"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, May 27, 2011

படித்ததில் பிடித்தது 27/05/2011

செட்டிநாட்டு மண்ணில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பாடல் ஒன்று படித்ததில் பிடித்ததாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.....


நல் ஆவின் பால்முழுதும் கன்றுக்கில்லை
நறுமலரின் மணம் முழுதும் சோலைக்கில்லை
நெல்லாகும் கதிர் முழுதும் நிலத்துக்கில்லை
நிறைகின்ற நீர் முழுதும் குளத்துக்கில்லை
பழுக்கின்ற கனிமுழுதும் மரத்திற்கில்லை
பண்நரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை
எல்லாமே பிறர்க்கு(உ)ழைக்கக் காணுகிறேன்
என்வாழ்வும் பிறர்க்கு(உ)ழைக்க வேண்டும் வேண்டும்!
                                                        --வ.சுப.மாணிக்கனார்






நன்றி:கவனகர் முழக்கம் மாத இதழ். மே 2011

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

3 comments:

  1. அரசிளங்குமரி படத்தில் வரும் காடு வேலேன்சென்ன மச்சா நக்கு கையும் காலுந்த்தான் மிச்சம் என்ற பாடலும் இதே போல சிந்தனையை தூண்டக்கூடிய பாடல்தான் கொஞ்சம் பட்டுக்கோட்டையார் பக்கமும் வாருங்கள் எப்படியோ உங்கள் மூலம் நல்லதொரு கவிஞரின் அறிமுகம் இன்று எனக்கு

    ReplyDelete
  2. அருமையான பாடல்.சுயநலமே வாழ்க்கையாகிப்போன உலகில் இதெல்லாம் படிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)