"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, January 29, 2013

ஜெயதேவ் தனக்குத்தானே வச்சுக்கிட்ட ஆப்பு

நண்பர் ஜெயதேவ் இடுகையை அவரது அறிவியல் சார்ந்த இடுகைகளுக்காக படிப்பேன்., நேற்றைய இடுகையில் சில அடிப்படைகள் தவறு என நினைத்ததால் என் ஆட்சேபணையை விரிவாக பொங்கலாக வைக்கிறேன் :)

 இனி சிகப்பு எழுத்தில் இருப்பவை ஜெயதேவ் இடுகையில் வாசித்தது. ஆட்சேபணையான பகுதிகளை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். எனது கருத்துகள் கருப்பு எழுத்தில் :)

//தனிப்பட்ட முறையில் நாமும் ஒரு ஆன்மீகப் பாதையில் செல்வதால் நாம் செல்லும் வழி தான் உயர்ந்தது மற்றவர்கள் எல்லோரும் போலி என்று நாம் திரித்து கூற முயல்வதாக சில அன்பர்கள் நினைக்கலாம், ஆகையால் ஆத்திக அன்பர்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றுகள் மூலமாகவே நாம் போலிகளைத் தோலுரித்துக் காட்ட இருக்கிறோம். //
ஆத்தீக அன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சான்றுகள்னு.. அனைவருக்கும் நான் தான் ரெப்சரண்டேட்டிவ்னு சொல்றத பார்த்தா ஏதாவது தடை போட்டுருவாரோன்னு பயந்துகிட்டேதான் எழுதறேன்:)

//தன்னையுணர்ந்த ஒரு குருவிடம் சரணடைந்து அவரை வழிகாட்டியாக ஏற்பது தான் ஆன்மீகத்தின் அறிச்சுவடியாகும். நாம் இந்த முடிவை பகவத் கீதையின் படி எட்டியுள்ளோம். //இந்த கண்ணாடியப் போட்டுட்டு பார்த்தா அப்படித்தானே தெரியும். நீங்க போலிகளா சொன்ன அத்தனை பேரும் பகவத் கீதையின் வழியே வாழ்றவங்களா? கீதய சொல்றதுக்கும், கீதையின்படி வாழ்றதுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு.

//அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி சரணடைந்து நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும். இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும். //

இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி இருக்கீங்க ..இங்க எங்க நீங்க பலதடவ சொல்ற குரு பரம்பரை வருது.?

//யார் வேண்டுமானாலும் கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளலாம், ஆதாரம் என்ன? //இறைவன் எப்போது, எங்கே தோன்றுவான், அவன் என்னென்ன பணிகளைச் செய்வான் என்பதை ஸ்ரீமத் பாகவதம் முன்னரே கூறுகிறது. அதன்படி, பூமியில் 5000 வருடங்களுக்கு முன்னர் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் தான் வந்த வேலை முடிந்ததும் தனது லோகமான கோலோக விருந்தாவனத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடைய அடுத்த அவதாரம் புத்தர். அவருக்குப் பின்னர் கல்கி கலியுகத்தின் இறுதியில் தோன்றுவார். கலியுகம் 4,32,000 வருடங்கள், அதில் 5000 வருடங்கள் முடிந்துள்ளன, இன்னமும் மீதமுள்ள 4,27,000 வருடங்கள் முடிந்த பின்னரே கல்கி தோன்றுவார். //

இந்த கணக்கெல்லாம் நான் எப்பவோ படிச்சதுதான். கடந்து போய்விடுவேன். இதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? (நீங்க கேட்ட கேள்விதான்: ) கிருஷ்ணர் என்னிக்கு பூமியில் பிறந்தாரோ அப்பவே மனுசந்தான் :) அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் கடவுளா அவரை கொண்டாட வச்சுது.

//3. கடவுளுக்கு வடிவம் கிடையாது, பிரம்மம் என்ற ஒன்று இருக்கு, அதற்க்கு எந்தப் பண்பும் கிடையாது, நாம் முக்தியடைந்தால் அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, பிரம்மமும் நாமும் ஒன்றோடு ஒன்றாக ஆகிவிடுவோம், என்பவர்கள் போலிகள்:// நானோ, நீயோ இங்கே கூடியுள்ள அரசர்களோ யாரும் இல்லாமல் இருந்த ஒரு காலம் இதுவரை இல்லை, எதிர்காலத்திலும் ஒருபோதும் நாம் இல்லாமல் போகப் போவதுமில்லை.//ஆங்கிலத்தில் I [நான்-I st Person], You [நீ-அர்ஜுனன் IInd Person], they [அவர்கள்-அரசர்கள் Third Person], என்று மூன்று நிலைகளிலும் கடந்த காலத்திலும் இனி வரும் காலத்திலும் நாம் இருப்போம், ஒருபோதும் இல்லாமல் போக மாட்டோம் என்று பகவான் கூறுகிறார்.//

