"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, February 26, 2010

பதின்ம கால மனக் குறிப்புகள்.......தொடர்பதிவு

பதின்ம கால நினைவுகளை எழுத வேண்டும் என்று திரு.ராதாகிருஷ்ணன் அழைத்தமைக்கு நன்றி சொல்லி சட்டென நினைவிலேயே இருப்பதை எழுதுகிறேன்.

பள்ளித்தோழர்கள் குமார், பழனிச்சாமி, சுப்ரமணியன் நான் நான்கு பேரும் இணைபிரியா நண்பர்கள்
+1 படிக்கும்போது கணக்குபதிவியல், அட அதாங்க அக்கவுண்டன்சி குரூப் படித்தோம். பள்ளியில் கணக்கு பதிவியலுக்கு கட்டாய டியூசன் எடுக்க சொல்லி அந்த துறை ஆசிரியர் திரு.முனுசாமிராவ் கட்டாயப்படுத்தினார். நண்பன் குமார் வசதியானவன். ஆனால் நாங்க என்ன சொல்றோமோ அப்படி, அடுத்ததாக நான், என் வீட்டில் சொன்னால் சற்று சிரமப்பட்டேனும் படிக்க வைத்து விடுவார்கள்.ஆனால் நண்பர்கள் பழனிச்சாமி, சுப்ரமணியன் இருவருக்கும் அதற்கான வசதி இல்லை.

முனுசாமிராவ் ஆசிரியரிடம் விவரத்தை சொன்னபோது அதெல்லாம் தெரியாது. வகுப்பறையில் முழுமையா நடத்தமுடியாது. அதனால கட்டாயம் டியூசன் வந்துதான் ஆக வேண்டும். என்று சொல்லிவிட்டு வகுப்பறையில் கடனுக்கு பாடம் நடத்துவார். எப்படி நடத்தினால் குழப்பம் அடைவோமோ அப்படி நடத்துவார், தொடர்ச்சி இன்றி நடத்துவார் (நல்லா நடத்தினாலே நமக்கு குழப்பம்தான்.. அவ்வ்வ்வ்...)

ஆசிரியர் செய்வது சரியல்ல எனபது உறுதியாக தெரியும், மேலும் பாதிக்கப்படுவது ஏற்கனவே சுமாராக படிக்கக்கூடிய நண்பர்கள். ஆகவே எதிர்க்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். எனக்கு கொஞ்சம் (வகுப்பறை)கணக்கு நன்றாக வரும். ஆதலால் கணக்கு பதிவியியலில் கணக்குபதிவு முறைகளை சொல்லித் தரும்போதே அவர் சொல்லித்தருவதில் இடைவெளி வரும் இடங்களை அடையாளம் காண முடிந்தது.

இடையில் எழுந்து சந்தேகம் கேட்க ஆரம்பித்தேன். மறைக்கப்பட்ட விசயம் வெளியே வரும்வரை கேட்பேன். அதுமட்டுமல்ல அவர் முந்தைய நாள் மாலை டியூசனில் ஒரு பதிவு முறையை பாதி சொல்லிக்கொடுத்துவிட்டு அடுத்தநாள் வகுப்பறையில் மீதியைச் சொல்லிக்கொடுப்பார்.

எங்களுக்கோ ஒன்றும் புரியாது. முதல்ல இருந்து சொல்லிக் கொடுக்கச் சொல்வோம். அவரோ ”உங்களுக்கு வேண்டுமானால் வருகைபதிவு போட்டுவிடுகிறேன். தயவுசெய்து வகுப்பு முடியும் வரை வெளியே சென்று வாருங்கள்” என்பார்

”முடியாது எங்களுக்கு சொல்லிக்கொடுத்தே ஆகவேண்டும்” என பிடிவாதம் நான் ஒருவன் மட்டுமே பிடிவாதம் பிடிப்பேன். மற்ற மூன்று நண்பர்களும் எனக்கு கலைஞரைப்போல் ஆதரவு கொடுப்பார்கள். ஒரு வழியாக பலதடைகளைத்தாண்டி +2இறுதித்தேர்வு வந்தது

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வந்தது. மதிப்பெண்கள் பார்க்க நஞ்சப்பா பள்ளிக்கு செல்ல எதிரே முனுசாமிராவ் ஆசிரியர். என்னை பார்த்தவுடன் வருத்தம் தோய்ந்த தொனியில் ”நான் நம்ம பசங்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்ததெல்லாம் வேஸ்ட், நீ தாண்டா பர்ஸ்ட்” என்றார். கைகுலுக்கி முதுகில் தட்ட எனக்கும் வருத்தம்தான். ஏன் நான் இரண்டாமிடம் பெற்றிருக்ககூடாது?,

நான் அவ்வாறு நல்ல மதிப்பெண்கள் பெற்றதில் இன்னொரு ஆசிரியருக்கு பெரும்பங்கு உண்டு.

