"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, June 4, 2009

தன்னை உள்ளும் புறமும் திரும்பிப் பார்க்கும் சங்கிலித்தொடர்பதிவு

இந்த தொடர்பதிவு இணைய நண்பர்களிடம் வலைய வரும்போதே, நண்பர் கோவி கண்ணன் அவர்கள் மூலமாக தான் எனக்கு அழைப்பு வரும் என்பதில் மிகஉறுதியாய் இருந்தேன். (இது எதிர்பார்ப்பு அல்ல) நிச்சயமானதாய்..

அழைப்புக்கு நன்றி கோவியாரே

சரி, இது என் முறை, வாருங்கள்


1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பிளாக்-ன் பெயர் அறிவே தெய்வம், தெய்வம் குறித்து நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களோடு கருத்துபகிர்வு கொள்ளும்போது நான் இன்னும் அதில் ஆழ்ந்த தெளிவு பெற வேண்டியே இப்பெயர்.

கோவியார் தொடர்பதிவுக்கு அழைத்தபொழுது ’நிகழ்காலத்தில்...’ என்று பெயர் மாற்றம் செய்துவிட்டேன். காரணம் நம் மனம் ஒன்று இறந்தகாலத்தில் அழுந்திக்கொண்டு இருக்கும், அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருக்கும். இதன் விளைவு தேவையற்ற குணங்கள் மேலோங்கி, நடப்பை உணர்ந்து கொள்ளாமல் வாழ்க்கை துணையோடு,தொழில்துறை நண்பர்களோடு அவர்களைப் புரிந்து கொள்ளாமல் முரண்படுகிறோம். இதை தவிர்க்கவும் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டியும் ’நிகழ்காலத்தில்’ (இதில் சோதிடம், எண்கணிதம் ஏதுமில்லை - கோவியாரே)


என் பெயர் சிவசுப்பிரமணியன். கொங்குமண்டலம் ஆனதால் இஷ்ட தெய்வம் முருகனின் பெயர் என்பதாக என் தந்தை சொல்லி இருக்கிறார். வால்பையன் சாட்டிங்கின்போது அண்ணா என்று என்னை அழைத்ததால், இங்கே வயது குறிப்பிடுகிறேன் 41

2.கடைசியாக அழுதது எப்போது..?

நான்கு வருடம் முன்., என் மனைவி இரண்டாவது குழந்தையை சுகப் பிரசவமாக பெற்று எடுத்தபோது, அவள் பட்ட உடல் வேதனையைப் பார்த்து..(இயல்பான வேதனைதான்., நம்மால்,நமக்காக இப்படி கஷ்டப்படுகிறாளே என்றுதான்)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பிடிக்கும், தலையெழுத்தையும் பிடிக்கும்

4.பிடித்த மதிய உணவு..

கிடைத்த சைவ உணவு, நாக்குக்கு அப்படித்தான் உத்தரவு போட்டு வைத்துள்ளேன்.

5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

இல்லை. முதலில் சாதரணமாக பழகுவேன். பின் அலைவரிசை ஒத்து வந்தால்தான் நெருக்கமாவேன்.

6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவியில்தான்., குளிக்கும்போது கொஞ்சம் தண்ணீரை ருசிப்பதுண்டு. அது அருவியில்தான் இனிமையாக அனுபவிக்க முடியும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்..

பேசும் விதத்தை., மனதை., அது அவரைப் பற்றி கணிக்க உதவும். மனதளவில் நெருங்க உதவும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது: தெரியவில்லை

பிடிக்காதது: கொஞ்சம் சோம்பேறித்தனம்


9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..

பிடித்த : குடும்ப நிர்வாகத்திற்கான உடல் உழைப்பு,

பிடிக்காத: குழந்தைகளின் குறும்பு எல்லை மீறும்போது கண்டிப்பது


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் இல்லை.



11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?

பிரவுன் பேண்ட், லைட் வயலெட் சர்ட்


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க..

எதுவுமில்லை. கணினியிலோ, தனியாகவோ பாட்டு கேட்பதில்லை. பழைய திரைப்பாடல்கள் பிடிக்கும்.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம் அல்லது கருப்பு, அப்போதுதான் பிற்ர் எளிதாகபடிக்க உதவியாக இருக்க முடியும்.

14.பிடித்த மணம்..

