"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 9, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...2

அலுவலகத்தில் சில முக்கிய வேலைகளை செய்யவேண்டியவிதம் பற்றிக் குறிப்புகளை கொடுத்துவிட்டு, நான் செய்யவேண்டிய சில பணிகளையும் முடித்துவிட்டு, வீடு வந்து ’பயணத்திற்கு தயார் செய்ததில் ஏதேனும் விடுபட்டுப் போய்விட்டதா?’ என சரி பார்த்தேன். படுக்கையில் இரு மகள்களும் தூங்கிக்கொண்டிருக்க இனி பனிரெண்டு நாட்கள் பார்க்கமுடியாது என மனதுக்குள் சிரித்துக்கொண்டே நன்கு ஆசைதீரப் பார்த்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன் அப்போது இரவு மணி 11 இருக்கும்..

Tuesday, September 7, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்

மனதுக்குள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் எண்ணம் இமயமலை செல்லவேண்டும். இந்த திருப்பூரை சுற்றி, காய்ந்துபோன நிலங்களையும், சாயம் கலந்த ஆற்றையும், பார்த்து பார்த்து சலிப்பும் வருத்தமும் மிஞ்சும் வாழ்க்கையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலை வேண்டும் என நான் அவ்வப்போது எண்ணத்தை மனதில் போட்டு வைப்பது உண்டு.

Thursday, September 2, 2010

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்

சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

Wednesday, September 1, 2010

இதுதான் திருப்பூர்......2

திருப்பூரின் போதிய அகலமில்லா சாலைகள்.. அதில் பயணிக்கும் வாகனங்களோ கிடைக்கும் இடைவெளியில் சென்றாக வேண்டும். அப்படிப்பட்ட பரபரப்பான காலைவேளை, இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்.

Tuesday, August 17, 2010

படித்ததில் பிடித்தது -- 17/08/2010

காசிக்குப் போவதற்கு முன்பு ஹரித்துவார், ரிஷிகேஷ் இரண்டிற்கும் போயிருந்தேன். கும்பமேளா நேரம். ஹரித்துவார் வண்ண விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருந்தது. இளம்பெண்ணைப் போல புரண்டு ஓடும் கங்கை நதியை ஆசைதீர பார்த்துக்கொண்டு இருந்தேன்.

Sunday, August 1, 2010

சேர்தளம் -- வலைப்பதிவர் கூட்டமைப்பு

திருப்பூர் வலைதள நண்பர்கள் சமீபத்திய சந்திப்பு ஒன்றில் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தை மக்களிடையே பரவலாக சென்று சேர்க்க, வழிமுறைகள் குறித்து வெயிலான் ரமேஷ் அவர்கள் தலைமையில், ஆக்கபூர்வமாக கலந்து உரையாடினோம்.


அது குறித்த விபரம் தினமலர் 01.08.2010

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா