"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Saturday, January 26, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா குறித்து

நண்பர்கள் பலரும் தேவியர் இல்லம் ஜோதிஜியின் டாலர் நகரம் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருப்பூர் வந்த வண்ணம் இருக்கின்றனர்.  அதில் சிலருக்கு விழா நடக்கும் இடம் அழைப்பிதழில் இருந்தாலும் குறிப்பான அடையாளம் இருந்தால் நல்லது, நாளை ஞாயிறு காலை நேரடியாக வந்துவிட வசதியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்ததன் பேரில் இணைப்பு கொடுத்து இருக்கிறேன்,


விழா நிகழும் இடம் திருப்பூர் டிஆர்ஜி ஹோட்டல் பல்லடம் ரோடு, பழைய பஸ் நிலையத்திலிருந்து தெற்கே பல்லடம் ரோட்டில் சுமார் 700 மீட்டர் தூரத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது.

 11.092603, 77.346939

View Larger Map கிளிக் பண்ணுங்க..

விழா நாளை காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவு பெறும்.



நாளை நேரில் சந்திப்போம் நண்பர்களே..
நிகழ்காலத்தில் சிவா
9790036233

Tuesday, January 19, 2010

விலகி ஒன்றிணைவோம்

அன்புடன் கதிருக்கு

இது ஒரு மாற்றுப்பார்வை :)))

வலைத்தளம் நம்மைக் கட்டிப்போட்டது உண்மைதான். அதை உணர்ந்து நாம் வெளியே வராமல் இருக்கும்போதுதான், இந்த போதையில் நாம் மயங்கி இருக்கிறோம் என உணராதபோதுதான் நம் எழுத்துகள் திசை மாறுகின்றன.  மனிதம், நட்பு  மறக்கப்பட்டு, நானே பெரியவன் என்கிற அகந்தை, ஆணவம் என்ற உணர்வு மேலோங்கி விடுகிறது. விளைவுதான் தரமில்லாத எழுத்துகள் ஒருசில பதிவர்களிடமிருந்தும், படைப்பாளிகளிடமிருந்தும் :))

எதன் பொருட்டு எழுதுகிறோம் என்பது அனைவருமே சுயபரிசீலனை செய்துதான் எழுதுகின்றனர். அவர்களுக்கு சரி எனப்பட்டதைதான் எழுதுகின்றனர். சிலசமயங்களில் எழுத்து ஒருவிதமாகவும், செயல் ஒரு விதமாகவும் இருக்கும். அது அவர்கள் வலைபோதையில் இருக்கின்றனர் என்பதை காட்டும். அல்லது அவர்கள் குணமே அதுவாக இருக்கும். அதை அடையாளம் காணுவது நம் பொறுப்பு.

குடிபோதையில் இருப்பதுபோல் தான் இதுவும்,:)) 

சமுதாயத்தில் பார்க்கும் மக்கள்தானே வலைத்தளத்திலும், வேறு கிரகத்தில் இருந்து வந்துவிட்டார்களா என்ன!!  வலையுலகில் நட்பு ஒன்றே பிரதானமாக இருப்போம். அதில் ஒருவேளை கர்வம் கொண்ட படைப்பாளிகளிடமிருந்து அவசியமானால் விலகிக்கூட இருக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால் நம்மைவிட சகல விதத்திலும் அவர்களை சாமர்த்தியசாலிகளாகவே பார்க்கிறேன்.

உங்களாலும் என்னாலும் நீதி, நேர்மை, உண்மை, அன்பு என்ற விசயங்களை தாண்ட முடியாது. ஆனால் அவர்களுக்கு இந்த துணிவு இருக்கிறது.
அவர்களை திருத்துவது நிச்சயம் வாசகர்களால் முடியாது. அவர்களாகவே உணர்ந்து திருந்தினால்தான் உண்டு. அதற்கு நமது எதிர்வினையாக, மாற்றுக்கருத்துகளைச் நேரடியாக இடுகையின்மூலம் சொல்லாம். ஒருவேளை அவர்களை இக்கருத்து சென்றடைந்து திருந்த வாய்ப்பு உண்டு.

ஒருவரது நோக்கத்தை ஒட்டியே செயல்பாடு உண்டு. எனவே செயலைத் திருத்தமுடியாது. எனக்கு இரண்டுகண்ணும் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என நினைப்பவரும் உண்டு, மண்ணுக்கு போகிற ஒருவரது கண்களை இருவருக்கு வாழ்வில் ஒளிகூட்ட பாடுபடுவோரும் உண்டு. இதுதான் உலகம். இது பதிவுலகிலும் உண்டு.

