"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, March 23, 2009

டென்சன் இல்லாமல் வாழ.....

மன இறுக்கம் (TENSION) இல்லாமல் வாழ வழி என்ன?


உலகில் நல்ல மணமுள்ள பொருள்களும் உண்டு; கெட்ட நாற்றமடிக்கும், அழுகிய பொருள்களும் உண்டு.

அதுபோல் மனதினுள் வரும், ஏற்படும் எண்ணங்களுள் ஊக்கமும் இன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு. AFFECTIONATE THOUGHTS. பலவீனமும் துன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு INFECTIONATE THOUGHTS.

வீட்டினுள் செத்த எலி நாற்றமடிக்கிறது என்றால், அதை நாலுபேரிடம் காட்டிப் புலம்புவதாலோ, நினைத்து நினைத்து வருத்தப்படுவதாலோ, அதன்மீது வாசமுள்ள ‘செண்ட்’ அடிப்பதாலோ நாற்றம் போகாது; சிக்கல் போகாது. எலியை தூக்கிப் போட்டு விட்டு, இடத்தைக் கழுவிவிட்டால் தானாக நாற்றம் போய்விடும். இதுதான் சரியான வழி.

அதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்.

நன்றி. கவனகர் முழக்கம்.மே-2002

Saturday, March 21, 2009

கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

தினத்தந்தி--கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா

படித்துப் பாருங்கள். படம் வரைந்தபோது அவரின் மனோநிலையை உணர முடிகிறதா என்று பாருங்கள்..

கடமையை, செயலை எப்படி செய்யவேண்டுமோ அப்படி முழுஈடுபாட்டோடு செய்தார்.

எதிர்பாராமல் செய்ததற்கு கிடைத்த பலனையும் பாருங்கள்.கிடைத்த பின்னும் அதே மனநிலையில் இருப்பதையும் பாருங்கள்.

இதுதான் கீதை சொல்வது.

ஓவியருக்கு பணம் கொடுத்தவரின் மனநிலையையும் உணருங்கள். அவர் இப்போதுதான்
செயலை செய்திருக்கிறார், நிச்சயம் பலன் கிடைக்கும்.

மனம் மட்டும் தரமும்,தகுதியும் ஆனால் வாழ்வில் கிடைக்கும் பலன்கள் அதிசயத்தக்கது.

மனதை மேம்படுத்துவோம், பாரம் குறைந்து பலன் அடைவோம்