"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label உள்சூழ்நிலை. Show all posts
Showing posts with label உள்சூழ்நிலை. Show all posts

Saturday, October 12, 2013

Friday, April 20, 2012

போடா வெண்ணை.....

நம்பிக்கை என்பதன் மீதுதான் நமது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. உயிர் பயம் நமக்கு இல்லை என்று மார்தட்டினாலும்  கூடி வாழும் சமுதாய விலங்கு என்ற வார்த்தைக்கு பொருத்தமாக பாதுகாப்பை முன்னிறுத்தியே கூடி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழுவாய் இருக்கிறோம் என்ற உணர்வே தைரியமாய் நம்மை வாழ வைக்கிறது.

பாதுகாப்பு என்ற அம்சத்தை உள்ளடக்கியே என் மதம், என் சாதி, என் கட்சி, என் இனம், என் நாடு என்று இணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் தவறேதும் இல்லை. ஆனால் இதன்பொருட்டு பிறரை இம்சை பண்ணும்போதுதான் இவையெல்லாம் அவசியமா என தோன்றுகிறது.  என் மதம், என் சாதி, என் இனம், என் கட்சி என இவற்றை நான் நிறுவ முனையும்போது பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க முடிவதில்லை.

Thursday, January 5, 2012

சொர்க்க வாசல் திறப்பு....

நட்புகளுக்கு., இந்தவலைத்தளம் ஆரம்பிக்கும்போது படிப்பவருக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் தூண்டுதலை ஏற்படுத்தவேண்டும். என்ற நோக்கத்தோடுதான் ஆரம்பித்தேன்.  அதே சமயம் நான் எந்த அளவில் மனம் சார்ந்த விசயங்களில் புரிதலோடும்/செயல்பாட்டிலும் இருக்கிறேன் என்ற சுய பரிசோதனை முயற்சியுமாக ஆரம்பித்தேன்.

வலைதளங்களில் மனம் சார்ந்த விசயக்களை எழுதுபவர்கள் குறைவாக இருப்பதால் இணையத்தில் தேடுவோருக்கு இவை கிடைக்கவேண்டும் என்ற உந்துதலாலும் தொடர்ந்து  மனம் சார்ந்து ஆன்மீக கருத்துகளை பகிர்ந்து வருகிறேன்.

Saturday, January 1, 2011

ஆனந்தத்தின் பிரகடனம் - (ஈஷா)

மனிதன் எந்தவொரு செயலில் ஈடுபட்டு இருந்தாலும் அதன் அடிப்படை, எந்த விதத்திலாவது ‘தான்’ ஆனந்தமாக இருக்கவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம்தான். ஆனால் குழந்தைகளையும் நம்மையும் ஒப்பிட்டுப் பார்த்தால் யார் ஆனந்தமாக இருக்கிறார்கள்.? ஏன்? :)

நீங்கள் கவனித்துப்பார்த்தால் சந்தோசம், ஆனந்தம் எதுவாக இருந்தாலும் எப்போழுதுமே அது உங்கள் உள்ளிலிருந்துதான்
வெளிப்பட்டு இருக்கிறது.  காரணம் வெளியே இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். அப்படியென்றாலும் இந்த ஆனந்தத்திற்கு மூலம் நமக்குள்தான் இருக்கின்றது.