இந்த குறுகிய நோக்கம் கொண்ட படைப்பாளிகளை விட்டு விலகுவதும், அவர்களை பொருட்படுத்தாமல் இருப்பதுமே நாம் அமைதியாக இருக்க வழி.
அவர்கள் செயலுக்கு அவர்கள் தகுந்த விளைவினை நிச்சயம் அனுபவிப்பர். அதற்கு நாம் கருவியாக இருக்க வேண்டியதில்லை.

சுக்கு நூறாக உடைப்பது நம் வேலை அல்ல. மாறாக ஒதுங்கி ஒத்த எண்ண்ம் கொண்டவர்களோடு ஒன்று சேர்ந்து வலையுலகம் என்பது என்ன, வலையுலகம் என்பது ஒரு ஆக்கபூர்வமான அமைப்பு என்று மாற்ற என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். சண்டை சச்சரவு என்ற கதைக்கு உதவாத பொழுதுபோக்க மட்டும் வலைப்பதிவு என்ற நிலையை மாற்ற முயற்சிப்போம்.

//* சக படைப்பாளிகளை தெருவில் சண்டையிடும் விலங்குகளெனவும், அவர்களின் படைப்புகளைக் குப்பைகளெனவும் சொல்ல வைக்கிறது.

* சக படைப்பாளியின் படைப்பினை கிழித்தெறியச் செய்கிறது, சாலையில் செல்லும் ஒரு பெண்ணைக் குறித்தான மனவக்கிரத்தை அப்பட்டமாக எழுதத் தூண்டுகிறது.

* சக எழுத்தாளனின் உடல்கூறுகள், உடலில் இயற்கையில் அமைந்த குறைபாடுகளைக் குறித்து குரூரமாகப் பேசவைக்கிறது.//

இதெல்லாம் தன் இருப்பை பதிவு செய்யும் தந்திரம்.
எப்படியாவது அனைவரின் கவனத்தை ஈர்க்கும் மலிவான யுக்தி, இதை புரிந்து கொண்டால் போதும்
.

அவர்கள் நிம்மதியாக எதை வேண்டுமானாலும் கிழிக்கட்டும், பேசட்டும், நாம் கவனிக்கவில்லை என்பது உறுதியானால் தானாக அடங்கிவிடும்.அவர்கள் அகந்தை.

ஒன்றிணைவோம், சாதிப்போம்.

மாப்பு இது உங்கள் இடுகைக்கு மாற்றுக்கருத்துதான். எதிர்வினை அல்ல :)))))

Wednesday, November 25, 2009

வலையுலக நட்பும், கருத்துச் சுதந்திரமும்.

வலையுலகில் பலவித இடுகைகளை படிக்கிறோம். படிக்கிற இடுகை ஒரு கவிதை, கதை, குறித்தான இடுகையாக இருக்கும்போது, அதில் பதிவரின் எண்ண ஓட்டம் தெரிகிறது. அதற்கு பின்னூட்டம் சூப்பர், நல்லா இருக்கு அவ்வளவுதான். அங்கே விவாததிற்கு இடமே இல்லை.

சாதி, ஆன்மீகம், மதம், நாத்திகம், அரசியல்,காமம் சார்ந்த இடுகைகள் வரும்போது விவாதத்திற்கு உள்ளாகக் கூடிய வகையில்தான் கருத்துகள் அமையும். விவாதமும் தவிர்க்க முடியாதது.

இது போன்ற இடுகைகளை நான் படிக்கும்போது முதலில் கட்டுரையின் நோக்கம் என்ன என்பதைத்தான் கவனிக்கிறேன்,

அது கடுமையாக எதிர்க்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு ஜால்ராவா? இல்லை கிண்டல் அடிக்கிறதா? ஆராய்கிறதா? எடுத்துக்கொண்ட கருத்தை நிறுவுகிறதா? சமுதாயத்தில் தனது கருத்தை ஆதங்கத்துடன் பதிவு செய்கிறதா என்று இடுகையைப் பற்றி படித்து முடிவுக்கு வருகிறேன்.

கடுமையாக எதிர்க்கிறது, நிறைகளைச் சுட்டிக் காட்டாமல் குறைகளையே பெரிது படுத்தி பேசுகிறது என்றால் அங்கே நமது குரல் எடுபடாது. குரல் கொடுத்தாலும் கடுமையான ஆட்சேபனைகள் நிச்சயம் வரும். எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே விலகிவிடுகிறேன்.மாறாக ஒத்த கருத்துடைய அந்த நண்பர்களின் பின்னூட்டங்களை வைத்தே அவர்களை மதிப்பீடு செய்து இரசிக்கிறேன்.

