"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, March 19, 2009

நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே

நமக்கு தெரிந்த விசயந்தான்,

0,1,2,3,4,5,6,7,8.............+ + + +
சைபருக்கு அடுத்த மதிப்பு கூடிக்கொண்டே போகும்

..........-5,-4,-3,-2,-1,0
சைபருக்கு முன்மதிப்பு குறைந்து கொண்டே போகும்.

சரி ஒரு சின்ன விளையாட்டு

-5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5 இதுதான் எண்வரிசை, நிரந்தர அமைப்பு, உண்மையானது.

மேலே சைபர் இல்லாமல் பத்து எண்கள் இருக்கிறாதா? உங்களை பொறுத்தவரை இதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லையே?

சரி நான் தான் சைபர், இப்ப நான் கடைசியில் வந்து நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை -10,-9,-8,-7,-6,-5,-4,-3,-2,-1,0.

சரி மீண்டும் நடுவில் நிற்காமல் முதலில் சென்று நின்று கொள்கிறேன்.
எண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை 0,1,2,3,4,5,6,7,8,9,10

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்வரிசை, மாற்றமுடியாத உண்மை. சத்தியம்.

உங்களின் 0 வை நான் நிற்கும் இடத்தைப் பொறுத்து நான் எப்படி மதிக்கிறேன்,பார்க்கிறேன் தெரியுமா? முதலில் நிற்பதால் 5 ஆகவும், கடைசியில் நிற்பதால் மைனஸ் -5 ஆகவும் பார்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை இடம் மாற மாற மதிப்பும் கூடியோ, குறைந்தோ போகும்., உண்மையில் மாறுவதில்லை.

பல சமயங்களில், வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும், எழுத்திலும்,நடப்பவற்றை இப்படி மாறி நின்று நாம் பார்ப்பதால்தான் பிரச்சனைகளே உருவாகிறது. ஜீரோவாக நின்று பார்த்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது புரியும்.


புரியலை இல்லையா.....

சரி இந்தப் பதிவு

3 மிகமிக நல்லபதிவு
2 மிக நல்லபதிவு
1 நல்லபதிவு
0 பதிவு 0
-1 மொக்கை
-2 படுமொக்கை
-3 சூரமொக்கை

இதில் ஏதோஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.

உண்மையில் இந்த பதிவு, ஒரு பதிவு அவ்வளவுதான். ஜீரோ . இதுதான் உண்மை

ஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாத் தோன்றுகிறது. இது தவறுமல்ல, அதே சமயம் உண்மையும் அல்ல.


இதே மாதிரி எல்லாபிரச்சினைகளையும் அணுகி பாருங்கள், அதனுடைய எல்லா கோணங்களும் தெரியும், சாதக பாதகங்கள் புரியும். சரியான படி முடிவெடுக்கலாம்

நான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், பலன் கிடைக்கிறது. நீங்களும் முயற்சித்து பார்த்து எந்த பலன் கிடைத்தாலும் பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டுள்ளது தவறாக இருந்தால் அதை புரிந்து கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்

Tuesday, March 17, 2009

கடமையை செய்....... பலனை அனுபவிக்காதே

பதிவுலக நண்பர் கோவியாரின் தகவலின் பேரில் தோழர் சூர்யன் அவர்களின்
"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்”
பதிவைப் படித்ததால் பதிலுக்கு இந்த பதிவு.

நமக்கு எளிமையாகத்தான் யோசிக்க வரும்.

நாலு வர்ணங்களும் ஆதியில் முழுக்க முழுக்க தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கி, குறிப்பிடப்பட்டது. இந்த தொழில் செய்வோர் இந்த வர்ணத்தினர் என நிர்வாக வசதிக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது.

ஆனால் காலப்போக்கில், பின்னர் வந்த மக்கள் கூட்டம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக, வர்ணமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றிவிட்டது. அதையே நாமும் பிடித்துக்கொண்டு இருக்காமல், சாதி மத இன வேறுபாடுகள் இன்றி, மனிதனை மனிதனாகவே மதித்து அவனுடைய இன்பத்திற்கு உதவியும், துன்பத்தை நீக்கவும் நம்மால் இயன்ற அளவு உதவி செயல்பட வேண்டும் என்பதே என் முந்தய இரு பதிவுகளின் நோக்கம்.

கீதையின் கருத்துக்களின் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. கீதையை புரிந்து கொள்வதில் தவறு இருக்கலாம். அது படிப்பவரின் மனோநிலையைப் பொறுத்தது.

மாற்று மதத்தினரை, சாதியினரை இழித்தும், பழித்தும் பேசுவதால் என்னபலன்? அவர்களின் வெறுப்பை, பதிலடியை ஏன் நாம் சம்பாதிக்க வேண்டும்?இரு தரப்பினருக்கும் என்ன கிடைக்கப்போகிறது? இது அவசியமே இல்லை.

விசயத்திற்கு வருகிறேன்.

\\யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.\\-- இது சூரியனின் கருத்து.

கடமையை செய், பலனை எதிர்பாராதே என்றுதான் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே இக்காலத்திற்கேற்றவாறு நான் புரிந்துகொண்டவாறு சொல்லி இருக்கிறேன்.

இதில் கடமையை செய், பலனை அனுபவிக்காதே என்றா குறிப்பிட்டு இருக்கிறோம்? நண்பரின் பதிவில் இந்த தொனிதான் இருக்கிறது.

ஒன்றை எதிர்பாராமல் இருப்பது------ஒன்றை அனுபவிக்காமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது நண்பரே...

எதை செய்தாலும் அதற்கு நிச்சயம் விளைவு உண்டு. அதை அனுபவித்துதான் ஆக வேண்டும். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. உதாரணமாக என் முந்தய பதிவுக்கு பலனாக உங்கள் பதிவை நான் அனுபவிக்கிறேன், அதேபோல் தங்களின் பதிவுக்கு பலனாக என் பதிவை தாங்கள் அனுபவிக்கிறீர்கள்.

ஆனால் எதிர்பாராமல் இருப்பது என்பது, என் முந்தய பதிவை எழுதியபோது தமிழ் மணம் மகுடத்தில் இடம்பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து எழுதுவில்லை. விளக்கத்தை தெரிவிப்பதை என் கடமையாகவே செய்தேன்.

ஆனால் நடந்தது என்ன? தமிழ்மணம் மகுடத்தில் வாசகர் பரிந்துரையாக இரு நாட்களாக இடம் பிடித்துவிட்டது. இதுதான் எதிர்பாராமல் எழுதியதன் பலன். புரிகிறதா நண்பரே. இத்தனைக்கும் அடியேன் புதிய பதிவர்தான்.

வலையுலக நண்பர்களுக்கு நன்றிகள்.பதிவரைப் பார்க்காமல் பதிவின் உள்ளடக்கத்தை கவனித்து பாராட்டியதற்க்கு.

சாதரணமாக எதிர்பார்த்தால் சில பின்னூட்டங்களும், சற்று அதிக எண்ணிக்கையில் பதிவர் வருகையுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்த பலனோ மிகப் பெரியது.

’கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்பதற்கு, பலனை எதிர்பார்க்காமல் சரியானபடி செயல்பட்டால், கிடைக்கவேண்டிய பலனைவிட அதிகமாக கிடைக்கும் என்பதற்க்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

எதிலும் சல்லடைபோல் நல்லதை விட்டு அல்லதைப் பிடிக்காதீர்கள்.

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்