"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label இரும்பு. Show all posts
Showing posts with label இரும்பு. Show all posts

Saturday, April 4, 2009

இரும்பை பதப்படுத்த......

உங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை
மேலும் தேவைகளுக்கேற்ப கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அது உங்கள் வளர்ச்சியை வேகப்படுத்தும். அதில் முக்கிய பங்கும் வகிக்கும்.

இரும்பை பதப்படுத்த…

அதை உலைகளில் வைத்து சூடாக்கி, பழுக்க வைத்து….

அ) சூடான பழுத்த இரும்பைத் தண்ணீரில் முழுக வைத்து,உடனே குளிரச் செய்தல்..

ஆ) சூடான பழுத்த இரும்பைத் தரையில் போட்டு,தானாகக் குளிரச் செய்தல்.

இ) சூடான பழுத்த இரும்பை மணலில் புதைத்து,மெதுவாக குளிரச் செய்தல்..

இப்படி பல முறைகளில் குளிரச் செய்கிறார்கள்.

இதில் எந்தமுறை சரி, எந்தமுறை தவறு என பிரிக்கவே முடியாது.

காரணம் இரும்பை, கடினப்படுத்துவதற்கு, வளைப்பதற்க்கு, உடைப்பதற்க்கு என்ற தேவைகளுக்கு ஏற்பவே., குளிர வைக்கும் வழிமுறையும் மாறுகிறது.

இப்படி தேவைக்கேற்ப இரும்பை முழுமையாக உபயோகப்படுத்தும் பொருட்டு, அதனை எப்படியெல்லாம் பக்குவப்படுத்துகிறோம்.

அதேபோல் நம் மனதை , நமது தேவைக்கேற்ப பக்குவப்படுத்தி, மாற்றிக்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும். எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கவனியுங்கள்.பல இடங்களிலும் அலைவதை விட்டுவிட்டு, உங்கள் சொல்படி கேட்க ஆரம்பிக்கும். அதன்பின் சரியான முடிவுகள் எடுப்பது எளிதாகிவிடும்.


நான் இப்படித்தான் என்று இருந்தால் ஏதோ ஒருவிதத்தில் தான் பயனடைவோம். பல இழப்புகள் வரலாம். இரும்பை பாருங்கள். மாற்றத்திற்கேற்ப பலனடையுங்கள்.

மாறாக மனோநிலை பக்குவமானால், நிறைய பலன் அடைவோம், பிறருக்கும் பலன் தருவோம்.

ஆக ஒரு விசயத்தில் முடிவை எடுக்கும் முன், தேவையை தெளிவாகப் புரிந்து கொண்டால், மனதால் நல்ல சரியான, முடிவாக எடுக்கமுடியும்.

தீர்க்கமான உறுதியான முடிவுகளால்... குறிக்கோளை அடையும் வழி எளிதாகிறது

நன்றி: கருத்து, ‘அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து....