"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label குறிக்கோள். Show all posts
Showing posts with label குறிக்கோள். Show all posts

Monday, July 20, 2009

இரு இறக்கைகள்

இரு சகோதரர்கள் இணைந்து நடத்தும் நகைக்கடை ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய நகைக்கான பில்லைப் பார்த்து அதிர்ந்து போனார்.

கூட்டலில் தவறு. மொத்தத் தொகை ரூ.10,000/= அதிகமாகக் குறிக்கப்பட்டிருந்தது. நகை வாங்கியவர் மிகுந்த கோபத்தோடு மூத்த சகோதரரிடம் அந்தச் சீட்டை நீட்டினார்.

சீட்டைப் பார்த்தவுடன் நிலைமையை புரிந்து கொண்ட மூத்தவர், தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் வாடிக்கையாளரை திருப்திப்படுத்த விரும்பினார்.

”அது ஒண்ணுமில்ல சார், தம்பி அப்பாகிட்ட தங்கம்,வெள்ளி பற்றி கத்துகிட்டான், கணக்கு மட்டும் நாந்தான் சொல்லிக் கொடுத்தேன்”என்றார்.

நல்ல வாடிக்கையாளர், தன் சகோதரர் இருவருமே காயம்படாமல் அந்த இடத்தின் இறுக்கம் அகன்றது.

குறிக்கோளை அடைய….

நகைச்சுவை உணர்வும், நட்பைக் காப்பாற்றும் குணமும் கூடுதல் இறக்கைகள் ஆகும்.

நன்றி:
அடுத்த ஆயிரம் நாட்கள்’ நூலில் இருந்து

Wednesday, April 1, 2009

கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்
தெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.

5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.

இப்போது சொல்லுங்கள்!

உங்கள் வாழ்க்கை...

ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?

வாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.

அடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்
பல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.

சொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.

குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...

சுயமானதாக................................................SELF
அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
அடைய முடிவதாக....................................ACHIVEABLE
யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED

நம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக..

அடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....

20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...

என் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)