இதப்படிச்ச உடன் கொஞ்சம் கூட புரியாம நீங்க எழுதுனதான் அடுத்த வரிகள் \\இதை படித்த பின்னர் கூட எந்த முட்டாளாவது கடவுளுடன் ஐக்கியமாய் போவோம் என்று போதிப்பானா? அவ்வாறு போதிப்பவன் போலி.\\ 
கட்டுரையின் உச்சபட்ச தடுமாற்றம் இதுதான் ஜெயதேவ்..:)

பிரம்மம் தனி, நான் தனி, அதனோடு முக்தி அடைந்து ஐக்கியமாகி விடுவோம்னு சொன்னது தவறுன்னா என்ன அர்த்தம்னா.. பிரம்மமும் நீயும் வேறவேறன்னு சொல்லாத எல்லாமே ஒன்னுதான்.. அதுதான் அப்பவும் இருந்துது, இப்பவும் இருக்குது. இனியும் இருக்கும் அத்தனையையும் ஒன்றாகப்பார்க்கிற விசயத்தை புரிஞ்சிக்கிறத விட்டுட்டு, புரிஞ்சுக்க முடியாம திணறகிற அவங்கள போலின்னு சொல்றதும், முட்டள்னு சொல்றதும் எப்படி சரியாகும்?.. இது வக்கிரம்தான் :)


4. போகும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருப்பவன் போலி: பலபேருக்கும் மருத்துவரே கடவுளாகத் தெரிகையில் வைத்தியம் பார்ப்பவன் குரு அல்ல என்ற முடிவு சிரிப்புதான் வருகிறது. தேவையானவர்களுக்குத் தேவையானதைத் தருபவர்தான் உண்மையான குரு. ஒருவன் ஞானத்தெளிவடைய தடையாய் இருக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை உடைத்தெறியும் ஆற்றல் குருவுக்கு இருக்கும். உடல்நலத்தைத் எல்லோருக்கும் வாரிவழங்கும் மந்திரவாதி அல்ல அவர். ஆன்மீகப்பாதையில் தீவிரமாய் பயணிக்கும் ஒருவனது உடல்நிலை பாதிப்பை அதன் வேரை  அடையாளம் கண்டு ஒரு கையசைப்பில் அல்லது ஒரு வார்த்தையில் பக்தனது மனதில் அடிஆழம் வரை ஊடுருவி திருப்பத்தை உண்டு பண்ணும் நிலையை நீங்கள் சாதரண வைத்திய முறையாக பார்ப்பது வாசிப்பனுபவம் மட்டுமே உங்களுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. (இப்படிப்பட்ட குரு இங்கொன்றும் அங்கொன்றுமாக தேவைக்கேற்ப தோன்றுவார்கள். இதில் பரம்பரைக்கெல்லாம் வேலை கிடையாது )

//, அங்கே போகிறவர்களுக்கு கையை தூக்கு, காலைத் தூக்கு, நெற்றியில் விரலால் அமுக்கு என்று வைத்தியம் பார்ப்பவராக இருக்கக் கூடாது. வைத்தியம் பார்ப்பது தவறல்ல, வைத்தியத்தைப் பார்க்க நிறைய மருத்துவ மனைகள் இருக்கின்றன. ஆன்மீகவாதி ஆன்மாவைக் காப்பாற்றுபவராக இருக்க வேண்டும், அழிந்து போகும் உடலை அல்ல.//

ஆன்மாவைக் காப்பாத்தினா மனுசனுக்கு என்ன பிரயோசனம்னு தெரியல..உடம்புங்கிறது என்ன? உயிர்னா என்ன ? மனசுன்னா என்ன? இதெல்லாம் தாண்டி ஆன்மான்னா என்ன இதுகளுக்கெல்லாம் இருக்கிற இணைப்பு என்ன? . உடம்ப நோய் இல்லாம காப்பத்தறதுக்கு சொல்ற எதுவுமே ஆன்மீகத்தான். அது ஆன்மாவுக்கு நாம செய்ற உபகாரம். அதச் சொல்லித்தர்றவன் குருதான். ஆன்மா அப்படின்னு ஒன்னு இருந்தா அதுஎங்க இருக்கும் உடம்பில் உயிர் ஓடிட்டு இருக்கற வரைக்கும் தானே..இதுக்கு மருத்துவ அடிப்படையப் பத்தி பேசணும். வேணாம் விட்டர்றேன் :)