உதாரணமாக ஆன்மீகம் சார்ந்து எழுதக்கூடிய அன்பர்களிடையே தானகவே ஒரு குழுபோல் அமைந்துவிடும். தினசரி வந்து படிக்கும் நண்பர்கள் மற்றும் எழுதும் பதிவரிடையே கருத்தளவில், மனதளவில் ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிடும். அப்போது இடையில் புகும் மாற்றுக் கருத்துடைய நண்பர் தொடர்ந்து படிப்பவராக இருந்தாலும், தாங்கமுடியாமல் ஒருகட்டத்தில் எதிர்க் கருத்தை அங்கு பதிவு செய்ய முயலும்போது அது அவரைப் பொறுத்து சரியானதாகவே இருந்தாலும், மற்ற அனைவராலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் அவர் சொல்ல வந்ததும் மறைக்கப்பட்டு, பின்னூட்டமிட்ட நண்பரின் மீது குழுவாக பாய்ச்சல் நிச்சயம்.

இது சூழ்நிலையையே கெடுத்துவிடுகிறது. இவர்களுக்கும் பாடம் போய்விடும், அவருக்கும் எதிர்ப்பை திரும்பவும் எதிர்க்க, கருத்தை வலியுறுத்த என மனநிம்மதி போய்விடும்.

இது ஆன்மீகம் மட்டுமல்ல, அனைத்துத் துறையினருக்கும் பொருந்தும், கணினி தொழில்நுட்ப விளக்கம் தரும் நண்பரின் நோக்கம் புரிந்து கொள்ளாது அங்கு தமிழில் குற்றம் கண்டுபிடிக்கிறார் ஒரு நண்பர்.

இந்த சூழ்நிலையை நான் எப்படி எதிர்கொள்கிறேன் என்றால் இடுகையின் நோக்கம் புரிந்தது. ஆக்கபூர்வமான நோக்கம் எனில் சிறு குறைகளாக என் மனதிற்கு பட்டதை (பிழைதிருத்தத்தை கூட) தனி மடலிடுவேன், நிறைவுகளை பாராட்டி விடுவேன். முக்கிய நோக்கத்தைப் புறக்கணித்து குறைகளை பெரிது படுத்தும்போது எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடுகிறது. இடுகையின் நோக்கம் திசை திருப்பப்பட்டு பின்னர் வந்து படிப்பவரின் மனோநிலையை குழப்பம் அடையச் செய்து விடுகிறது.

அதற்காக தவறை அனுமதிக்க வேண்டுமா என்றால் நிச்சயம் இல்லை. அந்தத் தவறு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அவரிடம் தெரிவித்துவிட்டு என் தளத்தில் தனித் தலைப்பிட்டு எதிர்கருத்தை பதிவு செய்கிறேன். அப்போது அவர்கள் மனநிலையும் கெடுவதில்லை, எழுதும் எனக்கும் மனநிறைவு ஏற்பட்டுவிடும்.

இதனால் என்னுடைய பின்னூட்டம் எங்கு இருந்தாலும் பெரும்பாலும் பாராட்டியே இருக்கும், சிறு நகைச்சுவை இருக்கலாம். அதிகமாக இடுகையின் மையத்தை விட்டு விலகி பின்னூட்டமிடுவதில்லை அதனால் கும்மிக்கு நான் எதிரானவன் அல்ல, மனதை ரிலாக்ஸ் பண்ண சில சமயங்களில் கும்மியும் தேவைதான். அதற்கான இடுகை எது எனபதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும் என்றே சொல்ல வருகிறேன்.  

இடுகைகளின் தரத்தை முடிவு செய்து அதற்கேற்றவாறு பின்னூட்டமிடுவது பதிவரிடையே நட்பை இன்னும் பலப்படுத்தும், பிணைப்பை ஏற்படுத்தும்.

வலையுலகில் நட்பு முக்கியமா, என் கருத்து முக்கியமா எனும்போது என்கருத்தை வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நட்பு என்பது விரிசல் வந்தால் மீண்டும் மனதளவில் ஒட்டாது. வாயளவில்தான் நட்பு இருக்கும். எனவே பின்னூட்டத்தில் எனது பாணியாக இதைக் கடைபிடித்து வருகிறேன்.

சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் உங்களது கருத்தா......நட்பா.. உங்கள் விருப்பம்.!!!

வாழ்த்துகள்..