"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, October 8, 2011

பாத்திரத்தை பொறுத்தது உணவின் சுவையும், தரமும்!

இன்று பெரும்பாலானோர், சில்வர் பாத்திரத்தில் தான் சமைக்கின்றனர். இதில் சமைப்பதால் நன்மை, தீமை ஏதுமில்லை.

வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவால், உடல் சோர்வு நீங்கும். இதில் சமைத்த உணவுப் பொருட்களுக்கு, "புட் பாய்சன்' ஆகும் வாய்ப்பு குறைவு என்பதால், இன்றும் கோவில்களில் சமைப்பதற்கு வெண்கலப் பாத்திரத்தை பயன்படுத்துகின்றனர்.

செம்புப் பாத்திரங்களில் சமைக்கும் உணவுகளை தொடர்ந்து உண்டால், ரத்தம் சுத்தமாகும். கண் பார்வைக்கு நல்லது. வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும். "பெப்டிக் அல்சர்' இருப்போர் செம்புப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் நோய் நீங்கும். துளசி போன்ற மூலிகை இலையை நீரில் போட்டு, அதை இரவு முழுவதும் செம்புப் பாத்திரத்தில் வைத்து, காலையில் அருந்தினால் வெண் குஷ்டம் நீங்கும். இந்த தீர்த்தம், இருமல், சளி உள்ளிட்ட வைரல் தொற்றுகளையும் தடுக்கிறது. பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு இதுவே காரணம்.

இரும்பால் ஆன பாத்திரங்களை, வறுப்பதற்கு பயன்படுத்தலாம். ஆனால், துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு வாணலியில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், உணவுப்பொருள் கறுப்பு நிறத்திற்கு மாறி, சுவையிலும் மாற்றத்தைக் கொடுக்கும்.

அலுமினியம், ஈயப் பாத்திரங்களை பயன்படுத்துவது உகந்ததல்ல. பல பாத்திரங்கள் இருந்தாலும், மண்பாண்டங்கள் தான் சமைக்க மிகச் சிறந்தவை. எவ்வித பின்விளைவுகளும் அற்றது. மண்பானையில் சமைத்த உணவு பல மணி நேரம் கெடாமல் இருக்கும்.நமக்கு இயற்கை, "ரெப்ரிஜிரேட்டரே' மண்பாண்டங்கள் தான்!


தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின், உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரமூர்த்தி -நன்றி தினமலர்;8-10-2011

13 comments:

  1. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

    ReplyDelete
  2. கிச்சன் பக்கம் எப்போ போனீங்க சிவா?

    பொது அறிவு வளர்த்து விடறீங்க....நன்றி!

    ReplyDelete
  3. கிச்சன் பக்கம் அப்பப்ப போறது உண்டு.:)

    பேப்பர் நியூஸ் பார்த்தேன். பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான்...

    ReplyDelete
  4. நல்ல பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. பாத்திரங்களில் இவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கிறதா? தகவலிற்கு நன்றி

    ReplyDelete
  7. பிரஷர் குக்கரை என்ன செய்யலாம்?

    கணவர்களை ரொம்ப நேசிக்கிறவங்க பயன் படத்தக் கூடாதோ??(..விளம்பரத் தாக்கம்)

    வியாபாரம் பல நன்மைகளை விழுங்கி விடுகிறது.மண்பாண்டமும் இவற்றில் ஒன்று.

    நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  8. சரி உங்க வீட்ல என்ன பாத்திரம் பாஸ்.....

    ReplyDelete
  9. @சூர்யபிரகாஷ் வாங்க.,

    எங்கவீட்ல மண்சட்டியில்தான் சாம்பார் ரசம் எல்லாம்., ஆனால் நேரமின்மையாக இருப்பின் சில்வர் பாத்திரத்தில்தான்:) சாதம் வைக்க சில்வர் குக்கர்.....:)


    மற்ற நண்பர்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    ReplyDelete
  10. நாங்கள் கைவிட்ட பழக்கவழக்கங்களை இப்பவெல்லாம் வெள்ளைக்காரர்களே விரும்பிப் பாவிக்கிறார்கள்.இதுதான் வேடிக்கை !

    ReplyDelete
  11. தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்


    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_19.html

    ReplyDelete
  12. நேர்மைக்கு நன்றி ...... நான் என் வீட்டில் இதை பின்பற்ற சொல்கிறேன்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)