5. மேஜிக் வித்தைகளைச் செய்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல: ஆனா இன்னிக்கு தமிழ்நாட்டுல சென்னைக்கு கிருஷ்ணாநீர் வர்றது இந்த மனுசனாலதான்யா சாத்தியமாச்சு.. இந்த ஒன்னுக்காக சாய்பாபாவ தாராளமா கடவுள்னு சொல்லலாமே.....குருன்னும் சொல்லலாமே

//திருவண்ணாமலை 'கு'மணன் [குமனாஷ்ரமம் புகழ்..]- [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை. செத்த பின்னர் ஆஷ்ரம சொத்துக்கள் தம்பி மகனுக்கே போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிய பற்றற்றவர். ] \\
ஏன் தன்னோட பரம்பரைக்கு போகனும்னு செஞ்சதா வச்சுக்குங்க.. பொருளை எப்படி கையாளனுமோ அப்படித்தான் கையாளனும். நான் யார்னு யோசின்னு ஞானப்பாதைக்கான வாசலை சமீபகாலத்துல எளிமையாச் சுட்டிக் காட்டியவர்தானே ரமணர். இவரையா போலிங்கறீங்க :)

வடலூர் காரர் [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு பரம்பரை இல்லை ]

இவருக்கு என்ன குறைச்சல் கிருஷ்ணர கும்பிட்டு இருக்கனுமோ.. உருவ வழிபாட்டின் அடிப்படையை மக்கள் மறந்து சடங்காக மாற்றியபோது ஜோதி வழிபாட்டின் மூலம் அதை உலகுக்கு உணர்த்தியவர். உயிர்க் கொலையை தவிர்க்க வலியுறுத்தின இவரு போலியா... :)

செக்ஸ் பண்ணிகிட்டே கடவுள்கிட்ட போகச் சொன்ன சீஷோ [ஈனம் மானம் எதுவுமே இல்லாத மோசடிப் பேர்வழி ]

பேரச் சொல்லி எழுதக்கூட தைரியமில்லாத நீங்க ஈனத்தைப் பத்தியும், மானத்தைப் பத்தியும் பேசறது எனக்கே வெட்கமா இருக்கு:).. செக்ஸ்னா என்னென்னு தெரியனும் வெறுமனே உடல் உறவு மட்டுமே செக்ஸ்னு நினைக்கிற பொதுமனப்பான்மையும், கடவுள்னா விழிப்புணர்வுதான்னு புரிஞ்சு அதை அனுபவிக்காத தன்மை., இதையெல்லாம் மாற்ற பாடுபட்டவர் ஓசோ. இதெல்லாம் சும்மா நாலு வார்த்தைல எழுதற விசயமல்ல. சும்மா அடிச்சு விடாதீங்க ஜெயதேவ்..

//அமெரிக்காவில் ஒரு மீட்டிங்கில் பேசி அதை வச்சே காலத்தை ஒட்டிய தலப்பாக் கட்டு, அவருடைய ஹம்சா குரு [முக்தியடைந்தால் பிரம்மத்தோடு ஐக்கியமாகி கானாமல் போய்விடுவோம் என்று போதித்தவர், குரு உண்டு, ஆனால் அந்த குருவுக்கு வேறு யாரும் குரு இல்லை, அதாவது குரு பரம்பரை இல்லை ] //
சகோதர சகோதரிகளே என்ற ஒற்றை வார்த்தைல இந்தியாவின், தமிழகத்தின் பாரம்பரியத்த வெளி உலகிற்கு புரியவைத்த நல்ல மனுசன் இவரு..ஒற்றை வார்த்தையில் உலகை கட்டிப்போட்டவன் தெரிஞ்சவர்தான் குரு. இவ்ரைப் போலி என்றால் ...:)

