"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label himalayas. Show all posts
Showing posts with label himalayas. Show all posts

Thursday, December 30, 2010

பயணம் - கேதர்நாத்க்கு. நிறைவு

11.08.2010 அன்று நன்கு ஓய்வுக்குப் பின் எங்களுடன் வந்த பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் சமையல் குழுவினருக்கு எங்களுடைய பங்களிப்பாக இயன்ற நன்கொடைகளை கொடுத்தோம் அமைப்பாளர்கள் என்னதான் சேவைக்கட்டணம் பேசி இருந்தாலும், அவர்களின் உழைப்பு நம்ம ஊரைப்போல் காசுக்காக என இல்லாமல் ஒவ்வொரு கணமும் முகம் சுளிக்காமல் எங்கள் முழுமையான பாதுகாப்புக்கும், பயணத்திற்கும் உத்தரவாதம் தந்தார்கள். மகிழ்ச்சியுடன் எங்கள் அன்பை ஏற்றுக் கொண்டனர்.

Thursday, December 23, 2010

இனிய பயணம் - கேதர்நாத்க்கு..15

பிரகாரத்தைச் சுற்றி வந்த பின் கோவிலின் இடதுபுறம் வெளியே உள்ள சிவபிண்டா எனப்படும் ஜோதிர்லிங்கத்தைத் தரிசனம் செய்தோம். வெண்மைநிறத்திலான லிங்கம் அதன் வடிவம் என்ன எனத் தெரியவில்லை. அனேகமாக பிரபஞ்சவடிவமாக இருக்கலாம் (நீ போய் பாத்தியான்னு அங்க யாரு கேட்கிறது) கோவிலின் ஆராவாரமில்லாமல், மிக அமைதியான இடமாக இருந்தது. கண்ணை மூடி உட்கார நேரம் போனதே தெரியவில்லை. (யாரது அது நல்ல தூக்கமான்னு கேட்கிறது)

Monday, December 13, 2010

இனிய பயணம் கேதார்நாத்க்கு - 14

குதிரை பயணம் ஆரம்பத்தில் எனக்கு எளிதாகத் தெரிந்தது. போகப்போக அதன் சிரமங்கள் புரியத் துவங்கின:) குதிரைப் பயணத்தில் மிக முக்கியம் முன்னே பார்த்து ரசிப்பதை விட நாம் கால் வைத்திருக்கும் இடத்தில் கவனம் அதிகம் இருக்க வேண்டும்.

எதிரே வரும் குதிரைகள் உரசும். அல்லது நம் குதிரை செல்லும்போது நமது கால் பக்கவாட்டில் பாறைகள், இரும்பு பைப் தடுப்பில் மோத வாய்ப்பு உண்டு. அதனால் இரண்டு கால்களையும் சமயத்திற்கு ஏற்றாற்போல் உள்ளடக்கி, மேலே தூக்கி சமாளித்துக்கொள்ள வேண்டும். இன்னும் எதிரே மோத வரும் குதிரையை தள்ளிக்கூட விடவேண்டி வரும்:)

Thursday, December 9, 2010

இனிய பயணம் - கேதர்நாத்க்கு..13

08.08.2010 அன்று காலையில் கிளம்பி கேதார்நாத் செல்ல ஆயத்தம் ஆனோம். உத்தர்காசியிலிருந்து ஸ்ரீநகர், குப்த காசி வழியாகச் சென்று கேதார்நாத் அடிவாரமான கெளரிகுந்த்-ல் தங்குவதாகத் திட்டம். பயண நேரம் சுமார் 10 மணி நேரம் ஆகலாம் எனத்தெரிந்ததால் காலை உணவை ஏழரை மணி அளவில் முடித்துக்கொண்டு 8 மணிக்குக்கு பேருந்தில் ஏறி கிளம்பினோம்.

Tuesday, November 30, 2010

இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12

பாறை விழுந்த பாதை துண்டிக்கப்பட்ட இடத்திற்கு மறுபுறம் நடந்து சென்றபோது அந்தப்பகுதியில் நிறைய வாகனங்கள் கீழிறங்க வழி இல்லாமல் காத்திருந்தன.

அதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று!!. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.