"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 19, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 2

எதிர்ப்பின்மை என்பது என்ன. இது மனதளவில் ஏற்பட வேண்டும். முதலில் மனம் எதனோடும் முரண்படாதிருத்தல் என்பதை புரிந்து கொள்வோம். அதெப்படி? என்று உங்கள் மனம் கேட்கும்:) இதுதான் எதிர்ப்பு என்பது. அதாவது உடனடியாக மனம் எதற்கும் எதிர்வினையாற்றும். அளவு கடந்த வேகத்துடன் அது இயங்கும்.

Friday, April 15, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 1

ஆன்மீகம் என்பது என்ன? என்ற கேள்வி நமக்குள் எழாதவரை மனதிற்கு குழப்பம் ஏதும் இல்லை. நிம்மதியாக கோவிலுக்கு போனோமா, சாமி கும்பிட்டமான்னு பொழப்ப ஓட்டிவிடலாம். எந்த ஆராய்ச்சியும் எனக்கு வேண்டாம் என நிம்மதியாக காலந்தள்ளிவிடலாம்:)

Thursday, March 31, 2011

திமுக ஆட்சி இந்த ஒன்றிற்காகவேனும் ஒழியவேண்டும்:(

எல்லா அரசியல் கட்சிகளுமே சம்பாதிக்க மட்டுமே ஆட்சிக்கு வரத்துடிக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை ஆற்ற அல்ல என்பதை நன்கு நாம் தெரிந்து வைத்திருந்தாலும் எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என அடையாளம் காண வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

Tuesday, March 29, 2011

தேர்தல் கமிசனின் குழப்பமான உத்தரவுகள்.

தேர்தல் வந்தாலும் வந்தது. வழியில் செக்போஸ்ட் நடவடிக்கைகள் வேடிக்கையாகவே இருக்கின்றன. சரி அவர்கள் கடமையைத்தான் செய்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்!! தேர்தல் கமிசன் என்ன சொல்லி இருக்கு. வாகனங்களை சோதனையிட்டு ஒரு லட்சத்திற்கு மேல் பணமாகவோ, அல்லது சந்தேகப்படும்படியான இலவசத்திற்கான பொருள்களோ இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும்.

Wednesday, March 23, 2011

மண்ணின் வாசம் - பருப்பாம் பருப்பாம்

ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் வீட்டுவாசலில்......


சின்னவள்:ஏய்., பருப்பாம் பருப்பாம் விளையாடலாம் வாடி..

பெரியவள்: சரி வா விளையாடலாம்..

பருப்பாம் பருப்பாம் பன்னெண்டு பருப்பாம்

சுக்கத்தட்டி சோத்துல போட்டு

குள்ளீம்மா குழலூத

ராக்காத்தா வெளக்கெடுக்கங்

கொப்பம் பேரென்ன?


சின்னவள்: ம்ம்.........கொழுத்தபன்னி

பெரியவள்: ஏய் அப்படி இல்லைடி ’முருங்கப்பூ’ அப்படின்னு சொல்லனும்

சின்னவள்: சொல்லமுடியாது. நீ ஏண்டி எங்கப்பாவை ’உங்கொப்பன்’னு சொன்ன....  போடி நா வரல விளையாட்டுக்கு....



Tuesday, March 22, 2011

சதுரகிரி கோரக்கர் குகை - நிறைவுப்பகுதி

பெரிய மகாலிங்கத்தை தரிசித்துவிட்டு கீழிறங்கி வந்தவுடன் கஞ்சி மடத்தில் உணவருந்திவிட்டு சற்றே ஓய்வெடுத்தோம். பின் சற்று மேல் புறம் அமைந்துள்ள சந்தனமகாலிங்கம் சந்நதியை சென்று அடைந்தோம்.