"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, June 22, 2022

மிர்தாதின் புத்தகம் 2

                                     வேலைக்காரன், எசமானனின் எசமான்


இப்படி சொன்னாலே, நம்மை முறைக்கும் பலர் உண்டு. 

இன்றைய பொருளாதார சூழலில், உடல் சார்ந்த வேலைகளில், வேலைக்காரனே, எசமான். இதுதான் இன்றைய பெரும்பான்மை நிலவரம். ஒரு வேலைக்காரனின் சிரமங்களை அறியாதவனல்ல, நான். அவனின் நியாயங்கள் தெரியாதவனல்ல, நான். 

ஆயினும், மிகச்சிறுபான்மையினரே எசமானின் வேலைக்காரனாக இருக்கிறார்கள். இவர்களே வருங்கால எசமானர்கள். 

இதன் பொருள், எசமானின் சொல்லுக்கு, ஆமாம் சாமி போட்டு, காலம் தள்ளுபவர்கள் என்பது அல்ல. 

எசமானின் நிறுவனத்திற்கு எது நல்லதோ, எசமானின் தொழிலுக்கு எது நல்லதோ. அதை தொய்வின்றி அனுதினமும் செய்து முடிப்பவனே, நல்ல வேலைக்காரன். வருங்கால எசமானன்.

சரி சரி. வேலைக்காரன் எசமானனின் எசமான் என்று சொன்னது யார்? நான் அல்ல. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம்தான், இப்படி பேசுகிறது. 

இந்த நூல் தத்துவநூல் என்று யாரேனும் நினைத்திருந்தால், உங்கள் எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகெய்ல் நைமியின் வாழ்க்கை. சமூகத்திற்கு, தான் வாழ்ந்த வாழ்வை, எண்ணங்களை பகிர்ந்ததன் அடையாளம் மட்டுமே. இந்த வாழ்வின் மனநிலை நம்மால் அனுபவிக்க முடியுமா? முடியும். முடியவேண்டும் என்றுதான் மிகெய்ல் நைமி, இதை நூலாக எழுதி இருக்கிறார்.

இந்நூலின் பொருள், இதன் சொற்களில் இல்லை.  இதன் வாக்கியங்களில் இல்லை. இந்தப் புத்தகத்தின் பொருள் சொற்களுக்கு இடையிலும், இதன் வாக்கியங்களுக்கு இடையிலும், இதன் வரிகளுக்கு இடையிலும் இடைவெளிகளிலும் ஓடிக்கொண்டே இருக்கும்.  இந்த நூல் படிப்பதற்கன்று. அனுபவபூர்வமாக பருகுவதற்கே.

இங்கே சொற்கள் இரண்டாம்பட்சம்தான். வேறு ஏதோ ஒன்று (ஒருமை) முதன்மை பெற்றுவிடும். இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம், இது. மனதால் அன்று. புரிந்து கொள்ளப்பட வேண்டிய புத்தகம் அல்ல, இது. உணர வேண்டிய ஒன்று.  - இதெல்லாம் நான் சொன்னது அல்ல. ஓஷோ சொன்னது.

இந்த நூலை வெறுமனே படிக்க ஆரம்பியுங்கள். முன் கற்றவற்றை எல்லாம் பொருத்திப் பார்க்காது, படியுங்கள். இந்நூல், உங்களுக்கு தன்னைக் காட்டும்.

கண்ணதாசன் பதிப்பகம். மிர்தாதின் புத்தகம். (The Book of Mirdad - Mikhail Naimy)

தொடரும்.


No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)