"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 4, 2010

பேரன்பும்..... மனநோயும்...

பதிவுலகில் நான் மதிக்கும் நண்பர்களுள் ஒருவர் ஸ்வாமி ஓம்கார்
முடிந்தவரை நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்

Tuesday, March 2, 2010

கல்கி ஆசிரமமும் நித்தியானந்தரும்

இன்று விசேசமான நாள் போலிருக்கிறது..

சென்னை கல்கிபகவான் ஆசிரமம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டிருக்கிறது..



Friday, February 26, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு

பதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.

Sunday, February 21, 2010

படித்ததில் பிடித்தது 21/02/2010

”எப்படித்தான் பொய் கணக்கு எழுதறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு”

”ஏன்?”

Monday, February 15, 2010

படித்ததில் பிடித்தது 15/02/2010

நண்பர் ஆரூரன் விசுவநாதன் அவர்களின் இடுகையை படித்தவுடன் இன்னும் நிறையப் பேருக்குச் சென்று சேரவேண்டியது அவசியம் எனக் கருதியதால் உங்களுக்காக இங்கே


கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சி


ஆரூரான் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்

Thursday, February 4, 2010

எதிர்காலம் குறித்த அச்சம் (மனதை....பகுதி இரண்டு)

எதிர்காலம் குறித்த அச்சம்

எதிர்காலத்தை எண்ணி எந்த நேரமும் அச்சம் கொள்வது.. அவநம்பிக்கை கொள்வது, மனதை விட்டு அகற்ற வேண்டியது அவசியம்.

எதிர்காலத்தில் நாம் எப்படி வரவேண்டும், வாழவேண்டும் என திட்டமிடுதல், அதன்படி வாழ்தல் என்பது வேறு. ஆனால் எதிர்காலத்தில் எப்படி ஆவோம், அல்லது வாழ்வோமோ என்ற அச்சம் அறவே கூடாது.

இந்த அச்சம் ஏன் வருகிறது?. போதுமான விளக்கமும், விழிப்பும் அறிவுக்கு கிடைக்காததே..

விதியின் பிடியில், மாயையின் பிடியில், மனதின் பிடியில் சிக்கிக்கொண்டு மனம் போன போக்கில் வாழ்கிறோம். எந்தவித திட்டமிடுதலும் இல்லை. ஆனால் வருமானம் வாடகை, வட்டி, தரகு என்றோ அல்லது தொழில் நல்ல முறையில் நடப்பதாலோ வருமானம் வந்து குவியும்.

அப்போது இந்த பணம் ஏன் நமக்கு வருகிறது.? எந்த வழியில் வருகிறது.? இதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை என்றாலே நாம் விதியின் பிடியில் இருக்கிறோம் என்று பொருள்.

"கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன் காரணங்கள் இவை
எனும் தெளிவும் இலார் " என்பார் பாரதி.. வாழ்வில் துன்பம், கஷ்டம் வரும்போது இது ஏன் வந்தது என சிந்திக்க தெரியாததால்தான் அப்படியே வாழ்கிறோம்.

இதனால் எதிர்காலம் குறித்த அச்சம் நிச்சயம் வரும்.

இதற்கு எந்த கடவுளும் காரணமல்ல..ஜாதகமும் காரணம் அல்ல.

பெரும்பாலும் நாமும், பெற்றோர் வழியிலான வினைப்பதிவு தொடருமே காரணம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் வினைப்பதிவுடன் கூடிய நமது வாழ்க்கை, ஒரு சேமிப்பு வங்கி கணக்குக்கு அப்படியே ஒப்பிடலாம்.

பணம் போட்டால் பதிவு, எடுத்தால் பதிவு, போட்ட பணத்திற்கு வட்டி வந்தால் வரவுப்பதிவு, குறைந்த பட்ச இருப்பு இல்லையென்றால் அபராதக் கட்டணம் பற்று பதிவு.

கற்பனை செய்யுங்கள். சில இலட்சங்கள் இருப்பிலிருந்தால் பணம் எடுத்துக் கொண்டே இருந்தால் கொஞ்சநாள் கழித்து இருப்பு குறைந்து அபராதம் வரும், மாறக குறைந்த பட்ச இருப்புதான் என்றால் ஒரு முறை பணம் எடுத்த உடனே அபராதப்பதிவுதான். இதுதான் வினைப் பதிவு, செயல்விளைவுத்தத்துவம் எல்லாம் :))

ஆக வங்கிக் கணக்கில் என்ன பதிவு செய்ய வேண்டும் என்பது நம் கையில் உள்ளது, நமக்கு வேண்டியது வட்டி வரவா அல்லது அபராதமா என நாம் தீர்மானிப்போம். இதுதான் முயற்சி..

எதிர்காலம்(வினைப்பதிவுகளின் இருப்பு) இயற்கையின் கையில் உள்ளது. அது எந்த அதிசயத்தையும் எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் நிகழத்தலாம். எந்த அற்புதத்தையும் நம் வாழ்வில் உருவாக்கும்.

அதேசமயம் எதிர்காலம் என்பது நமது அறிவு, திறமை, நம்பிக்கை, முயற்சி, இயற்கையின் ஒத்துழைப்பு போன்ற பலவித அம்சங்களால் தீர்மானிக்கப்படும். அற்புதமாக மாறும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

எதிர்காலம் குறித்து அச்சம் கொள்வதும், அவநம்பிக்கை கொள்வதும் மனதுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் அம்சமாகும்.

நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் எண்ண்ங்களை எண்ணுவோம், செயல்களைச் செய்வோம், நல்ல விளைவுகளை அனுபவிப்போம். இதற்கு பெயர் நம்பிக்கை அல்ல. என்னைப் பொறுத்த வரை இதுவே வாழ்க்கை கணிதம், இதுவே வாழ்க்கை அறிவியல்.

வாழும் நுட்பத்தை அறிந்து கொண்டு உங்கள் விருப்பம்போல் அமைத்துக் கொள்ளுங்கள். அச்சம் விலகும், மனதின்ஆற்றல் பெருகும். உற்சாகமாக இருக்கலாம்.