எல்லாமுமே., எதையும் மூக்கு ஏற்றுக்கொண்டாக வேண்டும். (விளையாடி ஓயும் என் குழந்தையின் வியர்வை மணம்)



15.நீங்க/உங்களால் அழைக்கப்படும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்..

ஷண்முகப்ரியனின் 'படித்துறை' - ஆன்மீகம் குறித்த தெளிவான பார்வை இவரிடம் இருப்பதாக கருதுகிறேன். இவர் எழுத்தை படிக்கிறபோதே ஒரு நெருங்கிய உணர்வு ஏற்படுகிறது. இன்னும் நெருக்கமாகத்தான்.

சாஸ்திரம் பற்றிய திரட்டு - யோகம் பற்றி போதுமான அளவு அறிந்து வைத்துள்ளவர்.

அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.:)) (சும்மா)
இவரால் சமுதாயத்திற்கு நிறைய மாற்றங்கள் வரும் என உண்மையாக நினைப்பதால்.

நெஞ்சின் அலைகள்- தமிழில் பிரபஞ்ச அறிவியல் கோட்பாடுகளை கடுமையாக உழைத்து, அருமையாக கொடுத்துக் கொண்டு இருப்பவர். அதனாலேயே தனி இடம் இவருக்கு. (இந்த ஏரியாவ யாருமே தொடுவதில்லையே)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு..

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?

17.பிடித்த விளையாட்டு...

ஒரு காலில் நொண்டி அடிப்பது.., அறைக்குள்ளேயே ஏழு நிமிடம் தொடர்ந்தாற்போல் நொண்டியுடன் நடனம் ஆடிப் பாருங்களேன்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்...

நகைச்சுவைப் படங்கள்,

20.கடைசியாக பார்த்த படம்..

சூர்யாவின் காக்க.. காக்க..

21.பிடித்த பருவ காலம்...

இந்த உடலுக்கு வெயிற்காலம்

.22.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

பிரமிள் அவ்ர்களின் சாது அப்பாதுரையின் தியான தாரா

23.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்

மாற்றுவதே இல்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம்...பிடிக்காத சத்தம்...

பிடித்த சத்தம் : குழந்தைகளின் சிரிப்பு, பிடிக்காதது: யாரேனும் தவறுதலாக தடுக்கிவிழும்போது அதைப் பார்த்து சிரிப்பவர்களின் சிரிப்பு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு

திருப்பதி, காளஹஸ்தி

26.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?

தெரியாத எதையும் ஓரளவிற்கேனும் தெரிந்து கொள்ள முயற்சிப்பது.

+ஞாபக மறதி?!

27.உங்களால் எற்றுக் கொள்ளமுடியாத ஒரு விஷயம்..

மிகத்தெளிவான குறிப்புகள் கொடுத்தும், அதைப் பின்பற்றாத தொழில்துறை அன்பர்களின் செயல்கள்

28.உங்களுக்குள் இருக்கும் சாத்தான்..

இல்லை, அல்லது மனம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்..

மலை சார்ந்த இடங்கள்

30.எப்படி இருக்கணும்னு ஆசை..

மனம் என் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பது மட்டுமே

31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்...

வேறென்ன.. இணையத்தில் மேய்வதுதான்

32.வாழ்வு பற்றி ஒருவரி சொல்லுங்க..

கிடைத்தற்கரிய வரம்

பிற்சேர்க்கை

33. தற்சமயம் உங்களிடம் உள்ள உறுதியான நம்பிக்கை குறித்து

எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது,

நான் இயல்பாக ஒரு வாரம் முன்னதாகவே உணர்ந்தேன்/எண்ணினேன், அவர் மனதில் அது தூண்டுதலாய் வெளிப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.இப்படி நான் நம்புகிறேன்.

10 comments:

  1. திரு சிவசுப்ரமணியன்,

    உங்கள் அழைப்புக்கு நன்றி.

    ஆனால் இதில் (அனைத்து) அனேக கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. காரணம் நான் எனது தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதில்லை.

    உங்கள் அழைப்பால் மகிழ்கிறேன். முக்கியமாக..

    //அவ்வப்போது மட்டும் உருப்படியான பதிவு எழுதுவது என்ற கொள்கையை தெளிவாக தற்சமயம் வைத்திருப்பதுதான் காரணம்.:)) (சும்மா)//

    உங்கள் வெளிப்படையான கருத்துக்கு..

