"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Friday, December 11, 2009

பாரதியாரும், எனது நூறாவது இடுகையும்

அறிவே தெய்வம் என சொன்னவர் பாரதி

ஞானப்பாடல் தொகுப்பில் 10வது பாடலைப் பாருங்கள்,

11வது பாடல் பரமசிவவெள்ளம்

இறைநிலை குறித்தான விளக்கமாக அமைந்த பாடல்.

நேரம் கிடைக்கும் போது இந்த இரு பாடல்களையும் சிலமுறை படித்துப்பாருங்கள்.

பாடல்கள் இணைப்பு கிடைக்கும் இடம் சிலம்புமதுரைத்திட்டம்

மனதில் ஆன்மீகம் குறித்தான தெளிவு பிறக்கும்.

நான் பாரதியை இப்படித்தான் பார்க்கிறேன் :))

பாரதியாரின் பிறந்தநாள் நினைவு கூறவும், எனது நூறாவது இடுகையாகவும் என் விருப்பமாக இதை உங்களோடு பகிர்நது கொள்கிறேன்

\\\நிகழ்காலத்தில்... (அறிவே தெய்வம்)
– Hide – Always show
100 Posts, last published on Dec 11, 2009 –\\

dash board - ல் இருந்து கிடைத்த தகவல், ஆனால் பதிவின் வலதுபுறம் இந்த வருடம் 99 இடுகையும், சென்ற வருடம் 2 இடுகையும் மொத்தம் 101 காட்டுகிறது. இதை ஒட்டி முன்னதாக, முந்தய இடுகையிலேயே வாழ்த்து சொன்ன கோவியாருக்கும், என் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்  காணிக்கையாக்குகிறேன்


வாழ்த்துகள்


இன்று மாலை இந்த பதிவைப் பார்த்தேன். பாரதியைப் பற்றிஎன் பாரதி

Tuesday, October 6, 2009

பணமும் பெரியாரும்... பாரதியும்....

பணம் நமது வாழ்விற்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.,

திறமைகள் இருந்தும், தகுந்த தொழிலோ, வேலையோ செய்தும் போதுமான பணம் வருவதில்லை. ஏன்?

பணம் வரும் வழிதான் என்ன? இதில் நம் பங்கு என்ன?

பணத்தின் மீது பற்றும் அக்கறையும் வைத்துக் கேட்டால்தான் பணம் வரும்.





தந்தை பெரியார் ஒரு மாபெரும் அறிஞர். அவர் இந்த பணவிசயத்தில் மிக சரியாகவும், தெளிவாகவும் சிந்தித்தார். பொதுக்கூட்டம் முடிந்தவுடன் அவர் முதலில் கேட்கும் கேள்வி. “ புத்தகம் எத்தனை ரூபாய்க்கு விற்றது?” என்பதுதான்.

மக்கள் அவரிடம் நினைவுக்குறிப்பில் கையொப்பம் கேட்டால்கூட. ‘இருபத்தி ஐந்துகாசு’ இன்றைய கணக்குப்படி இருபத்தி ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொள்ளலாம், வாங்கிக்கொண்டுதான் கையொப்பம் இடுவார்.

பணத்தின்மீதும் ஒருகண் வைத்திருந்தார். இன்று அவர் தேடி சேர்த்து வைத்த சொத்து நீங்கள் அறிந்ததுதான்.

நேர்வழியில் பணம் சம்பாதிக்க தொழில் செய்யும்போது பணத்தின் மீதே கண்ணாக இருக்க வேண்டும்,


பாரதியார் பணம் சேர்ப்பது குறித்து கணப்பொழுதேனும் சிந்தித்திருக்கவில்லை. அவரது துணைவியார் பக்கத்துவீட்டில் கடனாக வாங்கி வைத்திருந்த அரிசியையே, “காக்கை குருவி எங்கள் சாதி..” என்று பாடியபடி முற்றத்தில் சிதறவிட்டுக் குருவிகள் தின்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர். ஆனால் எண்ணத்தை முறைப்படி வானத்தில் அனுப்பாமல் வறுமையில் உழன்றார். இதில் தவறேதும் இல்லை என்றாலும் பணம் சம்பாதிக்கும் நுட்பத்தை அவர் கைக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

பணத்தை உணர்ந்து மதிப்போம், வாழ்வில் ஏற்றம் பெறுவோம்.