"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label அன்னை தெரசா. Show all posts
Showing posts with label அன்னை தெரசா. Show all posts

Wednesday, July 29, 2009

அன்னை தெரஸா

மெகா டிவியில் காலை 7.15 க்கு கவனகர் சொற்பொழிவில் கிடைத்த ஒரு தகவல். இதை பதிவேற்ற எண்ணம் இருந்தும் நேரமின்மையால் பொறுத்திருந்தேன். சாருநிவேதிதா அதை பதிவேற்றம் செய்திருக்கிறார். தன் கட்டுரைக்காக சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்ததால் அவருக்கு நன்றியைச் சொல்லி இங்கே...

கனக சுப்புரத்தினம் என்பவரின் ஆன்மீகச் சொற்பொழிவு. ஒரே ஒருநாள் அதைக் கேட்டேன். அதில் அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார். மதர் தெரஸா கல்கத்தாவில் ஆசிரமத்தை ஆரம்பித்த புதிதில் அதற்குத் தேவையான பணச் செலவுக்காகத் தன்னுடன் சில குஷ்ட நோயாளிகளை அழைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று பெரிய கடைகளில் பிச்சை கேட்பாராம். ஒருநாள் ஒரு சேட்டுக் கடையில் கேட்கிறார். சேட்டு அன்றைய தினம் (இதை வியாபார நேரத்தில் தொந்தரவாக நினைத்து) மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ” வேறு இடம் பார் ” என்கிறார். தெரஸா தன்னுடைய ஆசிரமத்தைப் பற்றிச் சொல்லி உதவி கேட்கிறார். சேட்டுக்குக் கோபம் எல்லை மீறுகிறது.

“உன்னிடம் தருவதற்கு இப்போது எதுவும் கிடையாது. ”

“இருப்பதைத் தாருங்கள்; போதும். ”

“இதோ இதுதான் இருக்கிறது ” என்று சொல்லி தெரஸாவின் முகத்தில் காறி உமிழ்கிறார் சேட்.

உடனே தெரஸாஎனக்கு இது போதும்; இவர்களுக்கு ஏதாவது தாருங்கள்என்று மிக அமைதியாகச் சொல்கிறார்.

இதைக் கேட்டதும் சேட் ஆடிப் போய் விடுகிறார். அன்றைய தினத்திலிருந்து தங்கள் நிறுவனத்திலிருந்து ஆண்டு வருமானத்தில்,(இலாபத்தில்) பத்து சதவிகிதத்தை மதர் தெரஸாவின் ஆசிரமத்துக்கு இன்று வரை கொடுத்து வருகிறார்கள் சேட்டின் குடும்பத்தினர்.

மீண்டும் சந்திப்போம்

Saturday, March 21, 2009

கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

தினத்தந்தி--கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

படித்துப் பாருங்கள். படம் வரைந்தபோது அவரின் மனோநிலையை உணர முடிகிறதா என்று பாருங்கள்..

கடமையை, செயலை எப்படி செய்யவேண்டுமோ அப்படி முழுஈடுபாட்டோடு செய்தார்.

எதிர்பாராமல் செய்ததற்கு கிடைத்த பலனையும் பாருங்கள்.கிடைத்த பின்னும் அதே மனநிலையில் இருப்பதையும் பாருங்கள்.

இதுதான் கீதை சொல்வது.

ஓவியருக்கு பணம் கொடுத்தவரின் மனநிலையையும் உணருங்கள். அவர் இப்போதுதான்
செயலை செய்திருக்கிறார், நிச்சயம் பலன் கிடைக்கும்.

மனம் மட்டும் தரமும்,தகுதியும் ஆனால் வாழ்வில் கிடைக்கும் பலன்கள் அதிசயத்தக்கது.

மனதை மேம்படுத்துவோம், பாரம் குறைந்து பலன் அடைவோம்