//பாழுங் கலை "Art of Killing" தாடிக் காரன் [கையைத் தூக்கு காலைத் தூக்கு, மூக்கை அமுக்கு, மூச்சை இழு, விடு அதுதான் ஆன்மிகம் என்றவர்,//
வாழுங்கலை ரவிசங்கர் மூச்சை அடிப்படையா வச்சு தன்னோட பயிற்சிய வடிவமைச்சிருக்காரு. மூச்சுக்கும் உடம்புக்கும் மனசுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள சம்பந்தம் என்னங்கிறது அனுபவிச்சவங்களுத்தான் தெரியும் ஜெயதேவ் இந்த உண்மை தெரியாத நீங்க இவர போலிங்கிறதுல ஆச்சரியமில்லை உடம்ப மருத்துவமனைக்கு கொண்டு போய் சித்திரவதைப்படுத்தாம இருக்க மூச்சுதான் முக்கியம். அதுதான் சாதி மதம் நாடுன்னு எதுக்குள்ளும் சிக்காத பொது சமாச்சாரம் எனக்குத் தெரிஞ்சு மூச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்றது இவரு ஒருத்தருதான். இவரு சகசமா அரசியல் பிரச்சினைகளுக்கு கருத்து சொல்வாரு. அது தப்பா…

//எல்லோரும் கடவுள் என்னும் போலி, நச்சுப் பாம்பு தற்போது ரஞ்சிதானந்தாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இவரோட குரு அமேரிக்கா புண்ணிய பூமின்னு அங்கே போய் செத்து பின்னர் பிணம் 20 நாள் னாராம இருந்ததாக சான்றிதழ் பெற்றவர். பயோகிராபி எழுதியவர் ]உடல் நாறமா இருக்கிறதோட அருமை அத மதிக்கிறவங்களுத்தான் தெரியும். சான்றிதழ் வாங்கிட்டது சாதிச்சதுனாலதானே :)

இலங்கையில் இருந்து வந்து திருச்சி விராமலையில் மடம் போட்டு பெண்களைக் கற்பழித்த நடிகர் செந்திலின் ஜெராக்ஸ் [பயங்கரமான கிரிமினல், பாலியல் ரீதியாக தண்டனை பெற்றவர் ]
இந்த ஆளுவேணா பாலியல் ரீதியான சில பயிற்சிகளை செய்து விந்து நீண்டநேரம் வெளிப்படாமல் செய்தார். இதுவும் ஆன்மீகத்தின் ஒரு அங்கம் தான், என்ன சரியான வழில பயன்படுத்தாம பொம்பளைய மடக்கிறதுல பயன்படுத்தினதால தப்பான மனுசனாயிட்டான். இந்தஆள் போலிதான்:)

ஷங்கர் ராமனைப் போட்டுத் தள்ளியதில் குற்றம் சாட்டப் பட்டுள்ள காஞ்சிபுரத்தான் [பாலியல் ரீதியாக எழுத்தாளரால் குற்றம் சாட்டப் பட்டவர் ] இந்த ஆள் நீங்க வலியுறுத்தறா மாதிரி குருபரம்பரையைச் சேர்ந்தவர்தான், எனக்குப்பிடிச்ச குருபரம்பரை இல்லைன்னு நீங்க சொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை. லட்சணம் என்னென்னு நீங்களே பரர்த்துகுங்க., மனிசனா பொறந்தா செக்ஸ் இல்லாம இருக்கிறது எனக்குத் தெரிந்தவரை சாத்தியமில்லை. இவரும் அதுல சிக்கிட்டாரு..அதுக்காக போலிங்கிறது ரொம்ப ஓவரு :) ....மனுசன்னு சொல்லுங்கஒத்துக்கிறேன்.

//கமலஹாசனின் வசூல்ராஜா புகழ் கட்டிப் பிடி வைத்தியம் பண்ணும் கேரளாக் காரி//
ஒரு பொம்ப்ள எல்லோரையும் கட்டிப்பிடிகிறான்னா அதுல ஒரே செய்தி மட்டும்தான்., என் அன்பை வெளிப்படுத்துகிறேன்,. அவ்வளவுதான்.. அன்பு ஒன்னுக்குத்தான் உலகமே அடிமை… எங்கே 1000 ஆம்பிளைகளை நீங்க கட்டிப்பிடிச்சு காமிங்க பார்ப்போம்.... அதனால்தான் அங்கே பணம் குவியுது, அன்பால நெகிழ்ந்தவர்கள் தருகிற நன்கொடைகளினால்...இந்தம்மாவை போலின்னா அன்பு பத்திக்கூட புரிதல் உங்களுக்கு இல்லையோன்னு சந்தேகப்படறேன் .:)
//நம்மை கதவைத் திறந்து ஆனந்தத்தை வரவழைக்கச் சொல்லிவிட்டு, அவன் கதவைப பூட்டிக் கொண்டு ரஞ்சிதானந்தம் பார்த்தவன்[குருவோ, குரு பரம்பரையோ இல்லாதவர், எல்லோரும் கடவுள் என்பவர். இவரது பக்தர்கள் இவரை கடவுள் என்று சொன்னாலும் நடவடிக்கை எடுக்காதவர்]

செக்ஸ் நாட்டம் அதிகமாகாத வரைக்கும் மத்ததுல கவனம் இருக்கும். அதிகமாச்சு, வாய்ப்பும் அமைஞ்சது., பயன்படுத்திக்கிட்டாரு மனுசன். ரஞ்சிதா சம்மதத்தோடதானே எல்லாமே நடந்துச்சு.. பேச்சு ஒன்னு, செயல் ஒன்னுங்கிற குறைதான் இவருகிட்ட தப்பு ..இவரு உண்மையா இருந்து போலியா மாறிட்டாரு

//செவ்வாடைத் தொண்டர்களை கொண்ட கீழ்மருவத்தூர்க்காரன் [முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி, ஆயிரம் கோடிகளில் சொத்து சேர்த்தவர், அதற்க்கு தனது பெண்டாட்டி பிள்ளை குட்டிகளை காவலுக்கு போட்டிருப்பவர் ]

இங்க பக்கத்து ஊருதான், இந்த ஆள் செஞ்சது ஒன்னெ ஒன்னுதான் பெண்கள் கருவறைக்குள் சென்று வழிபாடு பூசைகள் செய்யலாம். சமூகத்தில் ஆன்மீகத்தில் பக்தி வழிபாட்டில் கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காதன் அம்சத்தை ஆராயாமல்.மேலோட்டமாக நடத்திய புரட்சிதான் கிளிக் ஆகி இன்னிக்கு இந்த ரேஞ்ச்..இதில எங்க இவரு போலி.. வெளிப்படையாத்தான் இருக்காரு மனுசன்..பின்னால போற மக்கள்தான் பாவம்:)

//நாலு லட்சம் வருஷத்துக்கு ஆப்புறம் வரவேண்டிய கல்கி இப்பவே ஆணும் பெண்ணுமா வந்துட்டோம் என்று சொல்லித் திரியும் புருஷன் பெண்டாட்டி பொறம்போக்குகள் .....[இவர்கள் கல்கி அல்ல, தாங்கள் அவரதாரம் என்கிறார்கள். கல்கி ஒருத்தார் மட்டுமே அதுவும் ஆண் எப்படி புருஷன், பெண்டாட்டி இருவரும் கல்கியாக இருக்க முடியும்? அதுவும் 4,27,000 வருடங்கள் கழிந்த பின்னரே வர முடியும், இதுவும் ஒரு கற்பனைதான். இதய உல்டா பண்ணித்தானே இந்தகுருப் காலம் தள்ளுது. இந்த போலிக்கு மூலகாரணமே கல்கி மேட்டர்தான்.

முரளீதரன் [ரொம்ப மோசமானவர் இல்லை, ஆனால் தலப்பாக்கட்டு போன்றவர்களை மேற்கோள் காட்டுவதால் இவருக்கு விஷயம் தெரியவில்லை] இவர யாரும் கடவுள்னும் சொல்லலை, குருன்னும் சொல்லலை. அப்புறம் ஏன் கோபம். ஆமா இவரு மேல என்ன பாசம் :)

ககி சவம் [அனுபவத்தை வைத்து புருடா விட்டுக் கொண்டு திரிபவர், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர்]
 

இவர் தன்னம்பிக்கை சார்ந்த விசயங்களை சொல்லிக்கொண்டு இருக்கிறவர். சில விசயங்களை வித்தியாசமா சொல்லி, பார்த்து, உண்மை தெரியும்னு சொல்லி தொழில் முறை பேச்சாளரா இருக்கிறாரு, இவர ஏன் போலின்னு சொல்றீங்க :) பாவம் விட்டுருங்க :))

//வேலூர் தங்கக் கோவில் காரர் [தான்தோன்றி சாமியார், குரு , குரு பரம்பரை எதுவும் இல்லாதவர், தத்துவ ரீதியாக போலி, போலியோ போலி......] //

இவரு திடீர் சாமி.. எவரோட பணமோ இவருகிட்ட விளையாடுது.. சுற்றுலாத்தளம் மாதிரி ஒரு கோவில் டில்லில அக்சார்தம் மாதிரி தென்னகத்தில் ஒரு கோவில் கட்டிய சாதனைக்கு பினாமி சொந்தக்காரர்தான்,, இதுல எங்க போலி வந்துது. டம்மின்னு சொல்லுங்க ஒத்துக்கலாம். போலிங்கிறதுக்கு அர்த்தமே வேற.. மேலும் கோவிலோட பிரபலம் இந்த சாமிக்கு இல்லவே இல்லை.

