"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label இலக்கு. Show all posts
Showing posts with label இலக்கு. Show all posts

Thursday, April 9, 2009

குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து...

இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை அடைய...

குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து இயங்குவது அவசியம்

மின் மோட்டார்களில் அதன் திறனைக் குறிக்க 1HP, 2 HP, எனக் குறிக்கப்பட்டிருக்கும்.
HP (horse power) என்பது குதிரைதிறன் என்பது உங்களுக்கு தெரிந்ததே.

குதிரையைவிட வேகமாக ஓடும் பல விலங்குகள் இருக்கின்றன.

புலி, சிறுத்தை போன்ற மற்ற மிருகங்கள் இரையைப் பிடிக்க குறிப்பிட்ட தூரத்திற்கு, மிக வேகமாக ஓடும். ஆனால் தொடர்ந்து ஓடாது. ஓட முடியாது.

ஆனால் குதிரை தொடர்ந்து பலமணி நேரம் ஓடும்.
இரைக்காக அன்றி இயல்பாகவே ஓடும்.

வேகமாக ஓடுவதை விட தொடர்ந்து ஓடுவது மிக முக்கியம்.

சமயத்தில் வேகமாக செயல்படும் ஆற்றலும் தேவைதான். அதைவிட தொடர்ந்து தாக்குப்பிடித்து, இயங்கும் ஆற்றலே மிகமுக்கிய தேவையாகும்.


இலக்கை நோக்கி ஓடும்போது,வழியில் தடைகள் வரலாம். பல்வேறு சூழ்நிலைகளால் இலக்கின் தூரம், காலம் தள்ளிப் போயிருக்கலாம். அதனால்.. தொடர்ந்து இயங்குங்கள். இல்லாவிடில் உங்களது இலக்கை அடைவது இன்னும் தள்ளிப் போகலாம். அல்லது தடைபட்டே போகலாம்.

அதனால் நண்பர்களே... குறிக்கோளை அடையும் வழிகளில் தொடர்ந்து இயங்குவது என்பது மிகவும் அவசியமானது.


நன்றி: கருத்து:அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து.

Tuesday, April 7, 2009

துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

தீக்குச்சியை பற்ற வைக்கிறீர்கள். அது எரிந்து கொண்டிருக்கிறது.
காற்றடிக்கிறது. தீக்குச்சி அணைகிறது

அதே சமயம்..

உலைகளில், அடுப்பில், தீ எரிந்து கொண்டிருக்கிறது.

காற்று வீசப்படுகிறது.

தீ மேலும் நன்றாக பாதுகாப்பாக எரிகிறது.

தீக்குச்சியை அணைத்த அதே காற்று,
சூழ்நிலையை பலப்படுத்திய பின் தீயை வளர்க்கிறது.


துவக்க நிலையில்..

உங்கள் யோசனைகள் திட்டங்கள் முயற்சிகள் சூழ்நிலைகளினால்,
அல்லது மற்றவர்களால் பாதிக்கப்படலாம்.

அதைக் கண்டு மனம் தளர்ந்து, அத்துடன் அக் காரியத்தை அதோடு விட்டுவிடாதீர்கள்


அந்த திட்டம், எல்லா வழிகளிலும் உங்களால் யோசிக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்பொழுது, அசாதாரண சூழ்நிலை அமைந்தால் ஒழிய பின்வாங்க வேண்டியதில்லை

மனம் தளராமல் கூடுதல் அக்கறையுடன், சரியான வழியில் உழைப்பைச் செலுத்துங்கள்.
உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள். இலக்கை அடைவது நிச்சயம்.


குறிக்கோளை அடைய.. துவக்கநிலை எதிர்ப்புகளை கண்டு அஞ்சாதீர்கள்

நன்றி; கருத்து ,அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து

Wednesday, April 1, 2009

கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்
தெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.

5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.

இப்போது சொல்லுங்கள்!

உங்கள் வாழ்க்கை...

ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?

வாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.

அடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்
பல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.

சொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.

குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...

சுயமானதாக................................................SELF
அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
அடைய முடிவதாக....................................ACHIVEABLE
யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED

நம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக..

அடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....

20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...

என் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)