"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, August 5, 2009

மனிதருள் வேறுபாடு ஏன்?

மனிதருள் வேறுபாடு

கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.

ஞானக் களஞ்சியம் - 177



ரசாயன அமைப்பும் மாற்றமும்

கருஅமைப்பு, உணவுவகை, எண்ணம், செய்கை,
ககனத்தில் கோள்கள் நிலை, சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல்-எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும், மாற்றும், தரமொக்க இன்பதுன்பம்,
தகுந்த அளவாம். இதிலோர் சக்திமீறி
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறி
பின்னும் அதிகரித்துவிட மரணம் ஆகும்


ஞானக் களஞ்சியம் - 816

வேதாத்திரி மகான் அவர்களின் பாடல்கள் நம் சிந்தனைக்கு:

வாழ்த்துக்கள்

3 comments:

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் அவர்களே

    ReplyDelete
  2. நல்ல பதிவு .. நன்றி :-))

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)