"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, April 19, 2011

எதுவெல்லாம் ஆன்மீகம்.? பகுதி 2

எதிர்ப்பின்மை என்பது என்ன. இது மனதளவில் ஏற்பட வேண்டும். முதலில் மனம் எதனோடும் முரண்படாதிருத்தல் என்பதை புரிந்து கொள்வோம். அதெப்படி? என்று உங்கள் மனம் கேட்கும்:) இதுதான் எதிர்ப்பு என்பது. அதாவது உடனடியாக மனம் எதற்கும் எதிர்வினையாற்றும். அளவு கடந்த வேகத்துடன் அது இயங்கும்.
இது ஏதோ என் கருத்தை உங்கள் மனதில் திணிப்பதற்காக சொல்வது என்று அருள்கூர்ந்து நினைத்துவிட வேண்டாம். எதெற்கெடுத்தாலும் உடனடியாக பொறுமையின்றி மனம் ஆற்றும் எதிர்வினைக்கு, எதிர்ப்புக்கு, நாம், நமக்குத் தெரியாமலேயே துணை போய்க்கொண்டுதான் இருக்கிறோம். இதை நீங்கள் தெரிந்து கொண்டாலே மனம் உங்களிடம் கைகட்டி நிற்க தயாராகி விடும்:)
இது அனுபவத்தில் எளிதாக உங்களுக்கு பிடிபடும்.
நீங்கள் செய்ய வேண்டியது சில விநாடிகளேனும் உங்கள் மனதை கவனித்தல் மட்டுமே நீங்கள் செய்ய வேண்டியது. அடுத்தது என்ன செய்யலாம் என்பதை யோசிக்க ஓரிரு விநாடிகள் கிடைக்கும். அவ்வளவுதான்.
இப்படி மனதளவில் உடனடியாக எதிர்வினை ஆற்றவதை, உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் பொறுமை உங்களுக்கு வந்து விட்டது எனபதை உறுதி செய்து கொள்ளலாம். இதற்குப் பெயர் மனதை கவனிக்கும் நுட்பத்தின் ஆரம்ப கட்டம் என வைத்துக் கொள்ளுங்களேன்.
சாட்சியாய் இருத்தல்என்பது இறுதி நிலை என்றால் கவனித்தல் என்பது ஆரம்பநிலை. (மனதை கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை என்று இந்நேரம் மனம் சொல்லியிருக்குமே:))
இன்னும் விவரமாக சொல்ல வேண்டும் என்றால் சட்டென கோபம் வரும் எனக்கு. மனதை கவனிக்கத் தொடங்கியபின் கோபம் சற்று தாமதித்து வருகிறது. கோபத்தில் வார்த்தைகள் வந்து விழுவது சற்றே தேக்கமடைந்து பின்னர் வருகிறது. அதன் வீரியம் குறைந்து விட்டது, கோபத்தில் வரும் வார்த்தைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது எனச் சொல்லலாம்.
இங்கு இன்னும் ஒரு விசயம் கூட.. எதிராளியின் பலத்தை கண்டு, அதனால் நமக்கு வரும் விளைவினை கணக்கில் கொண்டு, சட்டென நமது கோபம் குறைந்து பேசுவது பயத்தினால்..
ஆக பயத்தினால் மனம் வேறு வழி இன்றி் அடங்குவது வேறு,
நாம் கவனித்தலால் மனம் அமைதியடைந்து அடங்குவது வேறு .

இதுவும் ஆன்மீகம்தான் என தொடர்வோம்.


4 comments:

  1. ஆக பயத்தினால் மனம் வழிதெரியாமல் அடங்குவது வேறு, நாம் கவனித்தலால் மனம் அமைதியடைந்து அடங்குவது வேறு .


    ...well said and well written.

    ReplyDelete
  2. அன்பு நண்பருக்கு வணக்கம், கேதார் பற்றிய தேடலின் பொது கூகுளில் உங்களின் ப்ளோக்கை பார்த்தேன், அபோதுதான் நான் பிளாக் பற்றி தெரிந்து கொண்டேன், இத்தனைக்கும் நான் கடந்த நான்கு வருடமாக கம்ப்யுட்டர் டிசைனிங் ஒர்க் செய்து வருகிறேன், எனது ஒரு மாத முயற்ச்சியில் ஓரளவு ப்ளாக் பற்றி தெரிந்து கொண்டு, டிசைன் செய்திருக்கிறேன். எனக்கு ப்ளோக்கை அறிமுகம் செய்த நண்பருக்கு எனது கோடானுகோடி நன்றி.! எதற்கும் ஒரு முறை எனது ப்ளோக்கை பார்த்துவிட்டு எனக்கு அறிவுரைகூறவும்

    நன்றி பிறகு சந்திக்கிறேன் ஆனால் நாள்தோறும் தொடர்கிறேன், என் மரியாதைக்குரிய குருவை

    ReplyDelete
  3. சரியாக சொன்னீர்கள். பயத்தினால் அடங்குவது ஒரு புறம் இருக்கட்டும், நாம் மனதை அடக்குவது என்பது தியானத்தினால் மட்டுமே அதுவும் நாட்பட்ட தொடர்ந்த தியானத்தினால் மட்டுமே சாத்தியம், அனுபவத்துடன் சொல்கிறேன். விட முயற்சி இருந்தால் மன கிதிரையின் லகான் நம் கையில்,

    ReplyDelete
  4. இரண்டு பகுதிகளையும் வாசித்தேன். interesting..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)