ஈசா கிழவர் [மொக்கைச் சாமியார், எந்த அடிப்படையும் இல்லாதவர், வேணுமின்னா மரம் நடட்டும், வேறு எதற்கும் பிரயோசனமில்லாதவர்] இந்த ஆள் மொக்கைதான்.,ஓசோவையும் நடப்பு ஆன்மிகத்தையும் கலந்து அடிக்கிறாரு. வாஸ்தவம்தான். என்ன பண்றது ருசியான பிரியாணியா இருக்கிறதுனால கூட்டம் அம்முது:) அதுக்காக போலிங்க வேண்டியதில்லை. விசயம் கம்மின்னு சொன்னா ஒத்துக்கிறேன் :) ஒரு தடவ ஈசா போயிப் பாருங்க..இந்த மொக்கை எம்புட்டு செலவு செஞ்சிருக்கின்னு...

கேரளாவின் ஐயோ..... அப்பா.......... [சாஸ்திரத்தில் சொல்லப் படாத வழிபாட்டு முறை]. எத்தனையோ அக்கிரமங்களை நம்ம மனுச சாமிகள் பண்ணினாலும் ஒரு முறை அந்த பெருவழில கூட்டமில்லாத மழை நாட்கள்ல போய்ட்டு வந்து அனுபவத்து சொல்லுங்க.. போறதுக்கு ஒரு காரணம் அய்யப்பன். அவர ஏன் போலிங்கிறீங்க.. அவரு பேரச் சொல்லி திரியற நம்மாளுங்களைச் சொல்லுங்க.. கொஞ்சம் நிசம் இருக்கும்.

முடிவா குரு பரம்பரை அவசியம் வேணும்கிற ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை மட்டுமே. ஆன்மீகம் குறித்தான விரிவான பார்வை இன்றி வெறுமனே விமர்சிக்கிற தன்மையை ஆட்சேபித்து எதிர்ப்பை பதிவு செய்கிறேன். இந்த விளக்கம் இணைய நண்பர்களுக்கு நேர்எதிர்கருத்தையும் படிக்கிற வாய்ப்பைத் தரும் என்பதற்காகவே பதிகிறேன்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

10 comments:

  1. ஏதாவது சொல்லுங்க, என்னைச் செதுக்க உதவும்//
    போய் விவசாயத்தப் பார்த்து புள்ள குட்டிங்கள படிக்க வைங்க சார் :)))

    ReplyDelete
  2. @சிவா.
    இந்த மாதிரி கூ____ க்கு எல்லாம் பதில் சொல்லி ஒரு பதிவு போட்டுக்கிட்டு.போங்க சிவா போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க.
    அவர் குருக்களும் ஏதாவது வீடியோல மாட்டுவாங்க அப்ப கிழிப்போம்.

    ReplyDelete
  3. சிவா,

    //ஜெயதேவ் வாதம் கிணற்றுத் தவளையின் பார்வை மட்டுமே.//

    பாகவதரைப்பற்றி சரியா சொல்லி இருக்கீங்க, கிணற்று தவளை மட்டுமில்லை, போலி ஆன்மீக ,அறிவியல் பதிவர், அவருக்கு அறிவியலும் தெரியாது,ஆன்மீகமும் தெரியாதுனு பல பதிவுகளில் சுட்டிக்காட்டி விட்டேன்.

    நாம் சரியான கேள்விக்கேட்டு விட்டால் ,அதனை விட்டு விலகி திசை திருப்புவார்.

    அத்வைத தத்துவம் ஆன்மா, பரமாத்மா இரன்டும் ஒன்றாகும் என்பதை அது என்னனே தெரியாம எழுதி , இது போலி சாமியார்கள் சொல்லும் கருத்து என்பார்.

    ////அப்படியானால், நமக்கு குருவாக இருப்பவரும் இதே மாதிரி சரணடைந்து நடப்பவராக இருந்திருக்க வேண்டும், அதாவது அவரும் ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து கற்றவராக இருக்க வேண்டும். இப்படியே குரு-சீடர் என்று சங்கிலியாக பின்னோக்கிச் சென்றால் அது பகவத் கீதையை முதலில் போதித்த ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று முடியும். //

    வைணவர்கள் தான் கீதையை பின்ப்பற்றலாம், மற்றப்பிரிவினர் ஏன் கீதையில் குரு எப்படி இருக்கணும்னு சொல்லும் முறையை பின்ப்பற்றனும்? கிருஸ்ணாவை இறுதியில் சென்றடையனும்?

