"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 11, 2010

நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்

நம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.

இந்த நல்ல நாளை வரவேற்று மகிழ்வோம்.



இதோ மகானின் பொங்கல் வாழ்த்து அவர் பாணியில் பொங்கலையும், உள்நோக்கிய மனோநிலையில் இருந்தும் நமக்கு வழங்கிய பாடல்

                      

                          சூட்சுமப் பொங்கல்

வெட்டவெளி என்ற பெரும் பானைக்குள்ளே

            வேகுதுபார் அண்டகோடி எனும் அரிசி

அட்டதிக்கும் அறிவாலே துழாவி விட்டேன்

         ஆஹாஹா அதைச் சுவைக்க என்ன இன்பம்

கிட்டிவிட்ட தெந்தனுக்கு இந்தப் பொங்கல்

          கேட்டவர்க் கெல்லாம் தருவேன் தகுதியானால்

தொட்டுத் தான் அதைக் கொடுப்பேன் சூடாறாது

         சுவைக்கச் சுவைக்க இன்பமிகும் சூட்சமப் பொங்கல்

 

-- வேதாத்திரி மகரிஷி

வாழ்த்துகளுடன் 
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

  1. பொங்கல் வாழ்த்துகள் ஐயா.

    அ. நம்பி

    ReplyDelete
  2. அற்புதமான படம். இனிய பொருங்கல் வாழ்த்துகள் சிவா

    ReplyDelete
  3. மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி திரு.அ.நம்பி

    திரு.ஜோதிஜி

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. அன்பின் சிவசு

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    மகரிஷியின் பாடல் அருமை

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)