    அதனால் இந்த தொடர்பதிவு மேனியா பற்றி ஒரு பதிவு விரைவில்... :)

    ReplyDelete
  2. //நான்கு வருடம் முன்.,//

    கொடுத்த வெச்ச ஆளுங்க.... நாலு வருசமா அழவே இல்லையா....சபாசு... 4 தொடரட்டும்... வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. ஸ்வாமி ஓம்கார்
    //திரு சிவசுப்ரமணியன்,

    உங்கள் அழைப்புக்கு நன்றி.

    ஆனால் இதில் (அனைத்து) அனேக கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை..//

    நான் ஏற்கனவே உணர்ந்ததே, இருந்தாலும் தங்களின் நிலைப்பாட்டை அறியவே அழைத்தேன்.

    //உங்கள் வெளிப்படையான கருத்துக்கு..//

    இப்படி இருந்தால்தான் நட்பு..தொடர்வேன்

    முதல் வருகைக்கான மகிழ்ச்சியுடன்

    ReplyDelete
  4. //பழமைபேசி said...

    //நான்கு வருடம் முன்.,//

    கொடுத்த வெச்ச ஆளுங்க.... நாலு வருசமா அழவே இல்லையா....சபாசு... 4 தொடரட்டும்... வாழ்த்துகள்!//

    அழாமல் இருக்கத்தான் நிகழ்காலத்தில் மாறி இருக்கிறேன். மனதை பக்குவப்படுத்திக் கொள்ள
    முயன்று கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  5. அப்பாடா ஒரு வழியாக பேரையும் ஊரையும் சொல்லிட்டிங்க, உங்கக் கிட்ட கேட்காமல் பேரை தெரிஞ்சிக்க விருப்பப் பட்டேன். நன்றி !
    :)

    "நிகழ்காலக்" காரணம் அருமை. எனக்கு எப்போதும் ஒரே "காலம்" ! :)

    //எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது,

    நான் இயல்பாக ஒரு வாரம் முன்னதாகவே உணர்ந்தேன்/எண்ணினேன், அவர் மனதில் அது தூண்டுதலாய் வெளிப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது.இப்படி நான் நம்புகிறேன்.//

    ஒப்புக் கொள்கிறேன். எண்ணத்திற்கு அந்த திறன் உண்டு !

    மொத்தத்தில் நிறைவாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. //"நிகழ்காலக்" காரணம் அருமை. எனக்கு எப்போதும் ஒரே "காலம்" ! :)//

    உண்மையில் இருப்பது ஒரே(நிகழ்)”காலம்” மட்டும்தான்:)

    மற்றதெல்லாம் மனதின் ஜாலங்கள். மனம்தான் இறந்தகாலம், நிகழ்காலம் என்று வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  7. // எண்ண அலைகளுக்கு உள்ள ஆற்றல், அதனால் பேச்சில், எழுத்தில்,எண்ணத்தில் கவனம். உதாரணம் கோவி கண்ணன் என்னை தொடர்பதிவுக்கு அழைத்தது //

    மனம் போன போக்கிலே...செயல் போகுதே...

    //நான்கு வருடம் முன்.,//

    தெளிவான மனம் சார் உங்களுக்கு...

    //குழந்தைகளின் குறும்பு எல்லை மீறும்போது கண்டிப்பது //

    கண்டிக்கனும்ல சார். அப்ப தான் நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு குழந்தைகளுக்கு தெரிய்ம்.


    // இங்கே வயது குறிப்பிடுகிறேன் 41//

    ஆனா உங்க குரலில் அந்த வயசு தெரியல.

    ReplyDelete
  8. விஷ்ணு,
    குழந்தைகள் தவறு செய்யும் போது சிறு தண்டனைகள் கூட தரலாம், அடுத்த குழந்தையை அடிப்பது, கெட்டவார்த்தை பேசுவது போன்ற தவறுகள்.

    ஆனால் குறும்புகள், குழந்தைகளின் இயல்பு, அவை
    உண்மையில் நிகழ்காலத்தில் இருக்கின்றன. நம் மீது ஏறிவிளையாடுதல், பல பொருள்களை பரப்பி விளையாடுதல்.போன்றவை, இயல்பாய் தவறுதலாய் ஒரு பொருளை உடைத்து விடுதல் போன்றவை நம்மால் பொறுத்துக்கொள்ளப் படவேண்டும்.

    ReplyDelete
  9. உங்களைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  10. அருமையான நேர்மையான பதில்கள் அருமை அருமை சிவா

    நல்வாழ்த்துகள் சிவா

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)