    வைணவ பற்றினை மட்டுமே கொண்டுள்ள இவர் மற்ற சமய வழிகளை எல்லாம் போலினு சொல்வதன் மூலம் , தனது வைணவ வெறியை தான் காட்டுகிறார்.

    உண்மையான ஆன்மீக படிப்பறிவு கூட இல்லாதவர், இறைவனுக்கு பஞ்ச பூத வடிவங்கள் கொடுத்து , ஆகாச வடிவம் என வெற்றிடம் கூட கொடுக்கிறார்கள்,எனவே இறைவன் வடிவம் இல்லாத நிலையிலும் உண்டு என்ற ஆன்மீக அறிவு கூட இல்லாத அறிவிலி :-))

    ஹி...ஹி நாத்திக கருத்தாக்கம் கொண்ட நான் படித்த அளவுக்கு கூட ஆன்மீகத்தினை படித்து இருக்க மாட்டார் போல பாகவதர் :-))

    மனிதனுக்கே ஸ்தூல சரீரம், சூக்கும சரீரம் உண்டு சூக்கும உடலே ஆன்மானு எல்லாம் படித்துள்ளேன். அப்படி இருக்கும் போது இறைவன் வடிவமில்லாமல் இருக்க முடியாதா?

    அதைத்தான் வள்ளலார் சொன்னார், அவரும் போலியாம்.

    உருவமில்லா இறைவழிப்பாடு பல மதத்திலும் உண்டு, சீக்கிய மதத்தில் உருவ வழிபாடே இல்லை.

    புத்த,சமண, கிருத்துவ மதத்தில் எல்லாம் கடவுள் என சொல்லப்பட்ட உருவமே இல்லை,ஆனால் பின்னாளில் சொன்னவர்களையே கடவுளாக்கி சிலை வச்சுட்டாங்க :-))

    ReplyDelete
  4. \\இங்கே ஒருத்தருக்கு குரு இருக்கணும்னுதானே சொல்லி இருக்கீங்க ..இங்க எங்க நீங்க பலதடவ சொல்ற குரு பரம்பரை வருது.?\\ சிவா உங்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்க அறியாமையை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றும் புரியவில்லை. சென்னைக்கும் பெங்களூருக்கும் தொலைவு 357 கி.மீ என்ற தகவல் இருந்தால், பெங்களூருக்கும் சென்னைக்கும் தொலைவு என்ன என்று கொடுக்க வில்லையே என்று கேட்பீர்கள் போலிருக்கிறது!! சரி இதில் கூட சொல்லவில்லை என்கிறீர்களே, கீதையில்

    evam parampara-praptam
    imam rajarsayo viduh
    sa kaleneha mahata
    yogo nastah parantapa

    [B.G. 4.2]

    This supreme science was thus received through the chain of disciplic succession, and the saintly kings understood it in that way. But in course of time the succession was broken, and therefore the science as it is appears to be lost.

    இதன் பொருள் என்னவென்று தங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

    மற்றபடி பாதிக்கு பாதி போலி என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி. மிச்ச பேரை அவ்வாறு ஒப்புக் கொள்ள அவர்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு தடுக்கலாம், ஆனால், உண்மையைப் பேசும்போது செண்டிமேடுக்கு நான் இடம் கொடுப்பதில்லை. சாரி.

    பிள்ளை குட்டிகளைப் படிக்க வை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறும் புத்திசாலிகள் இங்கு பின்னூட்டமிட்டு நேரத்தை வீணடிக்காமல் அவரவர் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைப்பதில் கவனம் செலுத்தலாம். பிறருக்கு உபதேசிக்கும் முன்னர் முதலில் தான் பின்பற்ற வேண்டும். ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை என்னும் போலிகளைப் போல இதுவும் ஒரு போலித்தனம் தான்.

    தலிகீழா தொங்குறவர், தலை மட்டும் வளர்ந்தவர், பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கச் சொல்லும் அறிவாளிகள் எல்லாம் பின்னூட்டம் போட்டு நேரத்தை வீணடிக்காமல் முதலில் போயி அவரவர் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கட்டும்.

    ReplyDelete
  5. @ஜெயதேவ்..பெங்களூருக்கும் சென்னைக்கும் தொலைவு என்ன என்று கொடுக்க வில்லையே .. அப்படி தொலைவு என்னென்னு சொல்றவங்க அத்தனை பேரும் முட்டாள், போலின்னா என்ன செய்றது ஜெயதேவ்..

