"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, February 27, 2009

இதுதான் அதிர்ஷ்டம் என்பதோ?

பனியன் தயாரிக்கும் சிறிய தொழில்சாலையில் நடந்த சம்பவம் இது.

பெரிய எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் சப் காண்டிராக்ட் அடிப்படையில் ஆர்டர் எடுத்து், முழு பனியனையும் தயார் செய்து, தரக் கட்டுப்பாடுகளை நிறைவு செய்து, தவறு ஏற்பட்டால் முழு இழப்பையும் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது
பனியனில் ப்ரிண்டிங் அடிக்க, பெரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வமான
பிரிண்டிங் நிறுவனத்தில் தொடர்பு கொண்டேன். அந்த
ப்ரிண்டிங் நிறுவனத்தின் பொறுப்பு, எக்ஸ்போர்ட் நிறுவனம் தரும் பல்வேறு டிசைன்களை தயாரித்து, கலர் மற்றும் இதர தரக்கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்து, மாதிரி பனியனில் பிரிண்ட் அடித்து தர வேண்டும்.
பிறகு பையர் அப்ரூவல் கிடைத்ததும், மொத்த ஆர்டரையும் அதே தரத்துடன் மாறாமல், கலர் உட்பட ப்ரிண்ட் அடிக்க வேண்டும்.

இதில் பையரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, பலமுறை ப்ரிண்ட் அடித்து அனுப்பி, எது தேர்வானதோ, அதை மொத்த ஆர்டருக்கும் அடிக்க வேண்டும்.
ஆக அந்த பனியனின் டிசைனின் முழுவிவரமும் எக்ஸ்போர்ட் நிறுவனத்திற்க்கும், ப்ரிண்டிங் நிறுவனத்திற்கும் மட்டுமே எளிதாக விளங்கும்.

நாங்கள் எங்களின் பனியன் பிரிண்டிங் டிசைனை மாதிரிக்காக அளித்து
கலர் விவரங்களை எக்ஸ்போர்ட் நிறுவன அதிகாரபூர்வ நபரிடம் தொடர்பு
கொண்டு பெற்றுக்கொள்ளுங்கள். இது எல்லா ஆர்டருக்கும் பொதுவான விதியாக வலியுறுத்தி இருக்கிறோம்

ஆனால் கலர் மாற்றி அடித்து கொடுத்தார். ரூபாய் 500 இழப்பு எங்களுக்கு.
பரவாயில்லை.மீண்டும் அடிக்க வேண்டும் என்று போனில் பிரிண்டிங் முதலாளியை அழைத்து பொறுமையாக "தயவு செய்து முறையான தகவல்களை எழுத்து மூலமாக பெற்று பிரிண்ட் அடியுங்கள் இழப்பு இருவருக்கும்தானே?காலமும் உழைப்பும் வீணாகப் போகிறதே"
என்று சொன்னேன்.
அவர் சொன்ன பதில். அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்.
நீங்கள் வேறு இடத்தில் ப்ரிண்ட் அடித்துக் கொள்ளுங்கள்
.

ஆச்சரியப்பட்டேன். இவருக்கெல்லாம் எப்படி தொழில் நடக்கிறது? இதுதான் அதிர்ஷ்டம் என்பதோ?

2 comments:

  1. அதிர்ஷ்டம் எத்தனை நாட்களுக்கு ஒர்க்கவுட் ஆகும்... ????@#$#$^&%^&$%%@#$!@!@#

    ReplyDelete
  2. அன்பின் சிவசு - தொழிலில் இதெல்லாம் சகஜம் - சொல்லும் போது அவர் என்ன மன நிலையில் இருந்தாரோ - விட்டுத்தள்ளுங்கள்

    தொழில் நல்ல முறையில் நடக்க ஒரு நிகழ்வு மட்டும் தடையாக இருக்காது

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)