அது அடுத்த இடுகையில்...

14 comments:

  1. அழகிய நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. அந்த மற்றொரு ஆசிரியர் எனும் ஆவல் எழுகிறது. ம்ம்... இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா என எண்ணவைத்துவிட்டது முனுசாமிராவ் அவர்களின் டியூசன் மற்றும் பள்ளி செயல்பாடுகள். தொடருங்கள் நண்பரே.

    ReplyDelete
  2. சிவா!

    இந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே! கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு!

    ஆசிரியர் தொழில் இப்போதெல்லாம் வேறுவிதமாக ஆகிவிட்டது!

    @ ராதாகிருஷ்ணன்!

    /இப்படியெல்லாம் கூட ஆசிரியர்கள் இருப்பார்களா/

    இதைவிட மோசமாக நிறைய இருக்கிறார்கள். ஆசிரியர் தொழில், இன்றைக்குக் கற்பிப்பதாக இல்லை!அரசுக்கு ஒத்து ஊதுவது, ஆள்பிடிப்பது, வோட்டர் லிஸ்ட் சரிபார்ப்பது என்று வேறு எத்தனையோ திசைகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது!

    ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், தங்களை மட்டுமல்ல, மாணவர்களையும் சேர்த்துச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. அருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு

    ரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே!!

    ReplyDelete
  4. V.Radhakrishnan

    உங்களுக்குதான் மீண்டும் நன்றி, மனதில் இருந்தை வெளியே கொண்டுவந்ததற்கு..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கிருஷ்ணமூர்த்தி

    //ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தான் அந்தப் புனிதமான தொழிலுக்கு இன்னமும் மரியாதையையும், கௌரவத்தையும் தேடித் தந்து கொண்டிருக்கிறார்கள். //

    சரியாகச் சொன்னீர்கள்

    இதுபோன்ற ஒருவரைப்பற்றித்தான் அடுத்த இடுகையில் குறிப்பிடப்போகிறேன்..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    அருமையான கால நினைவலைகள் நல்லாருக்கிறது. வாத்தியார்ன்னா இப்படித்தானே, ஆனா சில பேர் விதிவிலக்கு

    ரொம்ப நல்ல பதிவு வாழ்த்துகள் நண்பரே!!//

    நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  7. \\கிருஷ்ணமூர்த்தி said...

    சிவா!

    இந்த சங்கிலிப் பதிவுகள் நம்மை விடாது போல இருக்கிறதே! கோவி கண்ணன் அழைப்பை ஏற்று இப்போது தான் ஒரு பதிவை எழுதிவிட்டுப் பார்த்தால், உங்களுடைய பதிவு!\\

    ஆமாம். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே:)) உணர்வுபூர்வமாக இருப்பதால் மறுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை, ஊக்கப்படுத்தலாம் இந்த தொடர்பதிவை..

    ReplyDelete
  8. நானும் அக்கௌண்டன்சி குரூப்தான் படித்தேன். ஆனால் எங்களுக்கு அமைந்த ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி தங்கமானவர். நல்லா சொல்லிக் கொடுத்தார். சிலர் நியாயம் தவறுகின்றனர்... என்ன செய்வது... உலகம் அப்படித்தான் இருக்குங்க.

    ReplyDelete
  9. இராகவன் நைஜிரியா said...

    மிகச் சில ஆசிரியர்களே அவ்வாறு இருக்கின்றனர், மிக நல்லவர்களும் அப்படியே...

    மீதி சராசரிதான்

    தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி

    வாழ்த்துகள்

    ReplyDelete
  10. \\அண்ணாமலையான் said...

    gud post\\

    நன்றி திருஅண்ணாமலையாரே..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. நண்பர்களுக்காகப் போராடிய திட மனதுக்கு வாழ்த்துக்கள். ஃபர்ஸ்ட், செகண்ட் குரூப்களைப் போல பிராக்டிகல் மார்க்குகளுக்காக ஆசிரியர்களைக் கண்டு பயப்படவும் தேவையில்லை இல்லையா?

    ReplyDelete
  12. அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் எழுதி இருக்கீங்க . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  13. நினைவுகள் அருமை...

    -
    DREAMER

    ReplyDelete
  14. Nice one....Congrats my dear friend...
    I have directed from this site

    http://www.jeyamohan.in/?p=6728

    Good writing..keep it up...

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)