    பின்னூட்டமிட்டவ்ர்களை நீங்கள் எதிர்க்க வேண்டிய இடம் இது இல்லை. உங்களை கண்டாலே காத தூரம் ஏன் ஓடுகிறார்கள், மதிப்பதில்லை என்பதும் இப்போது புரிகிறது

    என் தளத்தில் பின்னூட்டமிட்டவ்ர்களின் அக்கறையை மனதார உணர்கிறேன். எனக்கு எப்பவும் கருத்துகளோடுதான் மோதல். மனிதர்களோடு மோதல் இல்லை. எனவே அவர்களின் கருத்தை வரவேற்கிறேன் :)

    சக மனிதனோடு மோதல் போக்கு கொண்டவன் ஆன்மீகவாதி என்று தன்னைத்தானே சொல்லத் தகுதியற்றவன். எனக்கும் உங்களுக்கும் சேர்த்தே இதைச் சொல்கிறேன்.)

    ReplyDelete
  6. \\என் தளத்தில் பின்னூட்டமிட்டவ்ர்களின் அக்கறையை மனதார உணர்கிறேன்.\\

    அதாவது

    \\இந்த மாதிரி கூ____ க்கு எல்லாம் பதில் சொல்லி \\

    மாதிரி எழுதுபவர்கள் எல்லாம்

    \\அக்கறையை மனதார உணர்கிறேன். \\

    என்கிறீர்கள்!!

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. பாகவதரே,

    உம்ம பருப்பு சரியா வேகலை போல இருக்கே :-))

    பகவத் கீதையில சொல்லி இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கீரே அதை எதுக்கு சைவ சமயத்தார் பின்ப்பற்றனும்னு கேட்டேன் பதிலே காணோம்?

    நீர் எப்படி சைவ அத்வைத கருத்தை போலினு சொல்ல முடியும்?

    நீர் எப்படி ஆன்மீகவாதின்னு சொல்லிக்கிறீர்?

    பதிவுலக ஆன்மீக போலிகளில் நீரும் ஒருவர்னு இப்போ எல்லாரும் கண்டுக்கிட்டாங்க,வழக்கம் போல பிராபல்யப்பதிவர்களுக்கு கால் கழுவி விட்டு உம்மையும் ஒரு பதிவராக காட்டிக்கொள்ளும் :-))

    அஹம் பிரம்மாஸ்மி, தத்வ மசி எல்லாம் போலினு சொல்லவோ பேசவோ ஒரு தகுதி வேண்டும்,அதெல்லாம் உமக்கு இல்லை, பேசாம புளியோதரை வாங்கி தின்னுட்டு போய் தூங்கும் :-))

    ReplyDelete
    Replies
    1. @வவ்வால்

      இங்க சிவா ஏகக் கடுப்பில இருக்காரு. Therefore உம்மிடம் இங்கே விவாதம் செய்ய விரும்பவில்லை. உமது கேள்விகளுக்கு பதிவுகள் வெளியாகும். வணக்கம்.

      Delete
    2. பாகவதரே,

      சிவா ஒன்னும் கடுப்பில் இல்லை, உண்மைய தானே சொல்லி இருக்கார். இந்து மறபில் பல தரப்பட்ட சித்தாங்களும் இருக்கு நீர் வைணவ பகவத்கீதையை மட்டுமே வச்சி மற்றதெல்லாம் போலினு வரையறை கொடுத்தால் எப்படி விடுவாங்க.

      அத்வைத கருத்தை உமது பதிவிலே சொல்லி கேள்வியும் நான் கேட்டாச்சு, நீர் அப்போவும் ராமனுஜர் சொன்னதை படிக்க சொல்லுறீர், அப்போ வைணவம் மட்டுமே இந்து மதமா?

      எனவே உமக்கு இந்து மத அறிவேயில்லை என்பது புலனாகிறது,ஆனால் யார் போலினு லிஸ்ட் போட கிளம்பிட்டீர் :-))

      நாத்திகர்களாகிய நாங்கள் கூட அனைத்து வகையும் படிக்கிறோம், ஆத்திகன்னு சொல்லிக்கிட்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டுறீர் :-))

      நுணலை தன் வாயால் கெடும் போல நீர் ஆன்மீகம் பேசி உமது அறிவின்மையை வெளிக்காட்டிக்கொண்டது தான் மிச்சம் :-))

      Delete
  8. யோவ்வ்வ்வவ்வ்வ்.
    சப்பளாக்கட்டை.நம்ம பீ சொல்லுற மாதிரி கிளுகிளுப்பா ஏதும் வீடியோ இருக்கா?

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)