ளும் ஒரு அந்நியோன்யம் வந்து விடும், வேறு எந்த
பிரச்சினையா இருந்தாலும் உக்காந்து பேச மனசு வரும், தீர்வு கிடைக்கும்.வேறு எதுவும் உள்ள வந்து சண்டைய உருவாக்க முடியாது.

அது இல்லைன்னா சாதரணபிரச்சினை கூட சண்டைக்குரியதா மாறிவிடும். மூணாவது மனுசன் உள்ள வந்தால் அதோகதிதான்..


இனிமே உங்க தேவையத் தீர்த்துக்குங்க, கூடவே துணையிடம் நிறைவா இருந்ததா அப்படீன்னு கேட்டுக்குங்க, அப்பதான் அடுத்தமுறை சரியாச்’செய்ய’முடியும்.

நான் என் துணையின் உடலும்,மனமும் நிறைவாயிற்றா என சூழ்நிலையைப் பொறுத்து அடுத்தநாள் காலையிலாவது கண்டிப்பாக கேட்கிறேன்.
இந்த பழக்கம் என் துணைக்கும் ஒட்டிக்கொண்டு எனக்கு போதுமா என்கிறாள்.

அன்பு மட்டுமல்ல, காமமும் பகிரப்பகிர இருவருக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனம் நிறைவடைந்தால் அங்கு ஏது பிரச்சினை,!!

டிஸ்கி:இது ஒரு சதவீதமேனும் உங்களுக்கு  உடன்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.  இந்த கருத்து நண்பர்களிடம் வரும் என எதிர்பார்த்து இந்த இடுகையை வெளியிட்டேன். நான் வெளியிட்ட விதம், நடை சரியில்லை போல இருக்கிறது.  வாழ்த்துமழையில் நனைந்து விட்டேன்:))

பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.

சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின்
விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது;

விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என,
முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமலர்


நிதானம், பொறுமை என்ற வார்த்தைகளின் பொருள் தெரியாதவராக இருந்திருக்கிறார் பிரபாகரன்.

காலம், விஞ்ஞானமும் எவ்வளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும், எவ்வளவு அதிமுக்கிய முல்லைப்பெரியார், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஈழத்தமிழர் மீதான தாக்குதலின்போதும் பொறுமையாகவும், அவசரமின்றியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கலஞைர் காத்திருக்கவில்லையா?

தமிழ் ஈழம் என்பது தமிழக மத்திய மந்திரி பதவியைவிட உயர்ந்ததா, நேரில்  சென்று தங்கி வாங்கிவர..?

கலைஞரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று பிரபாகரன் உயிரோடும், சுகமாக இருந்திருக்கலாம், பிழைக்கத் தெரியாத பிரபாகரன்.