"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Sunday, February 21, 2010

படித்ததில் பிடித்தது 21/02/2010

”எப்படித்தான் பொய் கணக்கு எழுதறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு”

”ஏன்?”

Monday, June 29, 2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு 14.06.2009

திருப்பூர் பதிவர் சந்திப்பு கடந்த 14.06.2009 நடைபெற்று கொண்டிருந்தபோது சிறு காலதாமதத்திற்கு பின்னரே நான் கலந்து கொள்ள முடிந்தது.,

‘நிகழ்காலத்தில்’ என என்னை அறிமுகப் படுத்திக் கொண்டபோது., சற்றே யார் என புரியாமல் இருந்த நண்பர்கள் ’அறிவே தெய்வம்’ என்றவுடன் சிரிப்புடன் இயல்பான நிலைக்கு வந்தார்கள்.,

வெயிலான் பரிசல் தலைமையில் நடந்த பதிவர் சந்திப்பு குறித்து ஏற்கனவே பரிசல் எழுதி விட்டதால் படங்கள் இங்கே




(ஈரவெங்காயம், நிகழ்காலத்தில், செந்தில்நாதன்,செல்வம், பரிசல், வெயிலான்,சிறப்பு விருந்தினர் வடகரைவேலன், க்ர்பால்)

அது என்னவோ திருப்பூரில் உள்ள பதிவர்களின் உள்ளூர் சந்திப்பு என்பதால் உரையாடல் பல தலைப்புகளுக்கு சென்றும் மீண்டும் தொழில் பற்றியதாகவே அமைந்துவிட்டது.

தொழிலின் தன்மை, அதன் காரணமாய் முதலாளிகளின் நடவடிக்கைகள், தொழிலாளிகளின் நடவடிக்கைகள் , அதன் காரணமாய் அமையும் தாமதமாக சரக்கு அனுப்புதல், மற்ற தொழில்களுக்கும், திருப்பூரின் தொழில் தன்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என வடகரை வேலன் அண்ணாச்சியும், ராமனும் நன்கு அலசினர்.

கடைசியாக கிர்பால் அவர்களின் கேமாராவினால் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இடம்,தேநீர்,வடை,போண்டா அனைத்தும் ராமன் அவர்கள் ஏற்பாடு. அதற்கு நன்றிகள் பல.





நான், நடுவில் நண்பர் வெயிலான் , வலதுபுறம் இருப்பது ராமன்