"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, March 24, 2009

தைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....

ஒரு ஜோக்

"தம்பி.. என்ன வேலை செய்கிறீர்கள்?"

"அப்பாவுக்கு உதவியாக, ஒத்தாசையாக இருக்கிறேன்."

"வெரிகுட், அப்பா என்ன செய்கிறார்?"

"சும்மா வீட்ல இருக்கிறார்"

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த இளைஞன் , 'தான் காலத்தை வீணாக்குகிறோம்' என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்?

நம் நிலைமையை சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.

இப்போது நாம் இருக்கும் நிலை என்ன?

நம் குடும்பத்தின் நிலை என்ன?

வேலையில் கற்றுக் கொள்ளவேண்டியது என்ன?

முழுதிறனுடன் உழைக்கிறோமா?

வாய்ப்புகள் நம்மை தேடி வரும்படி நம்மை தகுதியாக்கி கொண்டோமா?

நம்முடைய சுயபொருளாதாரம் எப்படி இருக்கிறது?

இது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். விளக்கம் செயலுக்கு வரும்.

ஒன்றை மறந்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ.....பூட்டை விடச் சின்னது.

சரியான சிறிய சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளை திறந்து, பெரிய கதவையே சுலபமாக திறக்கலாம்.

எனவே சின்னச் சின்ன கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். அவை பெரிய பெரிய வந்த, வரப்போகும் பிரச்சினைகளை தகர்க்கும் சாவிகள்.

வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

நன்றி; சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலிலிருந்து.

9 comments:

  1. சிந்தனையை தூண்டும் பதிவு.. நல்லா இருக்கு நண்பா..

    ReplyDelete
  2. அமுதா, கார்த்திகைப் பாண்டியன் தங்களது வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மலரின் முதல் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. \\தமிழ்நெஞ்சம் said...

    s u p e r\\


    பதிவுலக நண்பர்கள் பயன்பெற வேண்டி நம்மால்
    முடிந்தது..

    ReplyDelete
  5. இதை படித்தவுடன் மனதில் கேள்விகள் எழ தொடங்கிவிட்டன, அருமையான பகிர்விற்கு நன்றி, இதுபோல் தன்னம்ப்பிக்கை தரும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  6. வருக,
    கண்டிப்பாக எழுதுகிறேன்
    என் பிளாக்-ன் நோக்கமே இதுதான் ஜீவா.
    கருத்துக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)